இராமர் அசைவம் உண்பவரா? அயோத்தி கோவில் தலைமை பூசாரி கடும் கண்டனம்!
Jul 24, 2025, 08:00 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

இராமர் அசைவம் உண்பவரா? அயோத்தி கோவில் தலைமை பூசாரி கடும் கண்டனம்!

Web Desk by Web Desk
Jan 4, 2024, 04:47 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இராமர் வனவாசத்தின்போது அசைவ உணவு சாப்பிட்டார் என்று தேசியவாதக் காங்கிரஸ் தலைவர் கூறியதற்கு, அயோத்தி கோவில் தலைமை பூசாரி ஆச்சார்யா சத்யேந்திர தாஸ் கடும் கண்டனம் தெரிவித்திருக்கிறார்.

அயோத்தியில் 1,800 கோடி ரூபாய் செலவில் பிரம்மாண்டமாக இராமர் கோவில் கட்டப்பட்டு வருகிறது. இக்கோவில் கும்பாபிஷேகம் ஜனவரி 22-ம் விமரிசையாக நடைபெறவுள்ளது. இந்த சூழலில், இராமரைப் பற்றியும், இராமர் கோவில் பற்றியும் சர்ச்சைகள் றெக்கை கட்டி வருகின்றன.

அந்த வகையில், இராமர் அசைவம் சாப்பிட்டார் என்று எதிர்கட்சித் தலைவர் ஒருவர் கூற, பரபரப்பு தொற்றிக் கொண்டிருக்கிறது. மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்தவர் ஜிதேந்திர அவாத். சரத் பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான இவர், ஷீரடியில் நடந்த நிகழ்ச்சியில் பேசுகையில், “இராமர் பலருக்கும் பொதுவானவர்.

பெரும்பான்மை மக்களால் கொண்டாடப்படுபவர். அவர் நம்மை போலவே உணவுப் பழக்கம் கொண்டவர். ராமர் சைவ உணவுகளை உண்பவர் அல்ல. அவர் அசைவம் உண்பவர். அவரை அடையாளம் காட்டி அனைவரையும் சைவ உணவை உண்ண வைக்க முயற்சிக்கின்றனர்.

இராமர் 14 ஆண்டு காலம் காட்டில்தான் வாழ்ந்தார். இந்த சமயத்தில் அவர் சைவ உணவைத் தேடி அலைய முடியுமா? இது சரியா, தவறா என்பதல்ல. இது பொதுமக்களுக்கான கேள்வியாக தொடுக்கிறேன்” என்று கூறியிருந்தார்.

மேலும், “யார் என்ன சொன்னாலும் கவலை இல்லை. மகாத்மா காந்தி மற்றும் நேரு ஆகியோரால்தான் நாம் சுதந்திரம் பெற்றோம் என்பது உண்மை. இந்தியாவுக்கு சுதந்திரம் வாங்கிக் கொடுத்த மகாத்மா காந்தி ஓ.பி.சி. என்பதால் அவர்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை என்பதுதான் உண்மை. காந்தியின் படுகொலைக்கு ஜாதிவெறிதான் உண்மையான காரணம்” என்றும் கூறினார்.

இவரது பேச்சு சமூக வலைத்தளங்களில் வைரலாகப் பரவியது. இதையடுத்து, ஜிதேந்திரா பேச்சை கண்டித்து மும்பையில் இந்து அமைப்புகள் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தின. மேலும், ஜிதேந்திரா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பா.ஜ.க.வினர் போலீஸில் புகார் அளித்திருக்கிறார்கள்.

இந்த நிலையில், அயோத்தி இராமர் கோவிலின் தலைமைப் பூசாரி ஆச்சார்யா சத்யேந்திர தாஸ், ஜிதேந்திர அவாத்தின் பேச்சுக்கு கடும் கண்டனம் தெரிவித்திருக்கிறார். இதுகுறித்துப் பேசிய அவர், “ஜிதேந்திர அவாத் கூறுவது முற்றிலும் தவறானது.

இராமர் அசைவ உணவு சாப்பிடவில்லை; அப்படி சாப்பிட்டதாக எந்த சாஸ்திரங்களிலும் குறிப்பிடப்படவில்லை. இராமர் வனவாசத்தில் பழங்களை மட்டுமே சாப்பிட்டார் என்றுதான் குறிப்பிடப்பட்டிருக்கிறது. எங்கள் கடவுள் இராமர் எப்போதும் சைவ உணவு சாப்பிடுபவர். இராமரை அவமதிக்கும் வகையில் ஜிதேந்திர பேசுகிறார்” என்று கூறியிருக்கிறார்.

இதனிடையே, ஜிதேந்திர அவாத் கூறியது அவரது தனிப்பட்ட கருத்து என்று தேசியவாத காங்கிரஸ் கட்சி நழுவிக் கொண்டது. இந்த சூழலில், “எனது பேச்சு யாருடைய மனதையும் புண்படுத்தி இருந்தால் மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறேன்” என்று ஜிதேந்திர அவாத் கூறியிருக்கிறார்.

Tags: Jitendra AwhadNCP LeaderRamar
ShareTweetSendShare
Previous Post

ரூ.802 கோடியில் இராணுவத் தளவாடங்கள் கொள்முதல் செய்ய ஒப்பந்தம்! – பாதுகாப்பு அமைச்சகம்

Next Post

சென்னையில் கொரோனா பாதிப்பால் ஒருவர் உயிரிழப்பு!

Related News

பட்டீஸ்வரர் கோயிலில் நடை அடைக்கப்பட்ட பின் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்ட விவகாரம் – பணியாளர்கள் இருவர் பணியிடை நீக்கம்!

பிரதமர் வருகையை முன்னிட்டு கங்கை கொண்ட சோழபுரத்தில் ஹெலிபேட் தயார் செய்யும் பணி தீவிரம்!

திமுக அமைச்சர்கள், எம்எல்ஏக்களை விரட்டி அடிக்கும் பொதுமக்கள் – ஹெச்.ராஜா

கோயில் சொத்துக்களை மீட்க வேண்டும் என்பதே பாஜகவின் முதன்மை நோக்கம் – அண்ணாமலை

கிட்னி திருட்டில் தொடர்புடைய தனியார் மருத்துவமனை திமுக எம்.எல்.ஏவுக்கு சொந்தமானது – இபிஎஸ் குற்றச்சாட்டு!

சிறுநீரக அறுவை சிகிச்சை செய்ய இரு மருத்துவமனைகளுக்கு இடைக்கால தடை!

Load More

அண்மைச் செய்திகள்

திருவள்ளூர் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு – ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தும் காவல்துறை!

அஜித்குமார் கொலை வழக்கு – சிசிடிவி காட்சி தரவுகள் சேகரிப்பு!

இங்கிலாந்தில் பிரதமர் மோடி – உற்சாக வரவேற்பு அளித்த இந்திய வம்சாவளியினர்!

எதிர்கால போர் AI போர் : வெற்றிக்கு அடித்தளம் அமைக்கும் இந்தியா!

ஐ.நா. அவையில் சீண்டிய பாகிஸ்தான் – மூக்கை உடைத்த இந்தியா!

உடல் எடையை குறைக்கும் மருந்து : அதிகரிக்கும் டிமாண்ட் உற்பத்தி தளமாகும் இந்தியா!

ஏவுகணைத் திட்டம் டமால் : மீண்டும் மண்ணை கவ்விய பாகிஸ்தானின் ஷாஹீன்-3!

வலிமையான பாஸ்போர்ட் பட்டியல் : உலகளவில் 77வது இடத்திற்கு இந்தியா முன்னேற்றம்!

இந்திய ராணுவத்திற்கு புது வரவு : அடித்து நொறுக்கும் அப்பாச்சி ஹெலிகாப்டர்!

கொரோனா பணியில் உயிரிழப்பு : மருத்துவர் குடும்பத்தை கைவிட்ட தமிழக அரசு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies