வெற்றி குறித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்திய ரோகித்!
Jan 14, 2026, 07:01 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

வெற்றி குறித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்திய ரோகித்!

Murugesan M by Murugesan M
Jan 5, 2024, 12:12 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

முதல் இன்னிங்ஸில் 100 ரன்களுக்கு மேல் முன்னிலை பெற நினைத்தோம். ஆனால் கடைசி ஆறு விக்கெட் இழந்த விதம் நிச்சயம் வருத்தத்தை கொடுத்தது – ரோகித் சர்மா !

இந்தியா – தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் தொடர் நேற்று முடிவடைந்தது. இந்த தொடரின் முதல் போட்டியில் தென் ஆப்பிரிக்கா அணி வெற்றி பெற்ற நிலையில் இரண்டாவது போட்டியில் இந்தியா 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இதனால் இரண்டு அணிகளுக்கும் கோப்பை சமமாக கொடுக்கப்பட்டது. இரண்டாவது போட்டியின் முதல் நாளில் 23 விக்கெட்கள் வீழ்ந்த நிலையில் இரண்டாவது நாளில் 10 விக்கெட்கள் வீழ்ந்தது. இந்தப் போட்டியை பொறுத்தவரை பௌலர்களின் பங்கு அதிகமாக இருந்தது.

இந்நிலையில் இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா போட்டியின் வெற்றியை குறித்து பேசியுள்ளார். இதுகுறித்து அவர், “இந்த வெற்றியை நாங்கள் மிகப்பெரிய வெற்றியாக கருதுகிறோம்.

முதல் டெஸ்டில் நாங்கள் தோல்வி அடைந்தும் அதிலிருந்து நிறைய பாடங்களை கற்றுக் கொண்டோம். தற்போது இரண்டாவது டெஸ்டில் எங்களுடைய பவுலர்கள் பிரமாதமாக செயல்பட்டார்கள். எங்களுடைய வீரர்கள் பல பிளான்களை போட்டு அதற்கான பரிசுகளை தற்போது பெற்றிருக்கிறார்கள்.

எங்களை நம்பி நாங்கள் விளையாடினோம். முதல் இன்னிங்ஸில் 100 ரன்களுக்கு மேல் முன்னிலை பெற நினைத்தோம். ஆனால் கடைசி ஆறு விக்கெட் இழந்த விதம் நிச்சயம் வருத்தத்தை கொடுத்தது. இந்தப் போட்டி மிகவும் குறுகிய போட்டியாக தான் இருக்கும் என நினைத்தோம். இதனால் ஒவ்வொரு இன்னிங்சும் மிகவும் முக்கியம் என்பதை உணர்ந்தோம். இந்தப் போட்டியில் முன்னிலை பெறுவது என்பது மிகவும் முக்கியமாக இருந்தது.

சிராஜ் இந்த ஆட்டத்தின் முதல் இன்னிங்ஸில் செயல்பட்ட விதம் ஸ்பெஷலானது. இதை நாம் தினம் தினம் பார்க்க முடியாது. நாங்கள் இந்தப் போட்டியை சிம்பிளாக தான் எதிர்கொண்டோம். ஆடுகளமும் எங்களுக்கு நன்றாக ஒத்துழைத்தது. எங்களுடைய பவுலர்கள் சிராஜ், பும்ரா, முகேஷ் மற்றும் பிரசித் கிருஷ்ணா என அனைவருக்கும் பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

தென்னாப்பிரிக்காவுக்கு யார் வந்தாலும் இது கடும் சவால்களை கொடுக்கும் ஆடுகளமாக இருக்கிறது. இந்தியாவுக்கு வெளியே தற்போது நாங்கள் நல்ல கிரிக்கெட்டை விளையாடி வருகிறோம். இதனை நினைக்கும்போது எனக்கு பெருமையாக இருக்கிறது. இந்த தொடரை நாங்கள் வென்று இருக்க முயற்சி செய்தோம். ஆனால் தென்னாப்பிரிக்கா உண்மையிலேயே சிறந்த அணி.

அவர்கள் கடும் சவால்களை எங்களுக்கு கொடுத்தார்கள். ஒரு நல்ல அணியை எதிர்கொண்டு தொடரை சமன் செய்தது திருப்தி அளிக்கிறது. டீன் ஏல்கார் தென்னாபிரிக்க அணியின் மிக முக்கியமான வீரராக இருந்தார். அவருடைய ஓய்வு வாழ்க்கை சிறந்ததாக அமைய நான் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்” என்று கூறினார்.

Tags: rohith sharmaindia vs southafricatest cricket
ShareTweetSendShare
Previous Post

நேரு செய்த தவறுகள்: ப்ரியம் காந்தி மோடி புத்தகம்!

Next Post

மிசோரமில் திடீர் நிலநடுக்கம் – மக்கள் அச்சம்!

Related News

முக்கிய சக்தியாக உருவெடுக்கும் ஜமாத்-இ-இஸ்லாமி – வங்கதேசத்தில் ஆட்சியை பிடிக்கத் துடிக்கும் இஸ்லாமிய குழுக்கள்

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

Load More

அண்மைச் செய்திகள்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

சென்னையில் பிரதமர் மாநாடு – இடம் தேர்வு பணியில் பாஜக மாநிலத்தலைவர்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies