லட்சத்தீவில் பிரதமர் மோடி "கூல்": வாக்கிங், ஸ்விம்மிங் செய்து அசத்தல்!
Jun 6, 2025, 05:13 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

லட்சத்தீவில் பிரதமர் மோடி “கூல்”: வாக்கிங், ஸ்விம்மிங் செய்து அசத்தல்!

Web Desk by Web Desk
Jan 5, 2024, 01:07 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

அரசு முறைப் பயணமாக லட்சத்தீவு சென்ற பிரதமர் மோடி, அங்குள்ள கடற்கரையில் ஹாயாக ‘வாக்கிங்’ சென்றது, கடலில் ஸ்விம்மிங் செய்தது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

பாரதப் பிரதமர் நரேந்திர மோடி, கடந்த 2 மற்றும் 3-ம் தேதிகளில் 2 நாள் அரசு முறைப் பயணமாக திருச்சி, கேரளா மற்றும் லட்சத்தீவுகளுக்கு சென்று வந்தார். குறிப்பாக, 2-ம் தேதி திருச்சி நிகழ்ச்சியை முடித்துக் கொண்டு லட்சத்தீவு சென்றவர், இரவு அங்கேயே தங்கி மறுநாள் காலை 1,156 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைத்தார்.

அப்போது, லட்சத்தீவு கடற்கரையில் காலையில் பிரதமர் வாக்கிங் சென்றார். அதேபோல, கடலில் நீச்சல் அடித்து மகிழந்தார். இந்த சூழலில், தனது லட்சத்தீவு பயணம் குறித்த அனுபவங்களை பிரதமர் மோடி தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார்.

அதில், “சமீபத்தில் நான் லட்சத்தீவு சென்றிருந்தபோது அம்மக்களைச் சந்திக்கும் வாய்ப்புக் கிடைத்தது. அந்த தீவுகளின் பிரமிக்க வைக்கும் அழகையும், அந்த மக்களின் நம்பமுடியாத அரவணைப்பையும் கண்டு நான் இன்னும் பிரமிப்பில் இருக்கிறேன். அகத்தி, பங்காரம், கவரத்தி போன்ற பகுதி மக்களின் விருந்தோம்பலுக்கு நான் நன்றி கூறுகிறேன்.

லட்சத்தீவில் வளர்ச்சியை ஏற்படுத்தி அங்குள்ள மக்கள் வாழ்க்கையை மேம்படுத்துவதே எங்கள் நோக்கம். எதிர்காலத்திற்குத் தேவையான உள்கட்டமைப்பு, சிறந்த சுகாதாரம், அதிவேக இணையம் மற்றும் சுத்தமாகக் குடிநீர் ஆகியவற்றை உருவாக்க வேண்டும்.

அதேசமயம், உள்ளூர் கலாச்சாரத்தைப் பாதுகாத்துக் கொண்டாட வேண்டும் என்பதில் கவனமாக உள்ளோம். இதை மனதில் வைத்தே புதிய திட்டங்களைக் கொண்டு வந்துள்ளோம். அரசின் பல்வேறு திட்டங்களால் பயனடைந்தோரிடம் உரையாடினேன்.

எங்கள் முயற்சிகள் சிறந்த சுகாதாரம், மக்களுக்குத் தன்னம்பிக்கை, பெண்களுக்கு அதிகாரமளித்தல், விவசாயம் எனப் பல துறைகளில் வளர்ச்சிக்கு உதவுவதை நேரடியாகப் பார்ப்பது மகிழ்ச்சி தருகிறது. அங்கே நான் கேட்ட சம்பவங்கள் நெகிழ வைப்பதாக இருந்தது.

இயற்கை அழகுடன், லட்சத்தீவின் அமைதியும் மெய்சிலிர்க்க வைக்கிறது. 140 கோடி இந்தியர்களின் நலனுக்காக இன்னும் கடினமாக உழைக்க வேண்டும் என்பது குறித்துச் சிந்திக்க இது எனக்கு ஒரு சிறந்த வாய்ப்பை கொடுத்தது.

புதுப்புது சாகசங்களை விரும்புவோர் நிச்சயம் லட்சத்தீவுக்கு செல்ல வேண்டும். நான் அங்கிருந்தபோது ஸ்நோர்கெல்லிங் செய்தேன். அது மிகச் சிறந்த அனுபவத்தைக் கொடுத்தது. அழகிய கடற்கரைகளில் அந்த அதிகாலை நடைப்பயணங்கள் பேரின்ப தருணங்களாக இருந்தன.

லட்சத்தீவு என்பது வெறும் தீவுகளின் கூட்டமல்ல. அது மக்களின் பாரம்பரியம் மற்றும் அன்பிற்குச் சான்றாக இருக்கும் இடம். இது எப்போதும் நினைவில் நிற்கும் செழுமையான பயணமாக இருக்கும்” என்று தெரிவித்திருக்கிறார்.

Tags: LakshadweepMemoriesPM Modi
ShareTweetSendShare
Previous Post

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா மகளிர் டி20 இன்று தொடக்கம்!

Next Post

4 சனிக்கிழமைகளில் பள்ளிகளில் செயல்படும் என அறிவிப்பு!

Related News

இந்தியாவின் ‘PROJECT KUSHA’ : வான்வெளி பாதுகாப்பில் வல்லரசுகளை மிஞ்சுகிறது!

உலகின் முதல் சைவ நகரம்!

கொடூரமான வான் வேட்டைக்காரன் R-37M அதி நவீன ஏவுகணை : இந்தியாவுக்கு வழங்க ரஷ்யா முடிவு!

மதுரை வரும் அமித்ஷா – பதற்றத்தில் திமுக!

அரிய கனிமங்கள் ஏற்றுமதியை நிறுத்திய சீனா – உலக நாடுகள் அதிர்ச்சி!

விரைவில் 3ம் உலகப் போர்?  : நகரங்களை சாம்பலாக்கும் சாத்தான்-2 ஏவுகணையால் பீதி!

Load More

அண்மைச் செய்திகள்

ரேஷன் கடைகளில் புதிய நடைமுறை : அத்தியாவசிய பொருட்களை பெற முடியாமல் மக்கள் தவிப்பு!

அனுபவமற்ற ஓட்டுநர்களால் ஆபத்து : விபத்து அபாயத்தால் பயணிகள் அச்சம்!

குப்பைமேடான பள்ளப்பட்டி பூங்கா : மதுப்பிரியர்களின் கூடாரமாக மாறியதால் மக்கள் அதிர்ச்சி!

மத்திய அரசு கொண்டு வரும் திட்டங்களுக்கு எதிராக செயல்படுகிறது தமிழக அரசு : நாகேந்திரன் குற்றச்சாட்டு!

கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் பலி : கர்நாடக உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணை!

கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் வெறும் கண்காட்சிக்காக கட்டப்பட்டதா, முதல்வரே? : நயினார் நாகேந்திரன் கேள்வி!

இங்கிலாந்து இளவரசி டயானா பயன்படுத்திய பொருட்கள் ஏலம்!

உத்தரப் பிரதேசம் யமுனை நதியில் மூழ்கி 6 சிறுமிகள் உயிரிழப்பு!

ஆந்திரா : ஆட்டோ மீது கார் மோதி விபத்து – 4 பேர் பலி!

குஜராத் : முட்டை, இறைச்சி இல்லாத உலகின் முதல் சைவ நகரம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies