லட்சத்தீவில் பிரதமர் மோடி "கூல்": வாக்கிங், ஸ்விம்மிங் செய்து அசத்தல்!
Jul 23, 2025, 08:43 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

லட்சத்தீவில் பிரதமர் மோடி “கூல்”: வாக்கிங், ஸ்விம்மிங் செய்து அசத்தல்!

Web Desk by Web Desk
Jan 5, 2024, 01:07 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

அரசு முறைப் பயணமாக லட்சத்தீவு சென்ற பிரதமர் மோடி, அங்குள்ள கடற்கரையில் ஹாயாக ‘வாக்கிங்’ சென்றது, கடலில் ஸ்விம்மிங் செய்தது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

பாரதப் பிரதமர் நரேந்திர மோடி, கடந்த 2 மற்றும் 3-ம் தேதிகளில் 2 நாள் அரசு முறைப் பயணமாக திருச்சி, கேரளா மற்றும் லட்சத்தீவுகளுக்கு சென்று வந்தார். குறிப்பாக, 2-ம் தேதி திருச்சி நிகழ்ச்சியை முடித்துக் கொண்டு லட்சத்தீவு சென்றவர், இரவு அங்கேயே தங்கி மறுநாள் காலை 1,156 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைத்தார்.

அப்போது, லட்சத்தீவு கடற்கரையில் காலையில் பிரதமர் வாக்கிங் சென்றார். அதேபோல, கடலில் நீச்சல் அடித்து மகிழந்தார். இந்த சூழலில், தனது லட்சத்தீவு பயணம் குறித்த அனுபவங்களை பிரதமர் மோடி தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார்.

அதில், “சமீபத்தில் நான் லட்சத்தீவு சென்றிருந்தபோது அம்மக்களைச் சந்திக்கும் வாய்ப்புக் கிடைத்தது. அந்த தீவுகளின் பிரமிக்க வைக்கும் அழகையும், அந்த மக்களின் நம்பமுடியாத அரவணைப்பையும் கண்டு நான் இன்னும் பிரமிப்பில் இருக்கிறேன். அகத்தி, பங்காரம், கவரத்தி போன்ற பகுதி மக்களின் விருந்தோம்பலுக்கு நான் நன்றி கூறுகிறேன்.

லட்சத்தீவில் வளர்ச்சியை ஏற்படுத்தி அங்குள்ள மக்கள் வாழ்க்கையை மேம்படுத்துவதே எங்கள் நோக்கம். எதிர்காலத்திற்குத் தேவையான உள்கட்டமைப்பு, சிறந்த சுகாதாரம், அதிவேக இணையம் மற்றும் சுத்தமாகக் குடிநீர் ஆகியவற்றை உருவாக்க வேண்டும்.

அதேசமயம், உள்ளூர் கலாச்சாரத்தைப் பாதுகாத்துக் கொண்டாட வேண்டும் என்பதில் கவனமாக உள்ளோம். இதை மனதில் வைத்தே புதிய திட்டங்களைக் கொண்டு வந்துள்ளோம். அரசின் பல்வேறு திட்டங்களால் பயனடைந்தோரிடம் உரையாடினேன்.

எங்கள் முயற்சிகள் சிறந்த சுகாதாரம், மக்களுக்குத் தன்னம்பிக்கை, பெண்களுக்கு அதிகாரமளித்தல், விவசாயம் எனப் பல துறைகளில் வளர்ச்சிக்கு உதவுவதை நேரடியாகப் பார்ப்பது மகிழ்ச்சி தருகிறது. அங்கே நான் கேட்ட சம்பவங்கள் நெகிழ வைப்பதாக இருந்தது.

இயற்கை அழகுடன், லட்சத்தீவின் அமைதியும் மெய்சிலிர்க்க வைக்கிறது. 140 கோடி இந்தியர்களின் நலனுக்காக இன்னும் கடினமாக உழைக்க வேண்டும் என்பது குறித்துச் சிந்திக்க இது எனக்கு ஒரு சிறந்த வாய்ப்பை கொடுத்தது.

புதுப்புது சாகசங்களை விரும்புவோர் நிச்சயம் லட்சத்தீவுக்கு செல்ல வேண்டும். நான் அங்கிருந்தபோது ஸ்நோர்கெல்லிங் செய்தேன். அது மிகச் சிறந்த அனுபவத்தைக் கொடுத்தது. அழகிய கடற்கரைகளில் அந்த அதிகாலை நடைப்பயணங்கள் பேரின்ப தருணங்களாக இருந்தன.

லட்சத்தீவு என்பது வெறும் தீவுகளின் கூட்டமல்ல. அது மக்களின் பாரம்பரியம் மற்றும் அன்பிற்குச் சான்றாக இருக்கும் இடம். இது எப்போதும் நினைவில் நிற்கும் செழுமையான பயணமாக இருக்கும்” என்று தெரிவித்திருக்கிறார்.

Tags: LakshadweepMemoriesPM Modi
ShareTweetSendShare
Previous Post

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா மகளிர் டி20 இன்று தொடக்கம்!

Next Post

4 சனிக்கிழமைகளில் பள்ளிகளில் செயல்படும் என அறிவிப்பு!

Related News

நான்கு நாள் அரசுமுறைப் பயணம் – பிரிட்டன், மலாத்தீவு நாடுகளுக்கு செல்கிறார் பிரதமர் மோடி!

சாலை வசதி இல்லாததால் உயிரிழந்தவரின் உடலை தொட்டில் கட்டி தூக்கி செல்லும் அவலம் – அண்ணாமலை கண்டனம்!

50 மாத கால ஆட்சியில் விவசாயிகளுக்கு திமுக அரசு செய்தது என்ன? இபிஎஸ் கேள்வி!

இடமாற்றத்தில் மகிழ்ச்சி இல்லை, நல்ல நினைவுகளுடன் செல்கிறேன் – நீதிபதி விவேக் குமார் சிங்

சிறுவன் கடத்தல் வழக்கு – விசாரணை முறையாக நடைபெறவில்லை என்றால் சிபிஐக்கு மாற்ற நேரிடும் என உயர் நீதிமன்றம் எச்சரிக்கை!

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு – அப்ரூவராக மாறுவதாக முன்னாள் காவல் ஆய்வாளர் மனுத்தாக்கல்!

Load More

அண்மைச் செய்திகள்

மழை காரணமாக தக்காளி விளைச்சல் பாதிப்பு – விலை உயர்வு!

ஆய்வுக்கு உரிய ஒத்துழைப்பு வழங்காத பட்டாசு ஆலைகளை தற்காலிகமாக மூடலாம் – தென்மண்டல பசுமை தீர்ப்பாயம்

விரிவாக்கம் செய்யப்பட்ட பிரதமர் பங்கேற்கும் தூத்துக்குடி விமான நிலைய திறப்பு விழா – பணிகள் தீவிரம்

100 நாள் வேலை திட்டம் – தமிழகத்தில் 3 ஆண்டுகளில் 19,000 போலி கணக்குகள் நீக்கம்!

அஜித்குமார் கொலை வழக்கு – தனியார் மருத்துவமனையில் சிபிஐ விசாரணை!

எதிர்கால போர் AI போர் : வெற்றிக்கு அடித்தளம் அமைக்கும் இந்தியா!

பாகிஸ்தான் அதிபராகும் அசிம் முனீர் ? : முஷாரப் பாணியில் ஆட்சி – இந்தியாவிற்கான சவால் என்ன?

அடுத்த குடியரசுத் துணைத்தலைவர் யார்? : தேர்தல் நடைமுறைகள் விரைவில் தொடங்கும் என எதிர்பார்ப்பு!

வங்கதேச விபத்தால் அச்சம் : கேள்விக்குறியான சீனாவின் F-7 போர் விமான பாதுகாப்பு!

முடிவுக்கு வருகிறது 60 ஆண்டு சகாப்தம் : விடைபெறுகிறது இந்தியாவின் போர்க்குதிரை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies