இராமர் கோவில் கும்பாபிஷேகம் : ராமாயண நாடகத்தின் சீதைக்கு அழைப்பு!
Jan 14, 2026, 11:39 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

இராமர் கோவில் கும்பாபிஷேகம் : ராமாயண நாடகத்தின் சீதைக்கு அழைப்பு!

Murugesan M by Murugesan M
Jan 5, 2024, 01:43 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

36 வருடங்களுக்கு முன்பு ராமாயண நாடகத்தில் சீதையாக நடித்த தீபிகா சிக்லியாவுக்கு அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேக விழாவிற்கான அழைப்பிதழ் வழங்கப்பட்டுள்ளது.

உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேக விழா ஜனவரி 22ஆம் தேதி நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை ஸ்ரீராம் ஜென்ம பூமி அறக்கட்டளை செய்து வருகிறது. அன்றைய தினம் நண்பகல் 12.45 மணியளவில் கர்ப்ப கிரகத்தில் மூலவரான குழந்தை ராமர் சிலை வைக்கப்படுகிறது.

இராமர் கோவில் கும்பாபிஷேக விழாவில் பங்கேற்கும் வகையில், நாட்டின் முக்கிய பிரமுகர்களுக்கும், அரசியல் தலைவர்களுக்கும் ஸ்ரீ ராம ஜென்ம பூமி தீர்த்த ஷேத்ர அறக்கட்டளை அழைப்பு விடுத்து வருகிறது.

அந்த வகையில் தற்போது சீதைக்கு அழைப்பு கொடுக்கப்பட்டுள்ளது. அதாவது இந்தியாவின் இதிகாசங்களில் ஒன்றான ராமாயணம் தொலைக்காட்சியில் கடந்த 1987 ஆம் ஆண்டு ஒளிபரப்பானது.

இந்த சீரியலில் ராமர் கேரக்டரில் அருண் கோவில் என்பவரும் சீதை கேரக்டரில் தீபிகா சிக்லியா என்பவரும் நடித்திருந்தனர். 1987 ஆம் ஆண்டு தொடங்கிய இந்த சீரியல் 1988 ஆம் ஆண்டு முடிந்தது, அதன் பிறகு சமீபத்தில் கொரோனா வைரஸ் ஊரடங்கின்போது மீண்டும் ஒளிபரப்பானது.

ராமாயண நாடகத்தில் சீதையாக நடித்த தீபிகா சிக்லியாவுக்கு அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேக விழாவிற்கு அழைப்பிதழ் வழங்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து பேசிய தீபிகா, ” அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேக விழாவிற்கு எனக்கு அழைப்பிதழ் வழங்கினர். இந்த விழாவில் பங்கேற்பது ஒரு வரலாற்று நிகழ்ச்சியாக இருக்கும். ராமாயண நாடகத்தில் சீதையாக நடித்தது எனது பாக்கியமாக நான் கருதுகிறேன்.

ராமாயணம் போன்ற ஒரு ஆன்மீக நாடகத்தில் ஒரு பகுதியாக இருப்பதற்குத் தெய்வீக அருள் வேண்டும். சீதை கதாபாத்திரத்தில் நடித்தவர்கள் என்று பார்த்தால், ஒரு சிலர் தான் நடித்திருக்கின்றனர், சீதையாக நடித்த நாங்கள் அனைவரும் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்” என்று கூறினார்.

மேலும் அவர், ” ஜனவரி 22 அன்றைய நாளை நாம் அனைவரும் தீபாவளியைப் போன்று கொண்டாடி நம் வீட்டிற்கு ராமரை அழைக்க வேண்டும். என்னைப் பொறுத்தவரையில் ஜனவரி 22 தான் தீபாவளி என்று கூறினார்.

Tags: ayodhya ramar temple functioninvitation
ShareTweetSendShare
Previous Post

கன்னியாகுமரியில் காதல் மனைவியை காரில் தரதரவென இழுந்து சென்ற கணவன்!

Next Post

அயோத்தி விமான நிலையத்திற்கு மகரிஷி வால்மீகி பெயர் சூட்ட மத்திய அமைச்சரவை ஒப்புதல்!

Related News

உலகமெங்கும் வாழும் தமிழ் மக்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து!

மத்திய அமைச்சர் எல். முருகன் இல்லத்தில் பொங்கல் விழா – பிரதமர் மோடி பங்கேற்பு!

மதுராந்தகத்தில் ஜன.23 ஆம் தேதி தேசிய ஜனநாயக கூட்டணி மாநாடு – மாநாட்டிற்கான பூமி பூஜையில் ஏராளமானோர் பங்கேற்பு!

தங்கம் விலை புதிய உச்சம்: சவரனுக்கு ரூ.880 உயர்வு

500 சதவீதி வரிவிதிப்பு அச்சம் – பின்னலாடை துறைக்கு சலுகை வழங்க கோரிக்கை!

முக்கிய சக்தியாக உருவெடுக்கும் ஜமாத்-இ-இஸ்லாமி – வங்கதேசத்தில் ஆட்சியை பிடிக்கத் துடிக்கும் இஸ்லாமிய குழுக்கள்

Load More

அண்மைச் செய்திகள்

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies