ஏ.ஐ. தொழில்நுட்பத்தை பயன்படுத்துங்கள்: டி.ஜி.பி.க்களுக்கு அமித்ஷா வலியுறுத்தல்!
Mar 15, 2026, 03:38 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஏ.ஐ. தொழில்நுட்பத்தை பயன்படுத்துங்கள்: டி.ஜி.பி.க்களுக்கு அமித்ஷா வலியுறுத்தல்!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Jan 6, 2024, 02:51 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பாதுகாப்பு சவால்களை எதிர்கொள்ள ஏ.ஐ. எனப்படும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை பயன்படுத்துங்கள் என்று டி.ஜி.பி.க்கள் மற்றும் ஐ.ஜி.க்கள் மாநாட்டில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வலியுறுத்தி இருக்கிறார்.

கடந்த 2014-ம் ஆண்டு பாரதப் பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்ற பிறகு, நாட்டின் பாதுகாப்பு தொடர்பான விஷயங்களில் அதிக ஆர்வம் காட்டி வருகிறார். இதன் காரணமாக, காவல்துறை டி.ஜி.பி.க்கள், ஐ.ஜி.க்கள் மாநாட்டுக்கு மிகுந்த முக்கியத்துவம் கொடுத்து வருகிறார்.

எனவே, பெரும்பாலும் டெல்லியில் நடைபெற்று வந்த இம்மாநாட்டை, நாட்டின் வெவ்வேறு மாநிலங்களில் நடத்த ஊக்குவித்து வருகிறார். அதோடு, மாநாட்டின் அனைத்து முக்கியமான அமா்வுகளிலும் தவறாமல் பங்கேற்கும் பிரதமர் மோடி, காவல்துறை இயக்குனர்கள் மற்றும் தலைவர்களின் கருத்துகளை கேட்டறிவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார்.

அந்த வகையில், டி.ஜி.பி.க்கள் மற்றும் ஐ.ஜி.க்களின் 58-வது மாநாடு ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் நேற்று தொடங்கியது. 3 நாட்கள் நடைபெறும் இம்மாநாட்டை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தொடங்கி வைத்தார். இம்மாநாட்டின் இறுதி 2 நாட்களான இன்றும், நாளையும் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொள்கிறார்.

இம்மாநாடு தொடர்பாக பிரதமர் அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், “டி.ஜி.பி.க்கள், ஐ.ஜி.க்கள் மாநாட்டில் இணையவழி குற்றங்கள், காவல்துறை தொழில்நுட்பம், சிறை சீர்திருத்தங்கள் உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்படும்.

மாநாட்டின் முக்கிய அம்சமாக புதிய குற்றவியல் சட்டங்களை அமல்படுத்துவதற்கான செயல்திட்டம் குறித்து ஆலோசிக்கப்படுகிறது.

மேலும், செயற்கை நுண்ணறிவு, டீப் ஃபேக் எனும் போலி சித்தரிப்புகளால் ஏற்படும் சவால்கள் மற்றும் அவற்றைக் கையாள்வதற்கான வழிமுறைகள் குறித்து விவாதிக்கப்பட்டு, பிரதமரிடம் கருத்துகள் மற்றும் யோசனைகள் பகிரப்படும்.

மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் பின்பற்றப்படும் சிறந்த நடைமுறைகள் ஒவ்வொரு கருப்பொருளின் கீழ் மாநாட்டில் முன்வைக்கப்படும். இதனால், மாநிலங்கள் பரஸ்பரம் கற்றுக்கொள்ளவும், சிறந்த நடைமுறைகளைப் பகிா்ந்து கொள்ளவும் முடியும்” என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

இம்மாநாட்டில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜீத் தோவால் மற்றும் உள்துறை இணையமைச்சர்கள், மத்திய அமைச்சரவை செயலாளர், மத்திய அரசின் மூத்த அதிகாரிகள், மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் டி.ஜி.பி.க்கள், ஐ.ஜி.க்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டிருக்கின்றனா்.

இம்மாநாட்டை தொடங்கி வைத்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசுகையில், “பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசின் கீழ், 2 முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டிருக்கின்றன. இதில் ஒன்று தேசிய கல்விக் கொள்கை; மற்றொன்று ஆங்கிலேயர் கால சட்டங்களுக்கு மாற்றாக 3 புதிய குற்றவியல் சட்டங்கள் இயற்றப்பட்டிருக்கின்றன.

புதிய குற்றவியல் சட்டங்கள் தண்டனை அளிப்பதைவிட, நீதியை வழங்குவதை முதன்மை நோக்கமாகக் கொண்டிருக்கிறது. இதன் வாயிலாக நாட்டின் குற்றவியல் நீதித்துறை நவீன மற்றும் அறிவியல் மாற்றத்துக்கு உட்படுத்தப்படுவது அவசியம்.

குறிப்பாக, நமது தரவுகளை ஒருங்கிணைத்து, செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, பாதுகாப்பு சவால்களை எதிர்கொள்ள வேண்டும். அதேபோல், போலீஸாருக்கு பயிற்சி அளிக்கும்போதே தொழில்நுட்பங்களை மேம்படுத்துவதிலும் கவனம் செலுத்த வேண்டும்” என்றார்.

Tags: DGPAmit shaRajastanIG conference
ShareTweetSendShare
Previous Post

பாஜகாவில் இணைந்த ஓய்வு பெற்ற காவல்துறை அதிகாரிகள்! – புதிய வியூகம் அமைத்த அண்ணாமலை!

Next Post

மெட்ரோ ரயில் தினசரி பயணிப்போர் எண்ணிக்கை 1 கோடியைத் தாண்டியுள்ளது! 

Related News

அரசு மருத்துவமனையில் கஞ்சா போதையில் கொலை முயற்சி! – பொதுமக்கள் அச்சம்!

சென்னையிலிருந்து லடாக் செல்லும் கார் பயணத்தில் பெண் ஒருவர் தனியாக கார் ஓட்டி செல்வது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

மாமுல் கேட்டு மளிகை கடையை அடித்து நொறுக்கும் பிரபல ரவுடி – வெளியான பகீர் சிசிடிவி

மாலி நாட்டில் தென்காசியை சேர்ந்த நபரை கடத்திய தீவிரவாதிகள்..பல்வேறு முயற்சியால் மீட்ட மத்திய அரசு – நேரில் போய் சந்தித்த அதிமுக எம்.எல்.ஏ

திமுக ஆட்சியில், யாருக்குமே சட்டத்தின் மீது பயமில்லை – அண்ணாமலை குற்றச்சாட்டு!

புதுச்சேரியில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் காங்கிரஸ் கட்சியனரை 1 மணி நேரமாக காக்க வைத்த திமுகவினர்!

Load More

அண்மைச் செய்திகள்

பெண் காவலருக்கு பாலியல் தொல்லை – காவல் அதிகாரி கைது!

குளறுபடி காரணமாக ஒத்திவைக்கப்பட்ட குரூப் 2, 2ஏ தேர்வுகள் தமிழகம் முழுவதும் இன்று நடைபெற்று வருகிறது.

ரேபிஸ் நோயால் நாயை போன்றே குரைத்த சிறுவன் – காண்போரை கலங்கச் செய்த சம்பவம்!

மாணவி படுகொலை – நீதிகேட்டு இரவிலும் மக்கள் சாலை மறியல்!

ஆப்கானிஸ்தானில் வான்வழித் தாக்குதல் நடத்திய பாகிஸ்தான் – இந்தியா கடும் கண்டனம்!

தொகுதி மக்களுக்கு நேரில் சென்று நன்றி தெரிவித்த அதிமுக எம்.பி தம்பிதுரை!

தேர்தல் நெருங்கும் நேரத்தில் மாற்றுக் கட்சியில் இருந்து அதிமுக-வில் இணைந்த 1000 பேர்!

குரு சாமி பள்ளம் விவகாரம்… அதிகாரிகளுடன் பொதுமக்கள் கடும் வாக்குவாதம்!

சபரிமலை ஐய்யப்பன் கோயிலில் பூஜை காலத்தின்போது விற்பனை செய்யப்பட்ட நெய்யில் லட்சக்கணக்கில் முறைகேடு!

தமிழகத்தில் நேற்று நடைபெற்ற தேசிய லோக் அதாலத்தில் ஒரு லட்சத்து 3 ஆயிரத்து 366 வழக்குகளுக்கு தீா்வு

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies