சத்தீஸ்கர் முன்னாள் முதல்வர் மீது அமலாக்கத்துறை வழக்கு: பா.ஜ.க. விமர்சனம்!
Jul 25, 2025, 08:31 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சத்தீஸ்கர் முன்னாள் முதல்வர் மீது அமலாக்கத்துறை வழக்கு: பா.ஜ.க. விமர்சனம்!

Web Desk by Web Desk
Jan 6, 2024, 05:03 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மகாதேவ் சூதாட்ட செயலி உரிமையாளரிடம் பணம் பெற்ற வழக்கில், அமலாக்கத்துறையின் 2-வது குற்றப்பத்திரிகையில் சத்தீஸ்கர் முன்னாள் முதல்வர் பூபேஷ் பாகலின் பெயரும் சேர்க்கப்பட்டிருக்கிறது. இதையடுத்து, காங்கிரஸ் கட்சியை பா.ஜ.க. கடுமையாக விமர்சனம் செய்திருக்கிறது.

இணையதளத்தில் மகாதேவ் சட்டா செயலி எனும் பெயரில் சூதாட்ட செயலி ஒன்று இருக்கிறது. இந்த செயலி சத்தீஸ்கர் மாநிலத்தின் பிலாய் பகுதியைச் சேர்ந்த சவுரப் சந்த்ரகர் மற்றும் ரவி உப்பல் ஆகியோருக்குச் சொந்தமானது.

இந்த செயலியில் ஏராளமானோர் பணம் செலுத்தி சூதாடி வந்தனர். இதனால், இச்செயலியின் நிறுவனர்கள் நாள்தோறும் 200 கோடி ரூபாய்க்கும் அதிகமாக சம்பாதித்து வந்தனர்.

இந்த சூழலில், இச்செயலியின் நிறுவனர்களில் ஒருவரான சவுரப் சந்த்ரகர் 250 கோடி ரூபாய் செலவில் ஐக்கிய அரபு அமீரகத்தில் ஆடம்பரமாக திருமணம் செய்து கொண்டார். இதையடுத்து, அமலாக்கத் துறையின் விசாரணை வளையத்துக்குள் சவுரப் வந்தார்.

இதன் தொடர்ச்சியாக நடந்த விசாரணையில், மகாதேவி சூதாட்டி செயலி நிறுவனம், சட்ட விரோத பணப் பரிமாற்ற மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது. இதனிடையே, கோடிக்கணக்கான பணத்துடன் சென்ற அசீம் தாஸ் என்பவர், கடந்த நவம்பர் மாதம் ராய்ப்பூரில் சிக்கினார்.

சத்தீஸ்கர் சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன்பு இச்சம்பவம் நடந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. மேலும், அசீம் தாஸுடம் அமலாக்கத் துறை நடத்திய விசாரணையில், அம்மாநில முன்னாள் முதல்வர் பூபேஷ் பாகலுக்கு பணத்தைக் கொண்டு செல்வதை ஒப்புக்கொண்டார்.

இதைத் தொடர்ந்து அசீம் தாஸ் கைது செய்யப்பட்டார். இது தொடர்பான வழக்கை அமலாக்கத்துறை தீவிரமாக விசாரித்து வருகிறது. இந்த சூழலில், அமலாக்கத்துறையின் 2-வது குற்றப்பத்திரிகையில் பூபேஷ் பாகலின் பெயர் சேர்க்கப்பட்டிருக்கிறது.

இந்த நிலையில், இது குறித்து பாரதிய ஜனதா கட்சியின் செய்தித் தொடர்பாளர் ஷேஷாத் பூனவாலா கூறுகையில், “சி.எம். என்றால் காங்கிரஸ் கட்சிக்கு சீஃப் மினிஸ்டர் அல்ல; கரப்ஷன் மினிஸ்டர். பிரதமர் மோடி மக்களுக்கு “ரூபே” கார்டு கொடுத்தார். ஆனால், காங்கிரஸ் கட்சியோ “பூபே” கார்டு வழங்கி இருக்கிறது.

சத்தீஸ்கர் மாநிலத்தை வெறும் ஏ.டி.எம்.மாக காங்கிரஸ் கருதியது. இரு கைகளையும் கொள்ளையடிக்க பயன்படுத்திக் கொண்டது. 500 கோடி ரூபாய் லஞ்சம் கொடுக்கச் சென்ற ஒருவர், கையும் களவுமாக பிடிக்கப்பட்ட நிலையில், இதை உறுதிபடுத்தும் ஆதாரங்களும் தற்போது வெளியாகி இருக்கின்றன.ஆகவே, ஊழலை ஆதரிக்கிறதா என்று காங்கிரஸ் கட்சிதான் பதில் சொல்ல வேண்டும்” என்றார்.

Tags: ChhattisgarhMahadev Gambling AppFormer CMBupesh BahelBJP attack
ShareTweetSendShare
Previous Post

இந்தியாவின் கலாச்சார பாரம்பரியத்தைப் பாதுகாக்க, அதிக குருகுலங்கள் தேவை! – ராஜ்நாத் சிங்

Next Post

இந்திய சந்தையில் நுழைய ஏராளமான நிறுவனங்கள் விருப்பம்: சபாநாயகர் ஓம் பிர்லா!

Related News

ஏழ்மையை பயன்படுத்தி சிறுநீரகங்கள் திருட்டு: திமுக எம்எல்ஏ.,விற்கு தொடர்பா?

கங்கை கொண்ட சோழபுரம் கோயில் : சோழர்கள் கட்டடக்கலைக்கு வரலாற்று சான்று!

இங்கிலாந்துடன் கைகோர்த்த இந்தியா : தடையற்ற வர்த்தகம் – என்னென்ன இலாபம்?

எதிர்கால போர் AI போர் : வெற்றிக்கு அடித்தளம் அமைக்கும் இந்தியா!

பிரதமர் மோடியின் புதிய பாணி : எதிரி நாடுகளை அடிபணிய வைக்கும் அதிசயம்!

நாடாளுமன்றம் முடக்கம் – 2 நாளில் ரூ.25 கோடி வீண் – மக்கள் பணத்தை வீணடிக்கும் எதிர்க்கட்சிகள்!

Load More

அண்மைச் செய்திகள்

ராஜேந்திர சோழன் நினைவு நாணயத்தை வெளியிடுகிறார் பிரதமர் மோடி!

கிட்னி திருட்டு இல்லை – முறைகேடு, மா சுப்ரமணியன் : இப்படி சொல்வதற்கு உங்களுக்கு வெட்கமாக இல்லையா? – அண்ணாமலை கேள்வி!

தொழிலாளர்கள் தங்கும் விடுதி : திறந்து 3 மாதங்களாகியும் செயல்படாத அவலம்!

மத்திய அரசின் நிதி எங்கு தான் செல்கிறது? : அண்ணாமலை கேள்வி!

கோவை குண்டுவெடிப்பில் கைதான டெய்லர் ராஜா மீது மேலும் 2 வழக்குகள்!

சிறுவன் கடத்தப்பட்ட வழக்கு : நாடு போலீஸ் ராஜ்ஜியத்திற்கு செல்கிறதோ?- சென்னை உயர்நீதிமன்றம் காட்டம்!

கங்கை கொண்ட சோழபுரம் பிரதமர் மோடி வருகை : ஹெலிகாப்டரை தரையிறக்கி பாதுகாப்புத்துறை அதிகாரிகள் சோதனை!

டிரான்ஸ்பார்மர்களை கொள்முதல் டெண்டர் ஒதுக்கீட்டில் முறைகேடு : செந்தில் பாலாஜிக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

நவீன ட்ரோன்களை உருவாக்க வேண்டியது அவசியம் : முப்படைகளின் தலைமைத் தளபதி அனில் சவுஹான்

திருப்பூர் : கர்ப்பிணி பெண்ணுக்கு காலாவதியான ஓ.ஆர்.எஸ் பவுடர் வழங்கியதால் அதிர்ச்சி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies