அயோத்தியில் இருந்து இராமஜோதி எடுத்து வந்த இஸ்லாமிய பெண்கள் யார்?
Sep 8, 2025, 06:19 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

அயோத்தியில் இருந்து இராமஜோதி எடுத்து வந்த இஸ்லாமிய பெண்கள் யார்?

Web Desk by Web Desk
Jan 16, 2024, 07:00 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

அயோத்தியில் இராமர் கோவில் கும்பாபிஷேகம் நடைபெறுவதை முன்னிட்டு, இஸ்லாமிய மதத்தைச் சேர்ந்த இரு பெண்கள் அயோத்தியில் இருந்து காசிக்கு இராமஜோதியை எடுத்து வந்த சம்பவம் அரங்கேறி இருக்கிறது. இவர்கள் யார் என்பது குறித்து பார்க்கலாம்!

அயோத்தி இராமஜென்ம பூமியில் 1,800 கோடி ரூபாய் செலவில் இராமர் கோவில் கட்டப்பட்டு வருகிறது. இக்கோவில் கும்பாபிஷேகம் வரும் 22-ம் தேதி நடைபெறவிருக்கிறது. இதற்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.

மேலும், இஸ்லாமியர்கள் பலரும் இராமர் கோவில் கும்பாபிஷேகத்துக்காக நன்கொடை வழங்குவதோடு, பல்வேறு நிகழ்ச்சிகளிலும் பங்கெடுத்து வருகின்றனர். அந்த வகையில், இஸ்லாமிய பெண்கள் இருவர் இராமஜோதியை எடுத்து வந்த சம்பவம் அரங்கேறி இருக்கிறது.

உத்தரப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த நஸ்னீன் அன்சாரி, நஜ்மா பர்வீன் ஆகியோர்தான், ‛கடவுள் இராமர் நமது முன்னோர். இந்தியர்களின் டி.என்.ஏ.வும் ஒன்றுதான்’ என்ற செய்தியை மக்களிடம் கொண்டு சேர்க்கும் வகையில் இராமஜோதியை எடுத்து வந்திருக்கின்றனர்.

இவர்கள் யார் என்பது குறித்து பார்க்கலாம்..!

நஸ்னீன் அன்சாரி பனாரஸ் ஹிந்து பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றவர். ஹனுமன் சாலிசா மற்றும் இராமசரிதையை உருது மொழியில் மொழி பெயர்த்திருக்கிறார். பாடல்புரி மடத்தின் தலைவர் பாலக் தாஸை தனது குருவாக ஏற்றுக்கொண்டவர். ஒற்றுமை மற்றும் அமைதிக்காக அயராது உழைத்து வருகிறார். சமூக சேவையில் ஈடுபட்டிருக்கும் ‛ராம்பந்த்’ என்ற அமைப்புடன் இணைந்து இராமபக்தியை பரப்பி வருகிறார்.

இதுகுறித்து நஸ்னீன் கூறுகையில், “அயோத்தியில் இராமர் கோவில் கட்டப்பட்டது மகிழ்ச்சி அளிக்கிறது. கடவுள் இராமர் நமது மூதாதையர். ஒருவர் தனது மதத்தை மாற்றி இருக்கலாம். ஆனால், மூதாதையரை மாற்ற முடியாது. இஸ்லாமியர்களுக்கு மெக்கா புனிதத் தலம். அதேபோல, ஹிந்துக்களுக்கும், இந்திய கலாச்சாரத்தை நம்புபவர்களுக்கும் அயோத்தி புனிதத் தலமாக உள்ளது” என்றார்.

இராமஜோதியை எடுத்து வந்த மற்றொருவரான நஜ்மா பர்வீன், பனாரஸ் ஹிந்து பல்கலைக்கழகத்தில் பிரதமர் மோடி பற்றி ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற்றவர். கடந்த 17 ஆண்டுகளாக இராமபக்தியை பரப்பும் பணியில் ஈடுபட்டிருக்கிறார். வாரணாசியை சேர்ந்த ஹிந்து – முஸ்லிம் மையம் மூலம் நாடு முழுவதும் உள்ள முஸ்லீம்கள் மற்றும் ஹிந்துக்களுடன் தொடர்பு கொண்டு வருகிறார்.

நஸ்னீன் அன்சாரியும், நஜ்மா பர்வீனும் முத்தலாக் முறைக்கு எதிராகப் போராடியவர்கள். ஏராளமான முஸ்லீம் பெண்களின் ஆதரவைப் பெற்றவர்கள். ராமநவமி மற்றும் தீபாவளி பண்டிகை தினங்களில் நூற்றுக்கணக்கான முஸ்லீம் பெண்களுடன் இணைந்து இராம ஆரத்தி நிகழ்ச்சியை நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

Tags: Ram TempleAyodyamuslim womenRamajothi
ShareTweetSendShare
Previous Post

அயோத்தி தரிசனத்துக்கு 50 லட்சம் பேர்: பா.ஜ.க. தீவிர ஏற்பாடு!

Next Post

ராமர் கோவில் கும்பாபிஷேகம் : விராட் கோலிக்கு அழைப்பு!

Related News

நீருக்கடியில் நகரம் கண்டுபிடிப்பு : 8500 ஆண்டுகள் பழமையானதா!

ஆந்திரா : ஆசிரியர் தினம் – ஆசிரியர்களுக்கு நூறு விதமான உணவுகளை பரிமாறி அசத்திய மாணவர்கள்!

திமுக எம்பி டி.ஆர்.பாலுவுக்கு வார இதழ் 25 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க தடை – சென்னை உயர்நீதிமன்றம்!

ஜம்மு – காஷ்மீர் : தீவிரவாதி சுட்டுக்கொலை – ராணுவ வீரர் படுகாயம்!

திருச்சி : முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் பெயரை கூறி அரிசி ஆலை அபகரிப்பு!

பதவி விலகினார் ஜப்பான் பிரதமர் : இஷிபாவின் திடீர் முடிவுக்கு காரணம் என்ன?

Load More

அண்மைச் செய்திகள்

பொள்ளாச்சி : செல்போன் கோபுரத்தில் இருந்து கதிர்வீச்சு என பொதுமக்கள் புகார்!

உத்தரபிரதேசத்தில் பெட்ரோல் வழங்க மறுத்த பங்க் ஊழியரை தாக்கிய பெண்!

நேபாளத்தில் சமூக ஊடகங்களுக்கு விதிக்கப்பட்ட தடையை எதிர்த்து இளைஞர்கள் போராட்டம்!

அதிமுக MLA-க்கள் நிதியில் கட்டிய ரேஷன் கடைகள் மூடல் – திமுகவினரின் கார் பார்க்கிங் ஆக மாறியதால் அதிர்ச்சி!

கிடப்பில் போடப்பட்ட “மரப்பாலம்” பணிகள் : போக்குவரத்து மாற்றத்தால் மக்கள் அவதி!

சென்னையில் மின்வாரிய ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்!

இந்தியா மீது 50 சதவீதம் வரி விதித்தது சரியான யோசனை : உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி

கர்நாடகா : இருசக்கர வாகனம் மீது மோதிய கார் – 4 சிறுவர்கள் பலி!

தாய்லாந்து : சாலைகளில் தேங்கிய தண்ணீர் – வாகனங்கள் சேதம்!

உக்ரைன் – ரஷ்யா போர் மனிதகுலத்தின் பயங்கரமான வீண்செலவு : அதிபர் டிரம்ப்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies