ஜல்லிக்கட்டு விளையாட்டு அரங்கம்! - வாடிவாசலுக்கு மூடுவிழாவா?
Oct 26, 2025, 04:00 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஜல்லிக்கட்டு விளையாட்டு அரங்கம்! – வாடிவாசலுக்கு மூடுவிழாவா?

ஜல்லிக்கட்டு வீரத்தின் அடையாளம், அது கண்காட்சிக் கூடம் அல்ல!

Web Desk by Web Desk
Jan 16, 2024, 09:00 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஜல்லிக்கட்டுக்கு என்று தனியாக எந்த நாட்டிலும் அரங்கம் கிடையாது. இப்படி இருக்கும் சூழலில் ஜல்லிக்கட்டு விளையாட்டு அரங்கதத்தின் தொடக்க விழா, வாடிவாசலுக்கு மூடுவிழா நடத்தப்படும் என்ற அச்சம் எழுந்துள்ளது.

ஜல்லிக்கட்டுக்கு 2011 ஆம் ஆண்டு மத்திய அரசு தடை விதித்தபோது,  பிரதமர் மோடி தலைமையிலான ஆட்சி 2016 ஆம் ஆண்டு பெறுப்பேற்ற பின் தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி வழங்கினார்.

திமுக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு, மதுரை அலங்காநல்லூர் கீழக்கரையில் 66 ஏக்கரில் ரூ.44 கோடி செலவில், 5,000 பேர் அமர்ந்து பார்க்கக் கூடிய வகையில் பிரமாண்டமாக கட்டப்பட்டுள்ள ஜல்லிக்கட்டு அரங்கை முதல்வர் மு.க.ஸ்டாலின், ஜனவரி 23 அல்லது 24-ந்தேதி திறக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

`தை பிறந்தால் வழி பிறக்கும் என்பது நமது முன்னோர்களின் வார்த்தை. நமது பண்பாடு, நாகரிகத்தின், வீரத்தின் அடையாளமாக ஜல்லிக்கட்டு திகழ்ந்து வருகிறது.

உலகப் புகழ்பெற்ற அலங்காநல்லூர், அவனியாபுரம், பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டிகளில் வாடிவாசல் வழியாக மாடுகள் அனுப்பப்பட்டு சிறப்பாக நடைபெற்று வந்தது. ஆனால், தற்போது தமிழர்கள் பாரம்பர்யமாகக் கடைபிடித்து வரும் வாடிவாசலுக்கு மூடு விழா நடத்தப்படுமோ என மக்கள் அச்சம் கொண்டுள்ளனர்.

பொதுவாக கிராமங்கள்தோறும் குல தெய்வங்களை வழிபட்டு, வாடிவாசல் வழியாக காளைகளை அவிழ்த்துவிடுவார்கள். இப்படி நடத்தப்படும் ஜல்லிக்கட்டுதான் வீரத்தின் அடையாளம், அது கண்காட்சிக் கூடம் அல்ல.

மண்வாசனை மிக்க இந்த ஜல்லிக்கட்டு போட்டிக்கு, ஜல்லிக்கட்டு வீரர்களின் கருத்தை கேட்காமல் வாடிவாசலுக்கு மூடு விழா நடத்தாதீர்கள் என மக்கள் கோரிக்கை வைக்கிறார்கள்.

ஜல்லிக்கட்டுக்கு மைதானம் எந்த நாட்டிலும் கிடையாது. இந்த புத்திசாலித்தனமான முடிவை யார் கூறியது என்று தெரியவில்லை, இல்லாத ஒன்றை உருவாக்கக் கூடாது.

நம் கலாசாரத்தில் மாற்றத்தை ஏற்படுத்துவதற்கு மறைமுகமாக முயற்சி நடைபெறுகிறதோ என்கிற அச்சம் ஏற்படுகிறது.

தி.மு.க தேர்தல் அறிக்கையில் ஜல்லிக்கட்டு காளை வளர்ப்பு, பராமரிப்பு செலவுக்காக மாதம் ஆயிரம் ரூபாய் உதவித்தொகை வழங்கப்படும் என்று அறிவித்தனர். அந்த அறிவிப்பு இன்னும் நிலுவையிலேயே இருக்கிறது. அதை வழங்கி காளை வளர்ப்பை ஊக்கப்படுத்தியிருக்கலாம். ஆனால், அதை விடுத்து யாருமே கேட்காத, யாருமே விரும்பாத ஜல்லிக்கட்டு மைதானம் அமைத்திருப்பது  திணிக்கப்படுகிற திட்டமாக உள்ளது.

வீர விளையாட்டான ஜல்லிக்கட்டை காப்பாற்றுவதற்கும், ஒவ்வொரு கிராமத்தின் பாரம்பர்யத்தைக் காப்பாற்றுவதற்கும் அரசு முன் வருமா… மண்வாசனை கொண்ட கிராம பாரம்பரியத்தின் பண்பாட்டை குழி தோண்டி புதைத்துவிட்டு, பொம்மை விளையாட்டுபோல் ஜல்லிக்கட்டை இந்த மைதானத்தில் நடத்துவார்களா?  இந்த அரசு என்ன செய்யப் போகிறது என்ற அச்சத்தோடு வாழ்கிற உலகத் தமிழர்களுக்கு  முழு விவரத்தை வெளியிடுவீர்களா?’ என்று கேள்வி எழுகிறது.

இது குறித்து பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை, 

தி.மு.க ஆட்சிக்கு வந்த பின்பு, அலங்காநல்லூர் அருகே கீழக்கரையில் ஜல்லிக்கட்டு மைதானத்தை அமைத்து உள்ளது. அங்கு செல்ல யாரும் தயாராக இல்லை. அதற்கு மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பெயர் சூட்டுவதை கண்டிக்கிறோம். அம்முடிவை தமிழக அரசு கைவிட வேண்டும்,” என, மதுரையில் பா.ஜ., தமிழக தலைவர் அண்ணாமலை அண்மையில் தெரிவித்துள்ளார்.

ஜல்லிக்கட்டு நடக்கும் மதுரை மாவட்டம் அலங்காநல்லுார், பாலமேடு உள்ளாட்சி அமைப்புகளின் எல்லைகளுக்குள் இடம் பெறாத, சம்பந்தமே இல்லாமல் கீழக்கரையில் ஜல்லிக்கட்டு மைதானத்தை தமிழக அரசு அமைத்துள்ளது.

அங்கு செல்ல ஜல்லிகட்டு காளைகள் வளர்ப்போர், மாடுபிடி வீரர்கள் தயாராக இல்லை.

அம்மைதானத்தை வேறு ஏதாவது ஆக்கப்பூர்வமான பயன்பாட்டிற்கு கொண்டுவர சிந்திக்க வேண்டும். ஜல்லிக்கட்டு தடைக்கு காரணமாக இருந்தது, தி.மு.க., – காங்., கூட்டணியாக இருந்த மத்திய அரசு.

ஆனால் ஜல்லிக்கட்டு போட்டி மீண்டும் நடைபெற காரணம் பிரதமர் மோடிதான் எனதிட்டவட்டமாக அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

Tags: jallikattu
ShareTweetSendShare
Previous Post

ஜல்லிக்கட்டில் கலக்கும் காளைகள் சாபம் பெற்றதா?

Next Post

தமிழர்களின் வீர விளையாட்டு ‘ஜல்லிக்கட்டு’ குறித்து பார்ப்போம்!

Related News

மீண்டும் சாம்பல் பட்டியலில் : பாக்.,தனிமைப்படுத்தப்படும் – FATF அமைப்பு எச்சரிக்கை!

விளம்பரங்களை விரும்ப செய்த ஜாம்பவான்!

படிப்பில் பட்டையை கிளப்பும் பேராசிரியர் : 150+ டிகிரிகளை முடித்து அசத்தல் சாதனை!

அவுரங்காபாத் ரயில் நிலையம் சத்ரபதி சாம்பாஜிநகர் என மாற்றம்!

டெல்லி : உள்ளாடையில் மறைத்து தங்க கட்டிகளை எடுத்து வந்த பெண்!

தயாரான இறுதிச்சடங்கு திட்ட ஏற்பாடுகள் : புற்றுநோய்க்கு சிகிச்சை பெற்று வரும் இங்கிலாந்து மன்னர் சார்லஸ்!

Load More

அண்மைச் செய்திகள்

கரீபியன் கடல் பகுதிக்கு விமானம் தாங்கிக் கப்பல் அனுப்பும் அமெரிக்கா!

திருவள்ளூர் : நெல் கொள்முதல் நிலையங்களை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்ட மத்திய குழுவினர்!

இந்திய ஜனநாயகம் பல நாடுகளுக்கு ஒரு எடுத்துக்காட்டு – மச்சாடோ

ஸ்பெயின் : வெள்ளத்தில் பலியானோரின் முதலாம் ஆண்டு நினைவஞ்சலி பேரணி!

தஞ்சாவூர் : பூங்காவில் மழை நீருடன் தேங்கி நிற்கும் கழிவுநீர்!

“மாரி”யை பாராட்டு மழையில் நனைய வைப்பதற்கு காலம் இது இல்லை முதலமைச்சர் ஸ்டாலின் – தமிழிசை சௌந்தரராஜன் விமர்சனம்!

பங்கு சந்தையை சீர்குலைக்க காங்கிரஸ் முயற்சிப்பது ஏன்? – அண்ணாமலை கேள்வி!

முழுநேர சினிமா விமர்சகராக முதல்வர் மாறிவிட்டார் – இபிஎஸ் விமர்சனம்!

இந்தியாவை சேர்ந்த எஜுகேட் கேர்ள்ஸ் நிறுவனத்துக்கு ரமோன் மகசேசே விருது!

காற்றழுத்த தாழ்வு மண்டலம் முன்பே புயலாக மாற வாய்ப்பு – இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies