காஸாவில் ஹமாஸ் கட்டமைப்பு முற்றிலும் அழிப்பு: இஸ்ரேல் இராணுவம் தகவல்!
Oct 26, 2025, 12:00 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

காஸாவில் ஹமாஸ் கட்டமைப்பு முற்றிலும் அழிப்பு: இஸ்ரேல் இராணுவம் தகவல்!

Web Desk by Web Desk
Jan 8, 2024, 07:57 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

காஸாவில் ஹமாஸ் தீவிரவாதிகளின் கட்டமைப்பு முற்றிலும் அழிக்கப்பட்டு விட்டது. ஆகவே, ஹமாஸ் தீவிரவாதிகள் தளபதிகள் இல்லாமல் செயல்பட்டு வருகிறார்கள் என்று இஸ்ரேல் இராணுவம் தெரிவித்திருக்கிறது.

பாலஸ்தீனத்தின் காஸா நகரை தங்களது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும் ஹமாஸ் தீவிரவாதிகள், கடந்த அக்டோபர் மாதம் 7-ம் தேதி இஸ்ரேல் நாட்டின் மீது ஏவுகணைத் தாக்குதல் நடத்தினர். இதற்கு, இஸ்ரேல் இன்று வரை பதிலடி கொடுத்து வருகிறது.

முதலில் வடக்கு காஸாவில் தாக்குதலைத் தொடங்கிய இஸ்ரேல் இராணுவம், படிப்படியாக முன்னேறி தற்போது மத்திய மற்றும் தெற்கு காஸாவிலும் தாக்குதலை நடத்தி வருகிறது. இத்தாக்குதலில் காஸா நகரமே உருக்குலைந்து போய்க் கிடக்கிறது.

குறிப்பாக, இத்தாக்குதலின்போது, ஹமாஸ் தீவிரவாதிகளின் தலைமையகம், முக்கிய முகாம்கள், பதுங்கு குழிகள், சுரங்கப் பாதைகள் உட்பட 2,000-க்கும் மேற்பட்ட இலக்குகளை இஸ்ரேல் இராணுவம் அழித்திருக்கிறது.

மேலும், இஸ்ரேல் தாக்குதலில் காஸா நகரைச் சேர்ந்த 8,000-க்கும் மேற்பட்ட ஹமாஸ் தீவிரவாதிகள் உட்பட 22,000-க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். 40,000-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

இந்த நிலையில், வடக்கு காஸாவில் ஹமாஸ் தீவிரவாதிகளின் இராணுவ கட்டமைப்புகளை முற்றிலும் அழித்து விட்டதாக இஸ்ரேல் இராணுவம் தெரிவித்திருக்கிறது. இதுகுறித்து இஸ்ரேல் இராணுவ செய்தித் தொடர்பாளர் டேனியல் ஹகாரி கூறுகையில், “காஸாவின் வடக்குப் பகுதியில் ஹமாஸ் தீவிரவாதிகளின் இராணுவ கட்டமைப்பை அழிக்கும் பணியை முடித்து விட்டோம்.

தற்போது மத்திய மற்றும் தெற்கு காஸாவில் ஹமாஸ் அமைப்பை அழிப்பதில் கவனம் செலுத்தப்பட்டு வருகிறது. இதற்கு சில காலம் எடுக்கும். ஹமாஸ் அமைப்பினரின் முக்கிய தலைவர்கள் கொல்லப்பட்டு விட்டதால், அந்த அமைப்பினர் தளபதிகள் இல்லாமல் செயல்பட்டு வருகிறார்கள்.

மத்திய காஸா பகுதியில் உள்ள அகதிகள் முகாம்களில் ஹமாஸ் அமைப்பினர் பதுங்கி இருக்கிறார்கள். தெற்கு காஸாவில் கான்யூனுஸ் நகரில் பெரிய நகர்ப்புற நிலப்பரப்பில் சுரங்கப் பாதைகள் உள்ளன. மத்திய மற்றும் தெற்கு காஸாவிலும் ஹமாஸை அழித்து இராணுவம் வேறு வழிகளில் செயல்படும்” என்று தெரிவித்திருக்கிறார்.

Tags: IsraelKazaHamasDemolish
ShareTweetSendShare
Previous Post

தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மழைக்கு வாய்ப்பு!

Next Post

முரசொலி நில விவகாரம் – ஜனவரி 10 -ல் தீர்ப்பு!

Related News

Apple, NVidia-வில் பணியாற்ற விருப்பமா? : IIT, IIM படிக்க தேவையில்லை திறமை போதுமாம் – சிறப்பு தொகுப்பு!

திருப்பத்தூர் நாட்றம்பள்ளி அருகே வேல் பூஜை செய்த விஷ்வ ஹிந்து பரிஷத் நிர்வாகிகள் கைது!

சர்வதேச அரசியலை உலுக்கும் சுயசரிதை : பலாத்காரம் செய்த பிரதமர் யார்? – எப்ஸ்டீனின் வழக்கில் சிக்கிய பெண் வெளியிட்ட “ஷாக்”!

கிருஷ்ணகிரியில் பாஜக இளைஞரணி சார்பில் வேலை வாய்ப்பு முகாம் – சுமார் 100 பேருக்கு பணி ஆணை!

50 % மட்டுமே நடைபெற்ற குறுவை நெல் சாகுபடி கொள்முதல் – முழு விவரம்!

பாமக செயல் தலைவராக காந்திமதி நியமனம் – டாக்டர் ராமதாஸ் அறிவிப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

டிடிவி தினகரன் காலாவதியான அரசியல்வாதி – ஆர்.பி.உதயகுமார் விமர்சனம்!

செங்கல்பட்டு அரசு நெல் கொள்முதல் நிலையங்களில் மத்திய குழு ஆய்வு!

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி – இநதியா வெற்றி!

நெல் கொள்முதல் செய்வதில் திமுக அரசு தோல்வி – அன்புமணி குற்றச்சாட்டு!

தஞ்சை நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் நயினார் நாகேந்திரன் ஆய்வு!

ஆந்திராவில் பேருந்து தீப்பிடித்து எரிந்த விபத்து – திருப்பூர் இளைஞர் உயிரிழப்பு!

ஆந்திராவில் தீப்பிடித்த பேருந்தை அகற்றும் போது கவிழ்ந்த கிரேன் – ஓட்டுனர் காயம்!

வங்கக்கடலில் மோன்தா புயல் – எண்ணூர், கடலூர் உள்ளிட்ட துறைமுகங்களில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்!

திமுகவை ஆட்சியில் இருந்து அகற்ற ஒத்த கருத்துடைய கட்சிகள் ஒன்றிணைய வேண்டும் – ஜிகே.வாசன் அழைப்பு!

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் 8 கிலோ கஞ்சா பறிமுதல் – ஒருவர் கைது!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies