பிரதமர் மோடிக்கு எதிராக விமர்சனம்: மாலத்தீவு தூதருக்கு இந்தியா சம்மன்!
Jul 26, 2025, 06:26 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பிரதமர் மோடிக்கு எதிராக விமர்சனம்: மாலத்தீவு தூதருக்கு இந்தியா சம்மன்!

Web Desk by Web Desk
Jan 9, 2024, 12:59 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பாரதப் பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராக, மாலத்தீவு அமைச்சர்கள் விமர்சனம் செய்திருந்த நிலையில், விளக்கம் கேட்டு அந்நாட்டு தூதருக்கு இந்தியா சம்மன் அனுப்பி இருக்கிறது.

பிரதமர் நரேந்திர மோடி 2 நாள் பயணமாக கடந்த 2-ம் தேதி லட்சத்தீவுக்குச் சென்றிருந்தார். அப்போது, கடற்கரையில் நடைப்பயிற்சி செய்தவர், பின்னர், அழ்கடலில் ஸ்நோர்கெலிங் செய்து மகிழ்ந்தார்.

இதன் பிறகு, டெல்லிக்குத் திரும்பிய பிரதமர் மோடி, லட்சத்தீவின் அழகு பற்றியும், தனது பயண அனுபவம் குறித்தும் தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்திருந்தார். அப்பதிவில், லட்சத்தீவின் அமைதியும், அழகும் மனதை மயக்குகிறது.

இந்தியர்கள் அனைவரும் ஒருமுறையேனும் லட்சத்தீவு பயணம் மேற்கொள்ள வேண்டும் என்று தெரிவித்திருந்தவர், தான் நடைப்பயிற்சி மேற்கொண்டது, கடற்கரையில் அமர்ந்து ஓய்வெடுத்தது, ஸ்நோர்கெலிங் செய்தது உள்ளிட்ட பல்வேறு புகைப்படங்களையும் வெளியிட்டிருந்தார்.

பிரதமர் மோடியின் இந்தப் பதிவு சமூக வலைத்தளங்களில் வைரலானதோடு, இணையத்தில் அதிகம் தேடப்படும் வார்த்தையாக லட்சத்தீவு இடம்பெற்றிருந்தது. இது மாலத்தீவின் ஆட்சியாளர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்க வேண்டும்.

எனவே, பிரதமர் மோடியை விமர்ச்சித்தும், இந்தியர்களை கேவலமாக விமர்சித்தும் மாலத்தீவை அமைச்சர்கள் 3 பேர் உட்பட பலரும் கேலி, கிண்டல் செய்து பதிவுகளை வெளியிட்டிருந்தனர். இது கடுமையான சர்ச்சையை ஏற்படுத்தியது.

இதையடுத்து, மாலத்தீவு அமைச்சர்களின் பதிவுக்கு, அந்நாட்டின் முன்னாள் அதிபர் முகமது நஷீத், முன்னாள் துணை சபாநாயகர் உள்ளிட்ட பலரும் கடும் கண்டனம் தெரிவித்திருந்தனர். மேலும், இந்தியாவின் திரை பிரபலங்கள், கிரிக்கெட் நட்சத்திரங்கள் பலரும் மாலத்தீவுக்கு எதிராகவும், லட்சத்தீவுக்கு ஆதரவாகவும் பதிவுகளை வெளியிட்டு வருகின்றனர்.

இதனால், மாலத்தீவு புதிய அதிபருக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டது. எனவே, பிரதமர் மோடி குறித்து விமர்சனம் செய்திருந்த மாலத்தீவு அமைச்சர்கள் 3 பேரையும் சஸ்பெண்ட் செய்து அந்நாட்டு அரசு உத்தரவிட்டது.

இந்த நிலையில்தான், பாரதப் பிரதமர் நரேந்திர மோடியை விமர்சனம் செய்தது தொடர்பாக, மாலத்தீவு தூதருக்கு இந்தியா சம்மன் அனுப்பி இருக்கிறது. இதுகுறித்து டெல்லியில் உள்ள மாலத்தீவு தூதரான இப்ராகிம் ஷஹிப் விளக்கம் அளிக்குமாறு கூறி, வெளியுறவுத் துறை அமைச்சகம் சம்மன் அனுப்பி இருக்கிறது.

இதனிடையே, மாலத்தீவின் புதிய அதிபரை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று கோரிக்கை எழுந்திருக்கிறது. இந்த விவகாரம் தொடர்பாக மாலத்தீவு நாடாளுமன்றத்தின் சிறுபான்மையின பிரிவுத் தலைவர் அலி அஜிம் கடுமையான அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறார்.

அந்த அறிக்கையில், “நாம் எம்.பி.க்கள் என்ற முறையில், நாட்டின் வெளியுறவு கொள்கையின் உறுதித்தன்மையை நிலை நிறுத்துவதற்கும், அண்டை நாடு தனிமைப்படுத்தப்படுவதை தடுப்பதற்கும் அர்ப்பணிப்புடன் உள்ளோம்.

அதிபரை பதவி நீக்கம் செய்யத் தேவையான நடவடிக்கையை எடுக்க விரும்புகிறீர்களா? அதிபர் மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வருவதற்கு நாடாளுமன்றச் செயலகம் நடவடிக்கை எடுக்குமா?” என்று கேள்வி எழுப்பி இருக்கிறார்.

மேலும், பிரதமர் நரேந்திர மோடி மற்றும் இந்திய மக்களைப் பற்றி துணை அமைச்சர்கள் சமூக வலைத்தளங்களில் வெளியிட்ட கருத்துகளுக்கு மாலத்தீவு சுற்றுலாத் தொழில் சங்கம் கடும் கண்டனம் தெரிவித்திருக்கிறது.

Tags: summonedInsulting PM ModiMaldives envoyExternal Affairs Ministry
ShareTweetSendShare
Previous Post

இந்தியத் துப்பாக்கிச்சுடு வீரர் தங்கம் வென்று ஒலிம்பிக் போட்டிக்குத் தகுதி!

Next Post

வைத்தீஸ்வரன் கோயிலுக்குள் வெள்ளம்! – பக்தர்கள் அவதி!

Related News

திருவள்ளூர் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு – கைது செய்யப்பட்ட இளைஞருக்கு மருத்துவ பரிசோதனை!

கங்கைகொண்ட சோழபுர விழாவில் பிரதமர் பங்கேற்பது தமிழர்களை மகிழ்ச்சி கடலில் ஆழ்த்தியுள்ளது – எல்.முருகன்

அன்புக்குரிய பிரதமரை வரவேற்பதில் தமிழகம் பெருமிதம் கொள்கிறது – அண்ணாமலை

பாரதப் பிரதமரை வரவேற்பதில் பெருமை கொள்கிறது தமிழகம் – நயினார் நாகேந்திரன்!

ஊதிய முரண்பாடுகளை களையவில்லை எனில் சிறை நிரப்பும் போராட்டம் – இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர் இயக்கம் எச்சரிக்கை!

புவனகிரி சிறுமி பாலியல் வன்கொடுமை – காதலன் உள்ளிட்ட 4 பேர் கைது!

Load More

அண்மைச் செய்திகள்

பிரதமர் மோடி தமிழகம் வருகை – அரியலூர் மாவட்டத்தில் தீவிர பாதுகாப்பு!

மதுரையில் திமுக நிர்வாகிக்கு சொந்தமான ஐடி நிறுவனத்தில் GST நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் சோதனை!

செம்பரம்பாக்கம் சுத்திகரிப்பு நிலையத்திற்கு செல்லும் குழாய்களில் இணைப்பு பணி!

ஆண்டிபட்டி பேரூராட்சியில் உள்ள இலவச கழிப்பறைகளில் பணம் வசூலிக்கப்படுவதாக குற்றச்சாட்டு!

ஆண்டிப்பட்டி பகுதியில் வாட்டர் ஆப்பிள் எனப்படும் நீர்க்குமிழி பழ சீசன் தொடங்கியது – விவசாயிகள் மகிழ்ச்சி!

கோயம்பேடு அருகே தனிநபர் ஆக்கிரமித்துள்ள சாலை – பொது பயன்பாட்டிற்கு கொண்டு வர பொதுமக்கள் வலியுறுத்தல்!

பிரிட்டன் : 5 கோடி ரூபாய் காப்பீட்டுத் தொகைக்கு ஆசைப்பட்டு, கால்களை வெட்டி கொண்ட மருத்துவர் கைது!

பிரதமரை எதிர்ப்பதாக நினைத்து, காங்கிரஸ் கட்சியினர் தேசத்தை எதிர்க்கின்றனர் : சிவராஜ் சிங் சௌகான்

இந்திய ராணுவம் ஆண்டு முழுவதும் 24 மணி நேரமும் தயார்நிலை இருக்க வேண்டும் : முப்படைகளின் தலைமை தளபதி அனில் சௌகன்

நீலகிரிக்கு மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies