பிரதமர் மோடிக்கு எதிராக விமர்சனம்: மாலத்தீவு தூதருக்கு இந்தியா சம்மன்!
Oct 26, 2025, 06:21 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பிரதமர் மோடிக்கு எதிராக விமர்சனம்: மாலத்தீவு தூதருக்கு இந்தியா சம்மன்!

Web Desk by Web Desk
Jan 9, 2024, 12:59 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பாரதப் பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராக, மாலத்தீவு அமைச்சர்கள் விமர்சனம் செய்திருந்த நிலையில், விளக்கம் கேட்டு அந்நாட்டு தூதருக்கு இந்தியா சம்மன் அனுப்பி இருக்கிறது.

பிரதமர் நரேந்திர மோடி 2 நாள் பயணமாக கடந்த 2-ம் தேதி லட்சத்தீவுக்குச் சென்றிருந்தார். அப்போது, கடற்கரையில் நடைப்பயிற்சி செய்தவர், பின்னர், அழ்கடலில் ஸ்நோர்கெலிங் செய்து மகிழ்ந்தார்.

இதன் பிறகு, டெல்லிக்குத் திரும்பிய பிரதமர் மோடி, லட்சத்தீவின் அழகு பற்றியும், தனது பயண அனுபவம் குறித்தும் தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்திருந்தார். அப்பதிவில், லட்சத்தீவின் அமைதியும், அழகும் மனதை மயக்குகிறது.

இந்தியர்கள் அனைவரும் ஒருமுறையேனும் லட்சத்தீவு பயணம் மேற்கொள்ள வேண்டும் என்று தெரிவித்திருந்தவர், தான் நடைப்பயிற்சி மேற்கொண்டது, கடற்கரையில் அமர்ந்து ஓய்வெடுத்தது, ஸ்நோர்கெலிங் செய்தது உள்ளிட்ட பல்வேறு புகைப்படங்களையும் வெளியிட்டிருந்தார்.

பிரதமர் மோடியின் இந்தப் பதிவு சமூக வலைத்தளங்களில் வைரலானதோடு, இணையத்தில் அதிகம் தேடப்படும் வார்த்தையாக லட்சத்தீவு இடம்பெற்றிருந்தது. இது மாலத்தீவின் ஆட்சியாளர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்க வேண்டும்.

எனவே, பிரதமர் மோடியை விமர்ச்சித்தும், இந்தியர்களை கேவலமாக விமர்சித்தும் மாலத்தீவை அமைச்சர்கள் 3 பேர் உட்பட பலரும் கேலி, கிண்டல் செய்து பதிவுகளை வெளியிட்டிருந்தனர். இது கடுமையான சர்ச்சையை ஏற்படுத்தியது.

இதையடுத்து, மாலத்தீவு அமைச்சர்களின் பதிவுக்கு, அந்நாட்டின் முன்னாள் அதிபர் முகமது நஷீத், முன்னாள் துணை சபாநாயகர் உள்ளிட்ட பலரும் கடும் கண்டனம் தெரிவித்திருந்தனர். மேலும், இந்தியாவின் திரை பிரபலங்கள், கிரிக்கெட் நட்சத்திரங்கள் பலரும் மாலத்தீவுக்கு எதிராகவும், லட்சத்தீவுக்கு ஆதரவாகவும் பதிவுகளை வெளியிட்டு வருகின்றனர்.

இதனால், மாலத்தீவு புதிய அதிபருக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டது. எனவே, பிரதமர் மோடி குறித்து விமர்சனம் செய்திருந்த மாலத்தீவு அமைச்சர்கள் 3 பேரையும் சஸ்பெண்ட் செய்து அந்நாட்டு அரசு உத்தரவிட்டது.

இந்த நிலையில்தான், பாரதப் பிரதமர் நரேந்திர மோடியை விமர்சனம் செய்தது தொடர்பாக, மாலத்தீவு தூதருக்கு இந்தியா சம்மன் அனுப்பி இருக்கிறது. இதுகுறித்து டெல்லியில் உள்ள மாலத்தீவு தூதரான இப்ராகிம் ஷஹிப் விளக்கம் அளிக்குமாறு கூறி, வெளியுறவுத் துறை அமைச்சகம் சம்மன் அனுப்பி இருக்கிறது.

இதனிடையே, மாலத்தீவின் புதிய அதிபரை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று கோரிக்கை எழுந்திருக்கிறது. இந்த விவகாரம் தொடர்பாக மாலத்தீவு நாடாளுமன்றத்தின் சிறுபான்மையின பிரிவுத் தலைவர் அலி அஜிம் கடுமையான அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறார்.

அந்த அறிக்கையில், “நாம் எம்.பி.க்கள் என்ற முறையில், நாட்டின் வெளியுறவு கொள்கையின் உறுதித்தன்மையை நிலை நிறுத்துவதற்கும், அண்டை நாடு தனிமைப்படுத்தப்படுவதை தடுப்பதற்கும் அர்ப்பணிப்புடன் உள்ளோம்.

அதிபரை பதவி நீக்கம் செய்யத் தேவையான நடவடிக்கையை எடுக்க விரும்புகிறீர்களா? அதிபர் மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வருவதற்கு நாடாளுமன்றச் செயலகம் நடவடிக்கை எடுக்குமா?” என்று கேள்வி எழுப்பி இருக்கிறார்.

மேலும், பிரதமர் நரேந்திர மோடி மற்றும் இந்திய மக்களைப் பற்றி துணை அமைச்சர்கள் சமூக வலைத்தளங்களில் வெளியிட்ட கருத்துகளுக்கு மாலத்தீவு சுற்றுலாத் தொழில் சங்கம் கடும் கண்டனம் தெரிவித்திருக்கிறது.

Tags: External Affairs MinistrysummonedInsulting PM ModiMaldives envoy
ShareTweetSendShare
Previous Post

இந்தியத் துப்பாக்கிச்சுடு வீரர் தங்கம் வென்று ஒலிம்பிக் போட்டிக்குத் தகுதி!

Next Post

வைத்தீஸ்வரன் கோயிலுக்குள் வெள்ளம்! – பக்தர்கள் அவதி!

Related News

Apple, NVidia-வில் பணியாற்ற விருப்பமா? : IIT, IIM படிக்க தேவையில்லை திறமை போதுமாம் – சிறப்பு தொகுப்பு!

திருப்பத்தூர் நாட்றம்பள்ளி அருகே வேல் பூஜை செய்த விஷ்வ ஹிந்து பரிஷத் நிர்வாகிகள் கைது!

சர்வதேச அரசியலை உலுக்கும் சுயசரிதை : பலாத்காரம் செய்த பிரதமர் யார்? – எப்ஸ்டீனின் வழக்கில் சிக்கிய பெண் வெளியிட்ட “ஷாக்”!

கிருஷ்ணகிரியில் பாஜக இளைஞரணி சார்பில் வேலை வாய்ப்பு முகாம் – சுமார் 100 பேருக்கு பணி ஆணை!

50 % மட்டுமே நடைபெற்ற குறுவை நெல் சாகுபடி கொள்முதல் – முழு விவரம்!

பாமக செயல் தலைவராக காந்திமதி நியமனம் – டாக்டர் ராமதாஸ் அறிவிப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

டிடிவி தினகரன் காலாவதியான அரசியல்வாதி – ஆர்.பி.உதயகுமார் விமர்சனம்!

செங்கல்பட்டு அரசு நெல் கொள்முதல் நிலையங்களில் மத்திய குழு ஆய்வு!

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி – இநதியா வெற்றி!

நெல் கொள்முதல் செய்வதில் திமுக அரசு தோல்வி – அன்புமணி குற்றச்சாட்டு!

தஞ்சை நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் நயினார் நாகேந்திரன் ஆய்வு!

ஆந்திராவில் பேருந்து தீப்பிடித்து எரிந்த விபத்து – திருப்பூர் இளைஞர் உயிரிழப்பு!

ஆந்திராவில் தீப்பிடித்த பேருந்தை அகற்றும் போது கவிழ்ந்த கிரேன் – ஓட்டுனர் காயம்!

வங்கக்கடலில் மோன்தா புயல் – எண்ணூர், கடலூர் உள்ளிட்ட துறைமுகங்களில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்!

திமுகவை ஆட்சியில் இருந்து அகற்ற ஒத்த கருத்துடைய கட்சிகள் ஒன்றிணைய வேண்டும் – ஜிகே.வாசன் அழைப்பு!

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் 8 கிலோ கஞ்சா பறிமுதல் – ஒருவர் கைது!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies