இஸ்ரேல் தாக்குதல்: ஹிஸ்புல்லா முக்கியத் தளபதி பலி!
Jan 14, 2026, 06:30 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

இஸ்ரேல் தாக்குதல்: ஹிஸ்புல்லா முக்கியத் தளபதி பலி!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Jan 9, 2024, 04:49 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

லெபனான் நாட்டின் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் ஹிஸ்புல்லா தீவிரவாத அமைப்பின் முக்கியத் தளபதி கொல்லப்பட்டிருக்கிறார்.

பாலஸ்தீனத்தின் காஸா நகரை தங்களது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும் ஹமாஸ் தீவிரவாதிகள், கடந்தாண்டு அக்டோபர் மாதம் 7-ம் தேதி இஸ்ரேல் நாட்டின் மீது திடீர் ஏவுகணைத் தாக்குதல் நடத்தினர்.

மேலும், இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி இஸ்ரேலுக்குள் ஊடுருவிய ஹமாஸ் தீவிரவாதிகள், அப்பாவி மக்கள் மீது கண்மூடித்தனமாக துப்பாக்கிச் சூடு நடத்தினர். தவிர, 200-க்கும் மேற்பட்டோரை பிணைக் கைதிகளாகவும் பிடித்துச் சென்றனர்.

ஹமாஸ் தீவிரவாதிகளின் இத்தாக்குதலில், இஸ்ரேலில் 1,200 பேர் உயிரிழந்தனர். 3,500 பேர் காயமடைந்தனர். இதனால் நிலைகுலைந்துபோன இஸ்ரேல், பின்னர் சுதாரித்துக் கொண்டு ஹமாஸ் தீவிரவாதிகளுக்கு ஆக்ரோஷமாக பதிலடி கொடுக்கத் தொடங்கியது.

இஸ்ரேலின் இத்தாக்குதல் இன்றுவரை தொடர்ந்து வரும் நிலையில், லெபனான் நாட்டைச் சேர்ந்த ஹிஸ்புல்லா தீவிரவாதிகளும், ஏமன் நாட்டைச் சேர்ந்த ஹௌதி கிளர்ச்சியாளர்களும் ஹமாஸ் தீவிரவாதிகளுக்கு ஆதரவாக செயல்பட்டு வருகின்றனர்.

எனவே, இஸ்ரேல் நாட்டின் மீது அவ்வப்போது ஏவுகணைத் தாக்குதலை நடத்தி வருகின்றனர். இதற்கு இஸ்ரேலும் பதிலடி கொடுத்து வருகிறது. அந்த வகையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு லெபனான் நாட்டின் பெய்ரூட் நகர் மீது இஸ்ரேல் இராணுவம் நடத்திய ஆளில்லா விமானத் தாக்குதலில் ஹமாஸ் அமைப்பின் முக்கியத் தளபதியான சலே அல் அரூரி கொல்லப்பட்டார்.

இதனால் ஆத்திரமடைந்த ஹிஸ்புல்லா தீவிரவாதிகள், தக்க பதிலடி கொடுக்கப்படும் என்று இஸ்ரேலுக்கு எச்சரிக்கை விடுத்திருந்தனர். அதன்படி, நேற்று முன்தினம் இஸ்ரேல் மீது தொடர்ச்சியாக 60 ஏவுகணை ஏவி தாக்குதல் நடத்தியது.

இதைத் தொடர்ந்து, இஸ்ரேல் பதிலடித் தாக்குதலை நடத்தியது. அந்த வகையில், சொகுசு காரில் சென்ற ஹிஸ்புல்லா தீவிரவாத அமைப்பின் முக்கியத் தளபதியை குறிவைத்து இஸ்ரேல் வான் தாக்குதல் நடத்தியது. இதில், ஹிஸ்புல்லா தளபதி விஸ்ஸாம் அல் டவில் உயிரிழந்ததாக லெபனான் தெரிவித்திருக்கிறது.

லெபனான் நாட்டின் தெற்குப் பகுதியில் ரகசியமாக செயல்பட்டு வந்த ஹிஸ்புல்லா குழுவின் தளபதியாக செயல்பட்டு வந்தவர்தான் விஸ்ஸாம் அல் டவில் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags: attackkilledIsraelCommanderHezbolla
ShareTweetSendShare
Previous Post

அயோத்தி குறித்து தவறான தகவல் :சிருங்கேரி மடம் மறுப்பு!

Next Post

பிரதமர் மோடியின் பாராட்டு மகிழ்ச்சி அளிக்கிறது : பாடகர் ஹரிஹரன் நெகிழ்ச்சி!

Related News

முக்கிய சக்தியாக உருவெடுக்கும் ஜமாத்-இ-இஸ்லாமி – வங்கதேசத்தில் ஆட்சியை பிடிக்கத் துடிக்கும் இஸ்லாமிய குழுக்கள்

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

Load More

அண்மைச் செய்திகள்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

சென்னையில் பிரதமர் மாநாடு – இடம் தேர்வு பணியில் பாஜக மாநிலத்தலைவர்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies