இஸ்ரேல் தாக்குதல்: ஹிஸ்புல்லா முக்கியத் தளபதி பலி!
Sep 8, 2025, 03:09 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

இஸ்ரேல் தாக்குதல்: ஹிஸ்புல்லா முக்கியத் தளபதி பலி!

Web Desk by Web Desk
Jan 9, 2024, 04:49 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

லெபனான் நாட்டின் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் ஹிஸ்புல்லா தீவிரவாத அமைப்பின் முக்கியத் தளபதி கொல்லப்பட்டிருக்கிறார்.

பாலஸ்தீனத்தின் காஸா நகரை தங்களது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும் ஹமாஸ் தீவிரவாதிகள், கடந்தாண்டு அக்டோபர் மாதம் 7-ம் தேதி இஸ்ரேல் நாட்டின் மீது திடீர் ஏவுகணைத் தாக்குதல் நடத்தினர்.

மேலும், இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி இஸ்ரேலுக்குள் ஊடுருவிய ஹமாஸ் தீவிரவாதிகள், அப்பாவி மக்கள் மீது கண்மூடித்தனமாக துப்பாக்கிச் சூடு நடத்தினர். தவிர, 200-க்கும் மேற்பட்டோரை பிணைக் கைதிகளாகவும் பிடித்துச் சென்றனர்.

ஹமாஸ் தீவிரவாதிகளின் இத்தாக்குதலில், இஸ்ரேலில் 1,200 பேர் உயிரிழந்தனர். 3,500 பேர் காயமடைந்தனர். இதனால் நிலைகுலைந்துபோன இஸ்ரேல், பின்னர் சுதாரித்துக் கொண்டு ஹமாஸ் தீவிரவாதிகளுக்கு ஆக்ரோஷமாக பதிலடி கொடுக்கத் தொடங்கியது.

இஸ்ரேலின் இத்தாக்குதல் இன்றுவரை தொடர்ந்து வரும் நிலையில், லெபனான் நாட்டைச் சேர்ந்த ஹிஸ்புல்லா தீவிரவாதிகளும், ஏமன் நாட்டைச் சேர்ந்த ஹௌதி கிளர்ச்சியாளர்களும் ஹமாஸ் தீவிரவாதிகளுக்கு ஆதரவாக செயல்பட்டு வருகின்றனர்.

எனவே, இஸ்ரேல் நாட்டின் மீது அவ்வப்போது ஏவுகணைத் தாக்குதலை நடத்தி வருகின்றனர். இதற்கு இஸ்ரேலும் பதிலடி கொடுத்து வருகிறது. அந்த வகையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு லெபனான் நாட்டின் பெய்ரூட் நகர் மீது இஸ்ரேல் இராணுவம் நடத்திய ஆளில்லா விமானத் தாக்குதலில் ஹமாஸ் அமைப்பின் முக்கியத் தளபதியான சலே அல் அரூரி கொல்லப்பட்டார்.

இதனால் ஆத்திரமடைந்த ஹிஸ்புல்லா தீவிரவாதிகள், தக்க பதிலடி கொடுக்கப்படும் என்று இஸ்ரேலுக்கு எச்சரிக்கை விடுத்திருந்தனர். அதன்படி, நேற்று முன்தினம் இஸ்ரேல் மீது தொடர்ச்சியாக 60 ஏவுகணை ஏவி தாக்குதல் நடத்தியது.

இதைத் தொடர்ந்து, இஸ்ரேல் பதிலடித் தாக்குதலை நடத்தியது. அந்த வகையில், சொகுசு காரில் சென்ற ஹிஸ்புல்லா தீவிரவாத அமைப்பின் முக்கியத் தளபதியை குறிவைத்து இஸ்ரேல் வான் தாக்குதல் நடத்தியது. இதில், ஹிஸ்புல்லா தளபதி விஸ்ஸாம் அல் டவில் உயிரிழந்ததாக லெபனான் தெரிவித்திருக்கிறது.

லெபனான் நாட்டின் தெற்குப் பகுதியில் ரகசியமாக செயல்பட்டு வந்த ஹிஸ்புல்லா குழுவின் தளபதியாக செயல்பட்டு வந்தவர்தான் விஸ்ஸாம் அல் டவில் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags: attackkilledIsraelCommanderHezbolla
ShareTweetSendShare
Previous Post

அயோத்தி குறித்து தவறான தகவல் :சிருங்கேரி மடம் மறுப்பு!

Next Post

பிரதமர் மோடியின் பாராட்டு மகிழ்ச்சி அளிக்கிறது : பாடகர் ஹரிஹரன் நெகிழ்ச்சி!

Related News

நைஜீரியா : பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 60-க்கும் மேற்பட்டோர் பலி!

மும்பை : ஆயிரக்கணக்கான விநாயகர் சிலைகள் கிர்கான் சௌபட்டி கடற்கரையில் கரைப்பு!

உத்தராகண்ட் : தண்டவாளம் மீது பாறைகள், மரங்கள் விழுந்து போக்குவரத்து பாதிப்பு!

தூத்துக்குடி அருகே போலீசாரின் சிறப்பு கவனிப்புக்கு பிறகு மன்னிப்பு கேட்டு வீடியோ வெளியிட்ட ரவுடி!

ஆஸ்திரேலியாவில் குடும்பத்தினரை கொலை செய்த பெண்ணுக்கு 33 ஆண்டுகள் சிறை தண்டனை!

தெலுங்கானா : வெள்ளத்தில் சிக்கியிருந்த பேருந்தில் இருந்து பயணிகள் பத்திரமாக மீட்பு

Load More

அண்மைச் செய்திகள்

பிரான்ஸ் : நிலச்சரிவால் திகைத்த மக்கள் – வீடியோ வைரல்!

திருவண்ணாமலை : ஆவணி மாத பௌர்ணமியையொட்டி பக்தர்கள் கிரிவலம்!

“குட் பேட் அக்லி” திரைப்படத்தில் இளையராஜாவின் பாடல்களை பயன்படுத்த இடைக்கால தடை – சென்னை உயர் நீதிமன்றம்

பீகார் : காங்., எம்.பியை தோளில் சுமந்த விவசாயிகள் – விவசாயிகளை காங்கிரஸ் அவமதித்து விட்டதாக பாஜக கண்டனம்!

குறைந்த யமுனை நீர்மட்டம் – சீராகும் டெல்லியின் நிலைமை!

ஜிஎஸ்டி வரிக்குறைப்புக்கு தமிழக அரசும், திமுக கூட்டணி கட்சிகளும் நன்றி தெரிவிக்கவில்லை : தமிழிசை செளந்தரராஜன்

அமெரிக்க ஓபன் டென்னிஸ் – சாம்பியன் பட்டம் வென்றார் சபலென்கா!

உத்தரகாசி பகுதியில் மீண்டும் மேகவெடிப்பு!

வெளிநாடு பயணங்களை நிறைவு செய்து சென்னை திரும்பினார் முதலமைச்சர் ஸ்டாலின்!

தருமபுரி : பட்டா மாறுதலை ரத்து செய்ய கோரி பொதுமக்கள் காவல் நிலையம் முற்றுகை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies