ரிஷிகேஷ் அருகே கால்வாயில் பாய்ந்த ஜீப்: 2 வன அதிகாரிகள் உட்பட 4 பேர் பலி!
Jan 14, 2026, 05:35 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ரிஷிகேஷ் அருகே கால்வாயில் பாய்ந்த ஜீப்: 2 வன அதிகாரிகள் உட்பட 4 பேர் பலி!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Jan 9, 2024, 05:28 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ரிஷிகேஷ் அருகே சில்லா பகுதியில் உள்ள கால்வாயில் கார் விழுந்ததில் 2 வனத்துறை அதிகாரிகள் உட்பட 4 பேர் உயிரிழந்தனர்.

உத்தரகண்ட் மாநிலம் ராஜாஜி புலிகள் காப்பகத்துக்கின் ஜங்கிள் சஃபாரிக்காக மின்சார ஜீப் வாங்க முடிவு செய்யப்பட்டது. இதற்காக, மின்சார வாகன கம்பெனியைச் சேர்ந்த 2 பேர் சோதனை ஓட்டத்துக்காக நேற்று வாகனத்தை கொண்டு வந்திருந்தனர்.

இதையடுத்து, வனத்துறையைத் சேர்ந்த அதிகாரிகள் உட்பட 8 பேரும், மின்சார வாகனத்தின் நிறுவனத்தைச் சேர்ந்த 2 பேரும் என 10 பேர், மேற்கண்ட வாகனத்தின் சோதனை ஓட்டத்துக்காக நேற்று இரவு எடுத்துச் சென்றனர்.

ரிஷிகேஷில் இருந்து சில்லா நோக்கி வாகனம் வந்து கொண்டிருந்த நிலையில், சில்லா பவர்ஹவுஸ் அருகே வந்தபோது திடீரென வாகனத்தின் டயர் வெடித்தது. இதனால் கட்டுப்பாட்டை இழந்த வாகனம் சாலையோரம் இருந்த மரத்தில் மோதி, சில்லா சக்தி கால்வாயின் தடுப்புச் சுவர் மீதும் மோதிக் கவிழ்ந்தது.

இதையடுத்து, இந்த வாகனத்தின் பின்னால் வந்த மற்றொரு வாகனத்தைச் சேர்ந்த பயணிகள் விபத்து குறித்து போலீஸாருக்குத் தகவல் தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து, போலீஸாரும், பேரிடர் மீட்புப் படையினரும் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து மீட்புப் பணியில் ஈடுபட்டனர்.

எனினும், இவ்விபத்தில் வனத்துறை அதிகாரிகள் ஷைலேஷ் கில்டியால், பிரமோத் தியானி, வாகன ஓட்டுனர் சைஃப் அலிகான், வன ஊழியர் குல்ராஜ் சிங் ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும், 5 பேர் காயமடைந்தனர். விபத்தில் உயிரிழந்த ஷைலேஷ் கில்டியால் பிரதமர் அலுவலக துணைச் செயலாளர் மங்கேஷ் கில்டியாலின் சகோதரர் என்பது குறிப்பிடத்தக்கது.

பின்னர், காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு, ரிஷிகேஷில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அதேசமயம், வாகனம் விபத்துக்குள்ளானதில் வன விலங்கு பாதுகாப்பு அதிகாரி அலோகி கால்வாய்க்குள் விழுந்ததில் காணாமல் போய் விட்டார்.

இதையடுத்து, அலோகியை தேடும் பணி நடந்து வருகிறது. இதுவரை அவரது உடல் கிடைக்கவில்லை. இது குறித்து போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணைக்குப் பிறகு, விபத்துக்கான சரியான காரணம் தெரியவரும்.

இந்த நிலையில், விபத்தில் வனத்துறை ஊழியர்கள் உயிரிழந்ததற்கு, உத்தரகண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமி இரங்கல் தெரிவித்திருக்கிறார். “வாகன விபத்தில் உயிரிழந்த ஊழியர்களின் ஆன்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கிறேன். அவர்களை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு மனவலிமையை அளிக்கவும், காயமடைந்தவர்கள் விரைவில் குணமடையவும் இறைவனை பிரார்த்திக்கிறேன்” என்று தெரிவித்திருக்கிறார்.

அதேபோல, உத்தரகண்ட் வனத்துறை அமைச்சரும் இரங்கல் தெரிவித்திருக்கிறார். “2 ரேஞ்சர்கள் உட்பட எங்கள் பணியாளர்கள் 4 பேர் உயிரிழந்ததோடு, விலங்குகள் பாதுகாப்பு அதிகாரி ஒருவரை காணவில்லை என்கிற சோகமான சம்பவத்தை நான் அறிந்தேன். 5 பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பான விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளேன். துயருற்ற குடும்பத்துக்கு அந்தச் சூழலை எதிர்கொள்ளும் தைரியத்தை தரவேண்டும் என்று நான் கடவுளிடம் பிரார்த்தனை செய்கிறேன். காணாமல் போன வனத்துறை பணியாளரை மீட்பதற்கான தேடுதல் பணி நடைபெற்று வருகிறது” என்று தெரிவித்திருக்கிறார்.

Tags: RisikeshForest RangersVehicle accident4 dead
ShareTweetSendShare
Previous Post

பிரதமர் மோடியின் பாராட்டு மகிழ்ச்சி அளிக்கிறது : பாடகர் ஹரிஹரன் நெகிழ்ச்சி!

Next Post

பிரேசிலில் லாரி, மினி பஸ் மோதல்: 25 பேர் பலி!

Related News

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

Load More

அண்மைச் செய்திகள்

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

சென்னையில் பிரதமர் மாநாடு – இடம் தேர்வு பணியில் பாஜக மாநிலத்தலைவர்

தொடரும் ஆபரேஷன் சிந்தூர் – பாகிஸ்தானுக்கு ராணுவ தளபதி எச்சரிக்கை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies