ரிஷிகேஷ் அருகே கால்வாயில் பாய்ந்த ஜீப்: 2 வன அதிகாரிகள் உட்பட 4 பேர் பலி!
Aug 20, 2025, 04:33 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ரிஷிகேஷ் அருகே கால்வாயில் பாய்ந்த ஜீப்: 2 வன அதிகாரிகள் உட்பட 4 பேர் பலி!

Web Desk by Web Desk
Jan 9, 2024, 05:28 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ரிஷிகேஷ் அருகே சில்லா பகுதியில் உள்ள கால்வாயில் கார் விழுந்ததில் 2 வனத்துறை அதிகாரிகள் உட்பட 4 பேர் உயிரிழந்தனர்.

உத்தரகண்ட் மாநிலம் ராஜாஜி புலிகள் காப்பகத்துக்கின் ஜங்கிள் சஃபாரிக்காக மின்சார ஜீப் வாங்க முடிவு செய்யப்பட்டது. இதற்காக, மின்சார வாகன கம்பெனியைச் சேர்ந்த 2 பேர் சோதனை ஓட்டத்துக்காக நேற்று வாகனத்தை கொண்டு வந்திருந்தனர்.

இதையடுத்து, வனத்துறையைத் சேர்ந்த அதிகாரிகள் உட்பட 8 பேரும், மின்சார வாகனத்தின் நிறுவனத்தைச் சேர்ந்த 2 பேரும் என 10 பேர், மேற்கண்ட வாகனத்தின் சோதனை ஓட்டத்துக்காக நேற்று இரவு எடுத்துச் சென்றனர்.

ரிஷிகேஷில் இருந்து சில்லா நோக்கி வாகனம் வந்து கொண்டிருந்த நிலையில், சில்லா பவர்ஹவுஸ் அருகே வந்தபோது திடீரென வாகனத்தின் டயர் வெடித்தது. இதனால் கட்டுப்பாட்டை இழந்த வாகனம் சாலையோரம் இருந்த மரத்தில் மோதி, சில்லா சக்தி கால்வாயின் தடுப்புச் சுவர் மீதும் மோதிக் கவிழ்ந்தது.

இதையடுத்து, இந்த வாகனத்தின் பின்னால் வந்த மற்றொரு வாகனத்தைச் சேர்ந்த பயணிகள் விபத்து குறித்து போலீஸாருக்குத் தகவல் தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து, போலீஸாரும், பேரிடர் மீட்புப் படையினரும் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து மீட்புப் பணியில் ஈடுபட்டனர்.

எனினும், இவ்விபத்தில் வனத்துறை அதிகாரிகள் ஷைலேஷ் கில்டியால், பிரமோத் தியானி, வாகன ஓட்டுனர் சைஃப் அலிகான், வன ஊழியர் குல்ராஜ் சிங் ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும், 5 பேர் காயமடைந்தனர். விபத்தில் உயிரிழந்த ஷைலேஷ் கில்டியால் பிரதமர் அலுவலக துணைச் செயலாளர் மங்கேஷ் கில்டியாலின் சகோதரர் என்பது குறிப்பிடத்தக்கது.

பின்னர், காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு, ரிஷிகேஷில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அதேசமயம், வாகனம் விபத்துக்குள்ளானதில் வன விலங்கு பாதுகாப்பு அதிகாரி அலோகி கால்வாய்க்குள் விழுந்ததில் காணாமல் போய் விட்டார்.

இதையடுத்து, அலோகியை தேடும் பணி நடந்து வருகிறது. இதுவரை அவரது உடல் கிடைக்கவில்லை. இது குறித்து போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணைக்குப் பிறகு, விபத்துக்கான சரியான காரணம் தெரியவரும்.

இந்த நிலையில், விபத்தில் வனத்துறை ஊழியர்கள் உயிரிழந்ததற்கு, உத்தரகண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமி இரங்கல் தெரிவித்திருக்கிறார். “வாகன விபத்தில் உயிரிழந்த ஊழியர்களின் ஆன்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கிறேன். அவர்களை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு மனவலிமையை அளிக்கவும், காயமடைந்தவர்கள் விரைவில் குணமடையவும் இறைவனை பிரார்த்திக்கிறேன்” என்று தெரிவித்திருக்கிறார்.

அதேபோல, உத்தரகண்ட் வனத்துறை அமைச்சரும் இரங்கல் தெரிவித்திருக்கிறார். “2 ரேஞ்சர்கள் உட்பட எங்கள் பணியாளர்கள் 4 பேர் உயிரிழந்ததோடு, விலங்குகள் பாதுகாப்பு அதிகாரி ஒருவரை காணவில்லை என்கிற சோகமான சம்பவத்தை நான் அறிந்தேன். 5 பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பான விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளேன். துயருற்ற குடும்பத்துக்கு அந்தச் சூழலை எதிர்கொள்ளும் தைரியத்தை தரவேண்டும் என்று நான் கடவுளிடம் பிரார்த்தனை செய்கிறேன். காணாமல் போன வனத்துறை பணியாளரை மீட்பதற்கான தேடுதல் பணி நடைபெற்று வருகிறது” என்று தெரிவித்திருக்கிறார்.

Tags: 4 deadRisikeshForest RangersVehicle accident
ShareTweetSendShare
Previous Post

பிரதமர் மோடியின் பாராட்டு மகிழ்ச்சி அளிக்கிறது : பாடகர் ஹரிஹரன் நெகிழ்ச்சி!

Next Post

பிரேசிலில் லாரி, மினி பஸ் மோதல்: 25 பேர் பலி!

Related News

பரிதவிக்கும் பயனாளர்கள் : அடிப்படை வசதி இல்லாத பாஸ்போர்ட் அலுவலகம்!

மருத்துவத் துறையில் கலக்கும் மகாராஷ்டிரா!

அகமதாபாத் : பள்ளியில் கத்திக்குத்து – 10-ம் வகுப்பு மாணவன் படுகொலை!

சென்னை : திட்ட அனுமதி பெறாமல் கட்டப்பட்ட தனியார் மருத்துவமனைக்கு சீல்!

ஏழுமலையானுக்கு 121 கிலோ தங்கத்தை காணிக்கையாக வழங்கும் பக்தர்!

மதுரையில் தவெக மாநாடு – டாஸ்மாக் கடைகள் மூடப்படும் என்ற மாவட்ட ஆட்சியரின் அறிவிப்பு வாபஸ்!

Load More

அண்மைச் செய்திகள்

உக்ரைனின் புதிய Flamingo ஏவுகணை!

டெல்லி : 50 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் – போலீசார் தீவிர சோதனை!

சென்னை மாநகராட்சி நிறைவேற்றிய தீர்மானத்தை ரத்து செய்ய முடியாது : சென்னை உயர்நீதிமன்றம்

ஜம்மு-காஷ்மீர் : நந்தி சுரங்கப்பாதை அருகே நிலச்சரிவு – போக்குவரத்து தடை !

அமெரிக்காவில் உணவகத்தின் கண்ணாடி மீது திடீரென வந்து மோதிய கார்!

பைக் பரிசளித்த ரஷ்ய அதிபர் – வாயடைத்துப்போன அமெரிக்கர்!

உத்தரப்பிரதேசம் : ஆக்கிரமிப்பு கடைகள், வீடுகள் இடித்து அகற்றம்!

டெல்லி முதலமைச்சர் ரேகா குப்தா மீது தாக்குதல் – மருத்துவமனையில் அனுமதி!

ஸ்வீடன் : மரத்தால் கட்டப்பட்ட 113 ஆண்டு பழமையான தேவாலயம் – 5 கி.மீ துாரத்துக்கு நகர்த்தும் நடவடிக்கை தொடக்கம்!

சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு திமுக ஆதரவளிக்க வேண்டும் – அண்ணாமலை

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies