இந்தியாவில் நடைபெற்று வரும் தொடரில் நேற்று நடைபெற்றப் போட்டியில் பெங்கால் வாரியர்ஸ் 20 புள்ளிகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.
இந்தியாவில் உள்ள மாநிலங்களுக்கிடையே நடைபெறும் கபடி லீக் தொடரில் மொத்தம் 12 அணிகள் பங்குபெற்று விளையாடி வருகின்றன.
பெங்கால் வாரியர்ஸ், பெங்களூரு புல்ஸ், தபாங் டெல்லி கே.சி, குஜராத் ஜெயண்ட்ஸ், ஹரியானா ஸ்டீலர்ஸ், ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ், பாட்னா பைரேட்ஸ், புனேரி பல்டன், தமிழ் தலைவாஸ், தெலுங்கு டைட்டன்ஸ், யு மும்பா மற்றும் உ.பி. யோதாஸ் ஆகிய அணிகள் பங்குபெற்றுள்ளனர்.
இதில் நேற்று மும்பையில் நடைபெற்ற போட்டியில் தெலுங்கு டைட்டன்ஸ் மற்றும் பெங்கால் வாரியர்ஸ் அணிகள் விளையாடின. இதில் பெங்கால் வாரியர்ஸ் அணி 46-26 என 20 புள்ளிகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது.
இந்த வெற்றியில் மூலம் பெங்கால் வாரியர்ஸ் அணி விளையாடிய 11 போட்டிகளில் 4 போட்டியில் வெற்றி பெற்று, 5 போட்டிகளில் தோல்வியடைந்து புள்ளி பட்டியலில் 9 வது இடத்தில் உள்ளது.
அதேபோல் தெலுங்கு டைட்டன்ஸ் அணி தான் விளையாடிய 11 போட்டிகளில் 1 போட்டியில் மட்டுமே வெற்றி பெற்று 10 போட்டிகளில் தோல்வியடைந்து புள்ளிபட்டியலில் கடைசி இடத்தில் அதாவது 12வது இடத்தில் உள்ளது.