நாளை முதல் வழக்கம் போல் பேருந்துகள் இயங்கும் – முழு விவரம்!
Jul 26, 2025, 09:36 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

நாளை முதல் வழக்கம் போல் பேருந்துகள் இயங்கும் – முழு விவரம்!

Web Desk by Web Desk
Jan 10, 2024, 07:04 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

புதிய ஓய்வூதியத் திட்டத்தைக் கைவிட வேண்டும், காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை முன்வைத்து அரசு போக்குவரத்துக் கழக தொழிலாளா்கள் 9-ம் தேதி முதல் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுவதாக முறைப்படி அறிவித்தனா்.

இதையடுத்து, தொழிலாளா்கள் நலத்துறை, போக்குவரத்துத்துறை இணைந்து போக்குவரத்துத் தொழிலாளா்களுடன் முத்தரப்பு பேச்சுவாா்த்தை நடைபெற்றது.

இது தொடா்பாக திங்கள்கிழமை, சென்னையில் நடைபெற்ற முத்தரப்பு பேச்சுவாா்த்தையும் தோல்வியில் முடிந்தது. இதனால், செவ்வாய்க்கிழமை (ஜன. 9) முதல் திட்டமிட்டபடி வேலை நிறுத்தப் போராட்டம் நடைபெற்றது.

தலைநகர் சென்னை உள்ளிட்ட பெரும்பாலான போக்குவரத்துக் கழகங்களிலும் பயிற்சி ஓட்டுநா்கள், நடத்துநா்கள் மூலம் பேருந்துகள் இயக்கப்பட்டன. இதற்கு தொழிற்சங்கத்தினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். கிராமப்புறங்களில் பெரும்பாலான பேருந்துகள் இயக்கப்படவில்லை. இதனால் பயணிகள் பெரும் சிரமத்திற்கு ஆளானார்கள்.

போராட்டம் (10-ம் தேதி) 2-வது நாளை எட்டியபோது, வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்கள் பல்வேறு மாவட்டங்களில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த நிலையில், பொங்கல் பண்டிகை வரும் போது, போக்குவரத்து தொழிலாளர்கள் திட்டமிட்டு போராட்டம் நடத்துவதாகவும், இதனால், பொது மக்கள் மிகுந்த பாதிப்புக்கு உள்ளாவதாகவும், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இது தொடர்பான வழக்கு விசாரணையின் போது, பொங்கல் நேரத்தில் போராட்டம் நடத்தி பொதுமக்களுக்கு ஏன் இடையூறு செய்கிறீர்கள் என்று கேள்வி எழுப்பிய உயர்நீதிமன்றம், விழாக்காலத்தில் போராட்டம் நடத்துவது முறையற்றது.

போராடுவதற்கு உரிமை இல்லை என நீதிமன்றம் எப்போதும் சொல்லவில்லை. இந்த போராட்டத்தால் அதிகம் பாதிக்கப்படுவது பொதுமக்கள்தான்.

அரசு போக்குவரத்து ஊழியர் சங்கங்கள் ஏன் பிடிவாதமாக உள்ளீர்கள்? இந்த விவகாரத்தில் தீர்வு காண்பதில் என்ன பிரச்சினை? என சரமாரியாகக் கேள்வி எழுப்பியது.

பேச்சுவார்த்தை முற்று பெறவில்லை என்றும், அடுத்த கட்ட பேச்சுவார்த்தை ஜன 19-ம் தேதிக்கு தள்ளி வைக்க உள்ளதாகவும் தமிழக அரசு பதில் தெரிவித்தது.

ஓய்வூதியர்களுக்கு மட்டுமாவது ஜனவரி மாதத்திற்கான அகவிலைப்படி வழங்க தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதனையடுத்து, போராட்டம் தற்காலிகமாக வாபஸ் பெறுவதாக தொழிற்சங்கத்தினர் தெரிவித்தனர். இதனால், 11-ம் தேதி முதல் வழக்கம் போல் பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.

Tags: Bustamilnadu government bus
ShareTweetSendShare
Previous Post

சனாதனத்தை மீண்டும் அவமதித்த இண்டி கூட்டணி : ஸ்மிருதி ராணி

Next Post

இந்திய உற்பத்திப் பொருட்கள் உலகளாவிய அங்கீகாரத்தைப் பெறுகின்றன! : பிரதமர் மோடி

Related News

கங்கைகொண்ட சோழீஸ்வரம் : தென்கிழக்கு ஆசியாவை ஆண்ட ராஜேந்திர சோழன்!

சீன இன்வெர்ட்டர்களால் சைபர் தாக்குதல் அச்சம் : இந்திய அரசு அதிரடி!

பிரதமர் மோடியின் வருகையால் இந்திய சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரிக்கும் – மாலத்தீவு சுற்றுலாத் துறை அமைச்சர் நம்பிக்கை!

கேரளாவில் சரக்கு வாகனத்தை முட்டித் தள்ளிய காட்டு யானைகள்!

UPI பரிவர்த்தனை ஆக.1 முதல் புது ரூல்ஸ் : பயனர்கள் கவனிக்க வேண்டியது என்ன?

உதகையில் கன மழை – 3 சுற்றுலா மையங்கள் மூடல்!

Load More

அண்மைச் செய்திகள்

நாடாளுமன்றம் முடக்கம் – 2 நாளில் ரூ.25 கோடி வீண் – மக்கள் பணத்தை வீணடிக்கும் எதிர்க்கட்சிகள்!

மாலத்தீவு துணை அதிபர் உசேன் முகமதுவுடன் பிரதமர் மோடி சந்திப்பு!

பிரதமர் மோடியின் தமிழக வருகையை திருவிழாவாக கொண்டாட வேண்டும் – எல்.முருகன்

திருவள்ளூர் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு – கைது செய்யப்பட்ட இளைஞருக்கு மருத்துவ பரிசோதனை!

கங்கைகொண்ட சோழபுர விழாவில் பிரதமர் பங்கேற்பது தமிழர்களை மகிழ்ச்சி கடலில் ஆழ்த்தியுள்ளது – எல்.முருகன்

அன்புக்குரிய பிரதமரை வரவேற்பதில் தமிழகம் பெருமிதம் கொள்கிறது – அண்ணாமலை

பாரதப் பிரதமரை வரவேற்பதில் பெருமை கொள்கிறது தமிழகம் – நயினார் நாகேந்திரன்!

ஊதிய முரண்பாடுகளை களையவில்லை எனில் சிறை நிரப்பும் போராட்டம் – இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர் இயக்கம் எச்சரிக்கை!

புவனகிரி சிறுமி பாலியல் வன்கொடுமை – காதலன் உள்ளிட்ட 4 பேர் கைது!

பிரதமர் மோடி தமிழகம் வருகை – அரியலூர் மாவட்டத்தில் தீவிர பாதுகாப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies