என்.சி.சி மாணவர்கள் வெற்றி, தோல்வியைப் பற்றி கவலைப்படாமல் வாழ்க்கையில் நம்பிக்கையுடன் இருக்க வேண்டும்! - ஜெனரல் அனில் சவுகான்
Jan 14, 2026, 11:08 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

என்.சி.சி மாணவர்கள் வெற்றி, தோல்வியைப் பற்றி கவலைப்படாமல் வாழ்க்கையில் நம்பிக்கையுடன் இருக்க வேண்டும்! – ஜெனரல் அனில் சவுகான்

Murugesan M by Murugesan M
Jan 12, 2024, 07:48 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

என்.சி.சி குடியரசு தின முகாம் 2024-ஐ பாதுகாப்புப் படைத் தலைமைத் தளபதி பார்வையிட்டார்.

புதுதில்லி கண்டோன்மெண்டில் உள்ள என்.சி.சி குடியரசு தின முகாம் 2024-ஐ பாதுகாப்பு படைகளின் தலைமை தளபதி (சி.டி.எஸ்) ஜெனரல் அனில் சவுகான் பார்வையிட்டார்.  என்.சி.சி டி.ஜி லெப்டினன்ட் ஜெனரல் குர்பிர்பால் சிங் அவரை வரவேற்றார். பின்னர், சி.டி.எஸ், என்.சி.சியின் ராணுவம், கடற்படை மற்றும் விமானப்படையைச் சேர்ந்த கேடட்களின் ‘ அணிவகுப்பு மரியாதையை ஏற்றார். இதனைத் தொடர்ந்து பிலானியின் பிட்ஸ் பெண் கேடட் இசைக்குழுவின் அற்புதமான இசை நிகழ்ச்சி நடைபெற்றது.

பின்னர், இந்நிகழ்ச்சியில் பேசிய முப்படைகளின் தலைமைத் தளபதி,

கேடட்களின் அற்புதமான அணிவகுப்பு , முன்மாதிரியான மாசற்ற பயிற்சியை வழங்கியதற்காகப் பாராட்டினார். ‘ஒற்றுமை மற்றும் ஒழுக்கம்’ என்ற அதன் குறிக்கோளுக்கு உண்மையாக என்.சி.சி ஒரு சாதாரண தொடக்கத்தில் இருந்து 17 லட்சத்துக்கும் மேற்பட்ட கேடட்களைக் கொண்ட உலகின் மிகப்பெரிய சீருடை இளைஞர் அமைப்பாக வளர்ந்துள்ளது என்று  கூறினார். இந்த நாட்டின் இளைஞர்களிடையே ஒழுக்கம், தலைமைத்துவம், தோழமை போன்ற பண்புகளை வளர்ப்பதில் என்.சி.சியின் பங்களிப்பை அவர் பாராட்டினார்.

தேசத்தைக் கட்டியெழுப்புவதில் என்.சி.சி கேடட்களின் பாராட்டத்தக்க முயற்சிகளுக்கு அவர் பாராட்டு தெரிவித்தார்.

என்.சி.சி பாடத்திட்டத்தின் முக்கியக் கூறுகளான விளையாட்டு மற்றும் சாகச நடவடிக்கைகளில் என்.சி.சி கேடட்களின் பங்கேற்பு குறித்தும் அவர் குறிப்பிட்டார்.

சுப்ரதோ கோப்பை மற்றும் ஜவஹர் லால் நேரு ஹாக்கி சாம்பியன்ஷிப்பில் என்.சி.சி கேடட் அணிகள் மேற்கொண்ட சாதனைகளைப் பற்றி அறிந்து அவர் மகிழ்ச்சியடைந்தார். மாவ்லங்கர் துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப்பில் வென்ற என்.சி.சி கேடட்களையும் அவர் பாராட்டினார்.

என்.சி.சி கேடட்கள் சிறந்து விளங்க பாடுபட வேண்டும் என்றும் வெற்றி அல்லது தோல்வியைப் பற்றி கவலைப்படாமல் வாழ்க்கையில் நம்பிக்கையுடன் இருக்க வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தினார்.

17 தேசிய மாணவர் படை இயக்ககங்களைச் சேர்ந்த மாணவர்களால் பல்வேறு சமூக விழிப்புணர்வு கருப்பொருள்களை சித்தரிக்கும் வகையில் தயாரிக்கப்பட்ட ‘கொடிப் பகுதி’யை சி.டி.எஸ் ஆய்வு செய்தார்.  என்.சி.சி கலையரங்கத்தில் திறமையான கேடட்களின் கண்கவர் ‘கலாச்சார நிகழ்ச்சியை’  சிறப்பு விருந்தினர்கள் பார்வையிட்டனர்.

Tags: Anil Chauhan today praised NCC cadets
ShareTweetSendShare
Previous Post

ஹௌதி கிளர்ச்சியாளர்கள் மீது அமெரிக்கா, பிரிட்டன் தாக்குதல்!

Next Post

பொங்கல் பரிசுத் தொகையை நிறுத்துவதா? – வானதி சீனிவாசன் கேள்வி?

Related News

மதுராந்தகத்தில் ஜன.23 ஆம் தேதி தேசிய ஜனநாயக கூட்டணி மாநாடு – மாநாட்டிற்கான பூமி பூஜையில் ஏராளமானோர் பங்கேற்பு!

தங்கம் விலை புதிய உச்சம்: சவரனுக்கு ரூ.880 உயர்வு

500 சதவீதி வரிவிதிப்பு அச்சம் – பின்னலாடை துறைக்கு சலுகை வழங்க கோரிக்கை!

முக்கிய சக்தியாக உருவெடுக்கும் ஜமாத்-இ-இஸ்லாமி – வங்கதேசத்தில் ஆட்சியை பிடிக்கத் துடிக்கும் இஸ்லாமிய குழுக்கள்

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

Load More

அண்மைச் செய்திகள்

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies