என்.சி.சி மாணவர்கள் வெற்றி, தோல்வியைப் பற்றி கவலைப்படாமல் வாழ்க்கையில் நம்பிக்கையுடன் இருக்க வேண்டும்! - ஜெனரல் அனில் சவுகான்
Jul 25, 2025, 07:18 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

என்.சி.சி மாணவர்கள் வெற்றி, தோல்வியைப் பற்றி கவலைப்படாமல் வாழ்க்கையில் நம்பிக்கையுடன் இருக்க வேண்டும்! – ஜெனரல் அனில் சவுகான்

Web Desk by Web Desk
Jan 12, 2024, 07:48 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

என்.சி.சி குடியரசு தின முகாம் 2024-ஐ பாதுகாப்புப் படைத் தலைமைத் தளபதி பார்வையிட்டார்.

புதுதில்லி கண்டோன்மெண்டில் உள்ள என்.சி.சி குடியரசு தின முகாம் 2024-ஐ பாதுகாப்பு படைகளின் தலைமை தளபதி (சி.டி.எஸ்) ஜெனரல் அனில் சவுகான் பார்வையிட்டார்.  என்.சி.சி டி.ஜி லெப்டினன்ட் ஜெனரல் குர்பிர்பால் சிங் அவரை வரவேற்றார். பின்னர், சி.டி.எஸ், என்.சி.சியின் ராணுவம், கடற்படை மற்றும் விமானப்படையைச் சேர்ந்த கேடட்களின் ‘ அணிவகுப்பு மரியாதையை ஏற்றார். இதனைத் தொடர்ந்து பிலானியின் பிட்ஸ் பெண் கேடட் இசைக்குழுவின் அற்புதமான இசை நிகழ்ச்சி நடைபெற்றது.

பின்னர், இந்நிகழ்ச்சியில் பேசிய முப்படைகளின் தலைமைத் தளபதி,

கேடட்களின் அற்புதமான அணிவகுப்பு , முன்மாதிரியான மாசற்ற பயிற்சியை வழங்கியதற்காகப் பாராட்டினார். ‘ஒற்றுமை மற்றும் ஒழுக்கம்’ என்ற அதன் குறிக்கோளுக்கு உண்மையாக என்.சி.சி ஒரு சாதாரண தொடக்கத்தில் இருந்து 17 லட்சத்துக்கும் மேற்பட்ட கேடட்களைக் கொண்ட உலகின் மிகப்பெரிய சீருடை இளைஞர் அமைப்பாக வளர்ந்துள்ளது என்று  கூறினார். இந்த நாட்டின் இளைஞர்களிடையே ஒழுக்கம், தலைமைத்துவம், தோழமை போன்ற பண்புகளை வளர்ப்பதில் என்.சி.சியின் பங்களிப்பை அவர் பாராட்டினார்.

தேசத்தைக் கட்டியெழுப்புவதில் என்.சி.சி கேடட்களின் பாராட்டத்தக்க முயற்சிகளுக்கு அவர் பாராட்டு தெரிவித்தார்.

என்.சி.சி பாடத்திட்டத்தின் முக்கியக் கூறுகளான விளையாட்டு மற்றும் சாகச நடவடிக்கைகளில் என்.சி.சி கேடட்களின் பங்கேற்பு குறித்தும் அவர் குறிப்பிட்டார்.

சுப்ரதோ கோப்பை மற்றும் ஜவஹர் லால் நேரு ஹாக்கி சாம்பியன்ஷிப்பில் என்.சி.சி கேடட் அணிகள் மேற்கொண்ட சாதனைகளைப் பற்றி அறிந்து அவர் மகிழ்ச்சியடைந்தார். மாவ்லங்கர் துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப்பில் வென்ற என்.சி.சி கேடட்களையும் அவர் பாராட்டினார்.

என்.சி.சி கேடட்கள் சிறந்து விளங்க பாடுபட வேண்டும் என்றும் வெற்றி அல்லது தோல்வியைப் பற்றி கவலைப்படாமல் வாழ்க்கையில் நம்பிக்கையுடன் இருக்க வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தினார்.

17 தேசிய மாணவர் படை இயக்ககங்களைச் சேர்ந்த மாணவர்களால் பல்வேறு சமூக விழிப்புணர்வு கருப்பொருள்களை சித்தரிக்கும் வகையில் தயாரிக்கப்பட்ட ‘கொடிப் பகுதி’யை சி.டி.எஸ் ஆய்வு செய்தார்.  என்.சி.சி கலையரங்கத்தில் திறமையான கேடட்களின் கண்கவர் ‘கலாச்சார நிகழ்ச்சியை’  சிறப்பு விருந்தினர்கள் பார்வையிட்டனர்.

Tags: Anil Chauhan today praised NCC cadets
ShareTweetSendShare
Previous Post

ஹௌதி கிளர்ச்சியாளர்கள் மீது அமெரிக்கா, பிரிட்டன் தாக்குதல்!

Next Post

பொங்கல் பரிசுத் தொகையை நிறுத்துவதா? – வானதி சீனிவாசன் கேள்வி?

Related News

ராஜேந்திர சோழன் நினைவு நாணயத்தை வெளியிடுகிறார் பிரதமர் மோடி!

கிட்னி திருட்டு இல்லை – முறைகேடு, மா சுப்ரமணியன் : இப்படி சொல்வதற்கு உங்களுக்கு வெட்கமாக இல்லையா? – அண்ணாமலை கேள்வி!

தொழிலாளர்கள் தங்கும் விடுதி : திறந்து 3 மாதங்களாகியும் செயல்படாத அவலம்!

மத்திய அரசின் நிதி எங்கு தான் செல்கிறது? : அண்ணாமலை கேள்வி!

கோவை குண்டுவெடிப்பில் கைதான டெய்லர் ராஜா மீது மேலும் 2 வழக்குகள்!

சிறுவன் கடத்தப்பட்ட வழக்கு : நாடு போலீஸ் ராஜ்ஜியத்திற்கு செல்கிறதோ?- சென்னை உயர்நீதிமன்றம் காட்டம்!

Load More

அண்மைச் செய்திகள்

கங்கை கொண்ட சோழபுரம் பிரதமர் மோடி வருகை : ஹெலிகாப்டரை தரையிறக்கி பாதுகாப்புத்துறை அதிகாரிகள் சோதனை!

டிரான்ஸ்பார்மர்களை கொள்முதல் டெண்டர் ஒதுக்கீட்டில் முறைகேடு : செந்தில் பாலாஜிக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

நவீன ட்ரோன்களை உருவாக்க வேண்டியது அவசியம் : முப்படைகளின் தலைமைத் தளபதி அனில் சவுஹான்

திருப்பூர் : கர்ப்பிணி பெண்ணுக்கு காலாவதியான ஓ.ஆர்.எஸ் பவுடர் வழங்கியதால் அதிர்ச்சி!

போக்சோ சட்டத்தில் வயது வரம்பை குறைக்க முடியாது – மத்திய அரசு

குடியரசு துணைத் தலைவர் தேர்தல் – அதிகாரி நியமனம்!

நார்டன் மோட்டார் சைக்கிளை பார்வையிட்ட இரு நாட்டு பிரதமர்கள்!

ப்ரீ புக்கிங்கில் வசூலை குவிக்கும் கூலி திரைப்படம்!

நீலகிரி : லாரி மோதி கார் பள்ளத்தில் கவிழ்ந்ததில் ஒருவர் பலி!

தாய்லாந்து – கம்போடியா இடையே ஏற்பட்ட மோதல் -11 பேர் கொல்லப்பட்டனர்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies