ஹௌதி கிளர்ச்சியாளர்கள் மீது அமெரிக்கா, பிரிட்டன் தாக்குதல்!
Jun 14, 2026, 11:46 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஹௌதி கிளர்ச்சியாளர்கள் மீது அமெரிக்கா, பிரிட்டன் தாக்குதல்!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Jan 12, 2024, 07:40 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

செங்கடலில் சரக்குக் கப்பல்கள் மீதான தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், ஏமனின் ஹௌதி அமைப்பினரை குறிவைத்து அமெரிக்கா, பிரிட்டன் ஆகிய நாடுகள் வான்வழி தாக்குதல் நடத்தி இருக்கின்றன.

இஸ்ரேல் மீது பாலஸ்தீனத்தின் காஸா நகரைச் சேர்ந்த ஹமாஸ் தீவிரவாதிகள், கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 7-ம் தேதி திடீர் ஏவுகணை தாக்குதல் நடத்தினர். இதற்கு, கடந்த 3 மாதங்களுக்கும் மேலாக இஸ்ரேல் பதிலடி கொடுத்து வருகிறது.

இப்போரில் லெபனான் நாட்டைச் சேர்ந்த ஹிஸ்புல்லா தீவிரவாதிகளும், ஏமன் நாட்டைச் சேர்ந்த ஹௌதி கிளர்ச்சியாளர்களும் ஹமாஸ் தீவிரவாதிகளுக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர். எனவே, ஹிஸ்புல்லா அமைப்பினர் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தி வருகின்றனர்.

பதிலுக்கு, செங்கடலில் செல்லும் சரக்குக் கப்பல்கள் மீது ஹௌதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் நடத்தி வருகின்றனர். இந்த தாக்குதலை நிறுத்தும்படி ஐ.நா.வும், அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகளும் எச்சரிக்கை விடுத்து வந்தன. ஆனால், ஹௌதி கிளர்ச்சியாளர்கள் பொருட்படுத்தவில்லை.

இதையடுத்து, அமெரிக்காவும், பிரிட்டனும், ஏமன் நாட்டில் ஹௌதி கிளர்ச்சியாளர்களை குறிவைத்து போர் விமானங்கள் மூலம் வான்வழித் தாக்குதலும், கப்பல்படை மூலம் தாக்குதலும் நடத்தி இருக்கின்றன.

ஏமன் நாட்டின் சனா, அல் ஹுதைதா, சத்தா, தாமர் ஆகிய நகரங்களின் மீது இத்தாக்குதல் நடத்தப்பட்டிருக்கிறது.

இதுகுறித்து அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கூறுகையில், “எங்களது நாட்டவரை தாக்கினால் பொறுத்துக் கொள்ள மாட்டோம் என்பதை வெளிப்படுத்த இலக்குகளை குறிவைத்து தாக்கி வருகிறோம்” என்றார்.

பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக் கூறுகையில், “செங்கடலில் சரக்குக் கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தியதற்கு பதிலடி கொடுக்கப்படுகிறது. சர்வதேச அமைப்புகளின் தொடர்ச்சியான எச்சரிக்கையை மீறி ஏமன் தாக்குதல் நடத்தியதால் பதில் தாக்குதல் நடத்தப்படுகிறது” என்றார்.

அமெரிக்காவும், பிரிட்டனும் தாக்குதல் நடத்திய நிலையில், இஸ்ரேலுக்குச் செல்லும் அனைத்து கப்பல்களும் தாக்கப்படும் என்று ஹௌதி அமைப்பு அதிரடியாக அறிவித்திருக்கிறது.

இதனிடையே, ஏமன் மீதான தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்து ஓமன் வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், “இஸ்ரேலின் நட்பு நாடுகளும், இராணுவ நடவடிக்கையில் ஈடுபடுவது கண்டிக்கத்தக்கது” என்று தெரிவித்திருக்கிறார்.

Tags: americabritainattackhouthi rebels
ShareTweetSendShare
Previous Post

தேசப்பக்தியில் நாம் ஜெயித்துவிட்ட செய்தியை இந்தியதீவுகள் சொல்லுகின்றன!

Next Post

என்.சி.சி மாணவர்கள் வெற்றி, தோல்வியைப் பற்றி கவலைப்படாமல் வாழ்க்கையில் நம்பிக்கையுடன் இருக்க வேண்டும்! – ஜெனரல் அனில் சவுகான்

Related News

இந்திய ராணுவத்தின் தலைமை தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் தீரஜ்சேத் நியமனம்!

தவெக ஆட்சியில் பெண் காவலர்களுக்கே பாதுகாப்பில்லை – நயினார் நாகேந்திரன்

சிவகங்கை அருகே பெண் காவலருக்கு பாலியல் சீண்டல் – 3 பேர் கைது!

கன்னியாகுமரி அருகே கட்டுப்பாட்டை இழந்த கார் அடுத்தடுத்து வாகனங்களின் மீது மோதி விபத்து – 10 பேர் காயம்!

தவெக ஆட்சியில் கேலிக்கூத்து ஆன ஜனநாயகம் – மு.க.ஸ்டாலின் விமர்சனம்!

தவெகவில் இணைந்த மாற்று கட்சியினர் – அனைவருக்கும் உரிய மரியாதை அளிக்கப்படும் என அமைச்சர் ஆனந்த் பேச்சு!

Load More

அண்மைச் செய்திகள்

FIFA உலகக்கோப்பை கால்பந்து தொடர் – கத்தார், சுவிட்சர்லாந்துக்கு இடையேயான ஆட்டம் டிரா!

அமெரிக்க – ஈரான் அமைதி ஒப்பந்தம் இன்று கையெழுத்தாகும் – ட்ரம்ப் தகவல்!

அரசு முறை பயணமாக பிரான்ஸ் சென்ற பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு!

ஆர்எஸ்எஸ் எந்த ஒரு சமூகத்திற்கோ அல்லது அரசியல் கட்சிக்கோ எதிரான அமைப்பு அல்ல; மோகன் பாகவத்

டிரம்பை சந்திக்கும் பிரதமர் மோடி; வெள்ளை மாளிகை தகவல்

பாகிஸ்தானுக்கு எதிராக திரும்பிய கத்தி : பாக்.கின் உண்மைமுகத்தை அம்பலப்படுத்தும் POK மக்கள் – சிறப்பு தொகுப்பு!

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் அலைமோதும் பக்தர்கள் – 24 மணிநேரம் காத்திருந்து தரிசனம்!

டெங்கு காய்ச்சாலால் பாதிக்கப்பட்ட 7 பேர் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதி!

அசாமில் விமானப்படைக்கு சொந்தமான விமானம் விபத்து!

பிரான்ஸ் புறப்பட்டார் பிரதமர் மோடி – ஜி7 மாநாட்டில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்கிறார்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies