கோரிக்கைகளை நிறைவேற்றத் தவறினால் மீண்டும் போராட்டத்தை முன்னெடுப்போம் என CJP செய்தித்தொடர்பாளர் சௌரவ் தாஸ் எச்சரித்துள்ளார்.
நீட் தேர்வு விவகாரத்தில் போராட்டம் நடத்திய மாணவர்கள் மீது FIR பதிவு செய்யப்பட்டு கைதாகினர். இந்நிலையில், போராட்டத்தை கைவிட மத்திய அரசுடன் நடந்த பேச்சுவார்த்தையின்போது, CJP 3 கோரிக்கைகளை முன்வைத்தது. அதில், போராட்டக்காரர்கள் மீதான FIRஐ திரும்பப் பெற்று அவர்களை விடுவிக்க வேண்டும் என்ற கோரிக்கையும் அடங்கும். இந்தநிலையில், கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக மத்திய அரசு உறுதி அளித்தது.
இதையடுத்து, போராட்டக்காரர்களில் 18 வயதுக்குட்பட்ட குற்றப்பின்னணி இல்லாதவர்களை விடுவிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்தநிலையில், இந்த வழக்கின் மீதான உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு மத்திய அரசு அளித்த வாக்குறுதியில் இருந்து முரண்பட்டுள்ளதாக CJP குற்றம்சாட்டியுள்ளது.
இதையடுத்து, வாக்குறுதிப்படி அனைத்து போராட்டக்காரர்களையும் விடுவிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்கவில்லையெனில் மீண்டும் போராட்டத்தை முன்னெடுப்போம் என CJP செய்தித்தொடர்பாளர் சௌரவ் தாஸ் எச்சரித்துள்ளார்.
இதனிடையே, நாடாளுமன்ற அலுவலகத்தில் உள்துறை அமைச்சர் அமித் ஷாவை, மத்திய அமைச்சர் ஜே.பி. நட்டா சந்தித்து முக்கிய பேச்சுவார்த்தை நடத்தினார். மத்திய உள்துறை செயலாளர் மற்றும் உளவுத்துறை தலைவரை தொடர்ந்து இந்த சந்திப்பு நடைபெற்றது.
அனைத்து போராட்டக்காரர்களையும் விடுவிக்காவிட்டால்
மீண்டும் போராட்டத்தை முன்னெடுப்போம் என CJP தெரிவித்துள்ள நிலையில், அது குறித்து அமித்ஷா ஆலோசித்ததாக கூறப்படுகிறது.
















