பிரதமர் மோடியின் ஃபேஸ்புக் வீடியோ நீக்கப்பட்ட விவகாரத்தில், ‘மெட்டா’ நிறுவனம் அளித்த விளக்கத்தில் திருப்தியில்லை என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
நீட் தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரத்தில் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனப் பிரதமர் மோடி பேசிய வீடியோ, அவரது அதிகாரப்பூர்வ ஃபேஸ்புக் பக்கத்திலிருந்து திடீரென நீக்கப்பட்டது. இது தொடர்பாக நேரில் ஆஜராகி விளக்கமளிக்குமாறு மெட்டா நிறுவனத்திற்கு சம்மன் அனுப்பப்பட்டது. இதனைத் தொடர்ந்து மெட்டா நிறுவனம் நிபந்தனையற்ற மன்னிப்பு கோரியது.
இது குறித்து கருத்து தெரிவித்த மத்திய தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் செயலாளர் கிருஷ்ணன், பிரதமரின் அதிகாரப்பூர்வப் பக்கத்திலிருந்து வீடியோ நீக்கப்பட்டது வருத்தமளிப்பதாக கூறினார். மெட்டா நிறுவனம் அளித்த விளக்கத்தில் தங்களுக்கு முழு திருப்தியில்லை எனவும், இந்த தவறு எப்படி நடந்தது என்பதை அறிய கூடுதல் விவரங்களை கேட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
















