டெல்லியில் போராட்டம் நடத்தியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கக் கூடாது என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
டெல்லி ஜந்தர் மந்தர் உள்பட நாடு முழுதும் ‘நீட்’ வினாத்தாள் கசிவுக்கு எதிராக நடந்த போராட்டங்களின் போது மிதமிஞ்சிய போலீசார் குவிக்கப்பட்டதாகவும், மாணவர்கள் மீது தடியடி நடத்தப்பட்டதாகவும் உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் தாக்கல் செய்யப்பட்டது.
இதேபோன்று போராட்டத்தின்போது காயமடைந்த போலீசாரின் குடும்பத்தினர் தரப்பிலும் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. இம் மனுக்கள் தலைமை நீதிபதி சூர்யகாந்த், நீதிபதிகள் ஜாய்மால்யா பக்சி மற்றும் வி.மோகனா அடங்கிய அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் சில உத்தரவுகளை பிறப்பித்தனர்.
அதன்படி, நீட் வினாத்தாள் விவகாரம் தொடர்பாக போராட்டம் நடத்தியவர்கள் மீது எந்தவிதமான கடுமையான நடவடிக்கை எடுக்க கூடாது என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.
கிரிமினல் குற்ற பின்னணி இல்லாத நபர்கள் யாராவது சிறையில் அடைக்கப்பட்டிருந்தால் அவர்களை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்றும்,
சம்பந்தப்பட்ட சிசிடிவி காட்சிகள், வீடியோ பதிவுகள் என அனைத்தையும் பத்திரமாக வைக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் அறிவுறுத்தினர்.
போராட்டம் நடத்திய இளைஞர்கள் மீது கைது நடவடிக்கை கூடாது என்றும்,
கைது செய்யப்பட்ட 18 வயதிற்குட்பட்ட இளைஞர்களை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் கூறினர்
மேலும் கைதான இளைஞர்களின் விவரங்களை பொதுவெளியில் வெளியிடக் கூடாது என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.
வழக்கு விசாரணையின் போது, இந்த சம்பவத்தில் நிச்சயமாக முற்றிலும் சுதந்திரமான விசாரணை நடத்தப்பட வேண்டும் என உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சூர்யகாந்த் கூறினார்.
யாரெல்லாம் அத்துமீறி செயல்பட்டார்களோ அவர்கள் பணியில் இருந்து நீக்கப்பட வேண்டும் என்றும் நீதிபதி சூர்யகாந்த தெரிவித்தார். அதன் தொடர்ச்சியாக, போராட்டங்கள் நடைபெற்ற மஹாராஷ்டிரா, பீஹார், உத்தரபிரதேசம், அசாம் உள்ளிட்ட மாநில அரசுகளுக்கும், மத்திய அரசுக்கும் உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளது.
















