கொல்கத்தாவில் நடைபெற்ற போராட்டத்தில் வன்முறையை தூண்டும் விதமாக செயல்பட்ட சமூக விரோதிகள் மீது குண்டாஸ் நடவடிக்கை பாயும் என மேற்கு வங்க அமைச்சர் அக்னிமித்ரா பால் தெரிவித்துள்ளார்.
நீட் வினாத்தாள் கசிவுக்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மீதான வழக்குகளை திரும்பப் பெறுவது குறித்து அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு, நீதிமன்றத்தின் தீர்ப்பை பணிவுடன் ஏற்றுக்கொள்வதாகவும், ஆனால் கைது மற்றும் வழக்குப்பதிவு செய்யப்பட்டவர்கள் உண்மையான மாணவர்களா அல்லது சமூக விரோதிகளா என்பதை ஆராய வேண்டும் எனவும் கூறினார்.
உண்மையான மாணவர்கள் நிச்சயமாக விடுவிக்கப்பட்டு வழக்குகள் திரும்பப் பெறப்படும் எனவும் தெரிவித்தார்.
அதேநேரம், வெளிநாட்டு நிதியுதவியுடன் நாட்டை சீர்குலைக்கும் நோக்கில்
செயல்படும் சமூக விரோதிகள் மீது எந்த காரணத்தைக் கொண்டும் கருணை காட்டப்பட மாட்டாது என அவர் திட்டவட்டமாக தெரிவித்தார். அத்ததையவர்கள் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின்கீழ் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கூறினார்.
















