கரூர் பெருந்துயரம் தொடர்பான அரசு பணி விவகாரத்தில், பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு முறையான ஆய்வு இல்லாமல் பணி வழங்கப்பட்டதே நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு காரணமாக இருக்கலாம் என தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
சென்னை தி.நகரில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், நீதிமன்ற தீர்ப்பை விமர்சிக்க முடியாது என்றும், அதே நேரத்தில் கரூர் விவகாரத்தில் அரசு பணி வழங்குவதற்கு முன்பு தகுதியானவர்களை முறையாக ஆய்வு செய்திருக்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.
மேலும், பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உதவிகள் வழங்கும் போது அரசு முழுமையான பரிசீலனை செய்து முடிவெடுக்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.
















