டாஸ்மாக் நிதி முறைகேடு - தமிழகத்தில் 41 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை!
Sep 13, 2026, 01:03 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

டாஸ்மாக் நிதி முறைகேடு – தமிழகத்தில் 41 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை!

Ramamoorthy S by Ramamoorthy S
Jul 29, 2026, 12:21 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

ஈரோடு மாவட்ட டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனையில் ஈடுபட்டனர்.

திமுக ஆட்சிக் காலத்தில் நடைபெற்றதாக கூறப்படும் டாஸ்மாக் முறைகேடு தொடர்பான விசாரணையின் ஒரு பகுதியாக, ஈரோடு மாவட்ட சூரியம்பாளையத்தில் உள்ள டாஸ்மாக் மாவட்ட தலைமை அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் திடீர் சோதனை நடத்தினர்.

துணை காவல் கண்காணிப்பாளர் சாந்தி தலைமையிலான குழுவினர், மாவட்டம் முழுவதும் விநியோகிக்கப்படும் மதுபானங்களின் வரவு, கையிருப்பு மற்றும் விநியோகம் தொடர்பான ஆவணங்களை ஆய்வு செய்தனர்.

மேலும், டாஸ்மாக் குடோனில் உள்ள பதிவுகள் மற்றும் அலுவலக ஊழியர்களிடமும் விசாரணை மேற்கொண்டு முக்கிய ஆவணங்களை பரிசோதித்து வருகின்றனர்.

கோவை மாவட்டம் பீளமேடு பகுதியில் செயல்பட்டு வரும் டாஸ்மாக் மண்டல அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனையில் ஈடுபட்டனர்.

குறிப்பாக, மதுபானங்கள் கொள்முதல், விற்பனை, தனியார் மதுக்கூடங்களுக்கு மதுபான விநியோகம், காலி மதுபான பாட்டில்களை திரும்பப் பெறுதல், அட்டை பெட்டிகள், பாட்டில் மூடிகள், ஸ்டிக்கர்கள் உள்ளிட்ட பணிகளுக்கான ஒப்பந்தப் புள்ளிகள் மற்றும் அதனுடன் தொடர்புடைய ஆவணங்கள் குறித்தும் ஆய்வு செய்துள்ளனர்.

கோவை மாவட்டம் ஆச்சிப்பட்டியில் உள்ள டாஸ்மாக் குடோன் மற்றும் மேளாளர் அலுவலகத்தில் 5 பேர் கொண்ட லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனையில் ஈடுபட்டனர். ஆச்சிப்பட்டி குடோனுக்கு பல்வேறு மாநிலங்களில் தயாரிக்கப்படும் மதுபானங்கள் லாரிகள் மூலம் கொண்டுவரப்பட்டு பொள்ளாச்சி, வால்பாறை, கிணத்துக்கடவு, சூலூர் ஆகிய பகுதிகளில் செயல்படும் டாஸ்மாக் கடைகளுக்கு விற்பனைக்காக எடுத்துச் செல்லப்படுவது குறிப்பிடத்தக்கது.

புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வக்கோட்டை அருகே தனியார் மதுபான ஆலைகளில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனையில் ஈடுபட்டனர்.

கல்லாக்கோட்டை, விராலிமலை, குன்னத்தூரில் தனியார் மதுபான ஆலைகள் செயல்பட்டு வருகின்றன. இந்த நிலையில், கடந்த ஆட்சி காலத்தில் டாஸ்மாக்கிற்கு மதுபானங்கள் கொள்முதல் செய்யப்பட்டதில் முறைகேடுகள் நடந்ததாக எழுந்த குற்றச்சாட்டின் அடிப்படையில், லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் ரெய்டில் ஈடுபட்டுள்ளனர். ஆவணங்கள், கொள்முதல் பதிவுகள் மற்றும் தொடர்புடைய விவரங்களை அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.

சோதனை நிறைவடைந்த பிறகே முறைகேடு நடந்ததா, அதன் அளவு என்ன என்பது குறித்து முழுமையான தகவல் வெளியாகும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Tags: DVAC officials raidPeelameduTASMAC corruptionDirectorate of Vigilance and Anti-Corruption.TASMAC district headquarters
Share
Tweet
SendShare
Previous Post

டாஸ்மாக் கடைகள் தனியார் மயம்? : தமிழக அரசு திட்டம் என தகவல்!

Next Post

ஈரான் மீதான தாக்குதல் நிறுத்தப்பட்டதற்கு ஏவுகணை பற்றாக்குறை காரணமா? : ட்ரம்ப் முடிவின் பின்னணி – சிறப்பு தொகுப்பு!

Related News

பயங்கரவாதம், மேற்காசிய போருக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி முன்மொழிந்த பிரகடனம்; ஒருமனதாக ஏற்பு

பிரிக்ஸ் அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும்; பிரதமர் நரேந்திர மோடி

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

Load More

அண்மைச் செய்திகள்

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies