டாஸ்மாக் நிதி முறைகேடு - தமிழகத்தில் 41 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை!
Jul 29, 2026, 01:28 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

டாஸ்மாக் நிதி முறைகேடு – தமிழகத்தில் 41 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை!

Ramamoorthy S by Ramamoorthy S
Jul 29, 2026, 12:21 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஈரோடு மாவட்ட டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனையில் ஈடுபட்டனர்.

திமுக ஆட்சிக் காலத்தில் நடைபெற்றதாக கூறப்படும் டாஸ்மாக் முறைகேடு தொடர்பான விசாரணையின் ஒரு பகுதியாக, ஈரோடு மாவட்ட சூரியம்பாளையத்தில் உள்ள டாஸ்மாக் மாவட்ட தலைமை அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் திடீர் சோதனை நடத்தினர்.

துணை காவல் கண்காணிப்பாளர் சாந்தி தலைமையிலான குழுவினர், மாவட்டம் முழுவதும் விநியோகிக்கப்படும் மதுபானங்களின் வரவு, கையிருப்பு மற்றும் விநியோகம் தொடர்பான ஆவணங்களை ஆய்வு செய்தனர்.

மேலும், டாஸ்மாக் குடோனில் உள்ள பதிவுகள் மற்றும் அலுவலக ஊழியர்களிடமும் விசாரணை மேற்கொண்டு முக்கிய ஆவணங்களை பரிசோதித்து வருகின்றனர்.

கோவை மாவட்டம் பீளமேடு பகுதியில் செயல்பட்டு வரும் டாஸ்மாக் மண்டல அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனையில் ஈடுபட்டனர்.

குறிப்பாக, மதுபானங்கள் கொள்முதல், விற்பனை, தனியார் மதுக்கூடங்களுக்கு மதுபான விநியோகம், காலி மதுபான பாட்டில்களை திரும்பப் பெறுதல், அட்டை பெட்டிகள், பாட்டில் மூடிகள், ஸ்டிக்கர்கள் உள்ளிட்ட பணிகளுக்கான ஒப்பந்தப் புள்ளிகள் மற்றும் அதனுடன் தொடர்புடைய ஆவணங்கள் குறித்தும் ஆய்வு செய்துள்ளனர்.

கோவை மாவட்டம் ஆச்சிப்பட்டியில் உள்ள டாஸ்மாக் குடோன் மற்றும் மேளாளர் அலுவலகத்தில் 5 பேர் கொண்ட லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனையில் ஈடுபட்டனர். ஆச்சிப்பட்டி குடோனுக்கு பல்வேறு மாநிலங்களில் தயாரிக்கப்படும் மதுபானங்கள் லாரிகள் மூலம் கொண்டுவரப்பட்டு பொள்ளாச்சி, வால்பாறை, கிணத்துக்கடவு, சூலூர் ஆகிய பகுதிகளில் செயல்படும் டாஸ்மாக் கடைகளுக்கு விற்பனைக்காக எடுத்துச் செல்லப்படுவது குறிப்பிடத்தக்கது.

புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வக்கோட்டை அருகே தனியார் மதுபான ஆலைகளில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனையில் ஈடுபட்டனர்.

கல்லாக்கோட்டை, விராலிமலை, குன்னத்தூரில் தனியார் மதுபான ஆலைகள் செயல்பட்டு வருகின்றன. இந்த நிலையில், கடந்த ஆட்சி காலத்தில் டாஸ்மாக்கிற்கு மதுபானங்கள் கொள்முதல் செய்யப்பட்டதில் முறைகேடுகள் நடந்ததாக எழுந்த குற்றச்சாட்டின் அடிப்படையில், லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் ரெய்டில் ஈடுபட்டுள்ளனர். ஆவணங்கள், கொள்முதல் பதிவுகள் மற்றும் தொடர்புடைய விவரங்களை அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.

சோதனை நிறைவடைந்த பிறகே முறைகேடு நடந்ததா, அதன் அளவு என்ன என்பது குறித்து முழுமையான தகவல் வெளியாகும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Tags: TASMAC corruptionDirectorate of Vigilance and Anti-Corruption.TASMAC district headquartersDVAC officials raidPeelamedu
ShareTweetSendShare
Previous Post

டாஸ்மாக் கடைகள் தனியார் மயம்? : தமிழக அரசு திட்டம் என தகவல்!

Related News

டாஸ்மாக் கடைகள் தனியார் மயம்? : தமிழக அரசு திட்டம் என தகவல்!

கரூரில் செந்தில் பாலாஜிக்கு நெருக்கமானவர்களின் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை!

இன்றைய தங்கம் விலை!

நீட் சட்டத்திருத்த மசோதா விவாதம் – எதிர்கட்சிகள் மீது மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு குற்றச்சாட்டு!

கொல்கத்தா போராட்டத்தில் வன்முறையை தூண்டும் விதமாக செயல்பட்ட சமூக விரோதிகள் மீது குண்டாஸ் – அமைச்சர் அக்னிமித்ரா பால் திட்டவட்டம்!

தனது தரப்பு வாதத்தை கேட்க வேண்டும் என்று கோர கே.என்.நேருவுக்கு அடிப்படை உரிமை இல்லை – உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு வாதம்!

Load More

அண்மைச் செய்திகள்

டாஸ்மாக் நிதி முறைகேடு – தமிழகத்தில் 41 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை!

டெல்லி போராட்டம் – மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ஜெ.பி. நட்டா ஆலோசனை!

ஃபேஸ்புக்கில் பிரதமர் வீடியோ நீக்கப்பட்ட விவகாரத்தில் மெட்டா நிறுவனத்தின் பதில் திருப்தி அளிக்கவில்லை – மத்திய அரசு

டெல்லியில் போராட்டம் நடத்தியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க கூடாது – உச்ச நீதிமன்றம் உத்தரவு!

பாதுகாப்பு தளவாட ஏற்றுமதியில் இந்தியா மகத்தான வெற்றி : பாதுகாப்புத் துறையில் தன்னிறைவு – சிறப்பு தொகுப்பு!

திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன் ஜாமின் மனு மீதான தீர்ப்பு – தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு!

பிரதமர் மோடி பதிவிட்ட வீடியோ தவறுதலாக நீக்கம் – மெட்டா நிறுவனம் விளக்கம்!

யூரியாவுக்கு மாற்றாக “அன்ஹைட்ரஸ் அமோனியா” ; மத்திய அரசு அனுமதி!

கரூரில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அரசுப்பணி தொடர்பான தீர்ப்பு – நயினார் நாகேந்திரன் கருத்து!

மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை பட்டமளிப்பு விழா – ஆளுநர் ராஜேந்திர அர்லேகர் பங்கேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies