டாஸ்மாக் கடைகளை தனியார் மயமாக்குவது குறித்து வரும் சட்டமன்ற கூட்டத்தொடரில் மதுவிலக்கு மற்றும் கலால் சட்டங்களில் திருத்தங்களை மேற்கொள்ள தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இது தொடர்பாக வெளியான தகவலில், தமிழகத்தில் தவெக ஆட்சிக்கு வந்த பின்பு வழிபாட்டுத் தலங்கள், கல்வி நிலையங்களுக்கு அருகில் இருந்த 717 மதுபானக்கடைகள் மூடப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக அரசின் கட்டுப்பாட்டில் இயங்கும் டாஸ்மாக் கடைகளை தனியார் மயமாக்க அரசு தீவிர ஆலோசனை நடத்தி வருவதாகவும், வரும் சட்டமன்ற கூட்டத்தொடரில் மதுவிலக்கு மற்றும் கலால் சட்டங்களில் திருத்தங்களை மேற்கொள்ள முடிவு செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முதற்கட்டமாக நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் உள்ள மதுபானக் கடைகளை தனியார்மயமாக்க முடிவு செய்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. 20 ஆண்டுகளுக்கு பிறகு டாஸ்மாக் கடைகள் தனியார் மயமாக வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
















