கரூரில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் வீடு மற்றும் அவரது ஆதரவாளர்களின் வீடுகளில், திருச்சி ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு போலீசார் சோதனை மேற்கொண்டுள்ளனர்.
தவெக எம்எல்ஏ இளையராஜாவிடம் பேரம் பேசிய வழக்கில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அவரது சகோதரர் அசோக் குமார் ஆகியோர் திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் நாள்தோறும் கையெழுத்திட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், 20-க்கும் மேற்பட்ட போலீசார் கொண்ட குழு, செந்தில் பாலாஜியின் வீடு, அவரது ஆதரவாளர்கள் மற்றும் உதவியாளர் வீடுகள் உள்ளிட்ட இடங்களில் சோதனை நடத்தி வருகின்றனர். பல்வேறு ஆவணங்களை கைப்பற்றி அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.
















