ஜம்மு காஷ்மீர் குல்மார்க்கில் இந்திய இராணுவம் பனிச்சரிவு மீட்பு நடவடிக்கையில் தனது திறனை வெளிப்படுத்தியது.
ஜம்மு காஷ்மீர் பாரமுல்லா மாவட்டத்தின் குல்மார்க் செக்டரில் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டில் (எல்ஓசி) நிறுத்தப்பட்டுள்ள இந்திய ராணுவம் பனிச்சரிவு மீட்பு நடவடிக்கைகளிலும், சீரற்ற வானிலை நிலைகளில் பனிச்சரிவு மீட்பு நடவடிக்கைகளில் அதன் அசாதாரண திறன்களை வெளிப்படுத்தியுள்ளது.
ஜம்மு காஷ்மீர் குல்மார்க்கில் இன்று இந்திய இராணுவத்தின் எல்லை படைவீரர்கள் இந்தப் பகுதியில் பனியில் சறுக்கி சென்று ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
சவாலான குளிர்கால நிலப்பரப்பில், அதிகப் பயிற்சி பெற்ற நாய், பனியின் கீழ் புதைந்து கிடக்கும் நபர்களைக் தேடி கண்டுபிடிக்கும் பயிற்சிமேற்கொள்ளப்பட்டது.
பின்னர் கண்டுபிடிக்கப்பட்ட நபருக்கு முதல் உதவி சிகிச்சை விரைவாக அளிக்கப்பட்டது.
பின்னர் காயம்பட்ட பணியாளரை விரைவாகவும் பாதுகாப்பாகவும் அருகில் உள்ள மருத்துவ வசதிகளுக்கு கொண்டு செல்லப்படுவதை உறுதிசெய்யும் வகையில், செயல்முறையை இராணுவம் மேற்கொண்டது.
இந்த பயிற்சி இந்திய இராணுவத்தின் திறமையை வெளிப்படுத்தியது.