இமாச்சலப் பிரதேச மாநிலம் சம்பா பகுதியில், இன்று 3.1 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.
இமாச்சலப் பிரதேசத்தில் இன்று நிலநடுக்கம் உணரப்பட்டது. சம்பா பகுதியில் மதியம் 1.16 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 3.1 ஆக பதிவானது.
இந்த நிலநடுக்கம் பூமிக்கடியில் 9 கிலோமீட்டர் ஆழத்தில் மையம் கொண்டிருந்ததாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த நிலநடுக்கத்தால், சம்பா மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருந்த கட்டடங்கள் லேசாக அதிர்ந்தன. இதனால், அப்பகுதியில் இருந்த மக்கள் அச்சமடைந்து, வீடுகளை விட்டு வெளியேறி சாலைகளில் தஞ்சமடைந்தனர்.
இந்த நிலநடுக்கத்தால், ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து உடனடி தகவல் வெளியாகவில்லை.