அயோத்தி இராமர் கோவில்: நிலப்பிரச்சனை முதல் திறப்பு விழா வரை ஒரு சிறப்புப் பார்வை!
Jul 25, 2025, 09:01 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

அயோத்தி இராமர் கோவில்: நிலப்பிரச்சனை முதல் திறப்பு விழா வரை ஒரு சிறப்புப் பார்வை!

Web Desk by Web Desk
Jan 19, 2024, 10:55 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

அயோத்தி இராமர் கோவிலா, பாபர் மசூதியா என்கிற 500 ஆண்டுகாலப் போராட்டம், சுதந்திரத்திற்குப் பிறகு முதல் நீதிமன்ற வழக்கு தாக்கல் செய்யப்பட்டு, ஏறக்குறைய 7 தசாப்தங்களுக்குப் பிறகு, 2019-ம் ஆண்டு உச்ச நீதிமன்றம் இராமர் கோவில் கட்டுவதற்கு வழி வகுக்கும் ஒரு முக்கியத் தீர்ப்பை வழங்கியது.

இதையடுத்து, உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தி இராமஜென்ம பூமியில் 1,800 கோடி ரூபாய் செலவில் பிரம்மாண்டமாக இராமர் கோவில் கட்டப்பட்டு வருகிறது. இக்கோவில் கும்பாபிஷேக விழா வரும் 22-ம் தேதி நடைபெறவிருக்கிறது. திறப்பு விழாவுக்கு இன்னும் சில நாட்களே இருக்கும் நிலையில், அயோத்தியின் வரலாறு குறித்து இக்கட்டுரையில் பார்க்கலாம்….

1528: அயோத்தி இராமர் கோவில் இடிக்கப்பட்டு, முகலாயப் பேரரசர் பாபரின் தளபதி மீர் பாக்கியால் பாபர் மசூதி கட்டப்பட்டது.

1885: இராம ஜென்மபூமியில் பாபர் மசூதி கட்டடத்திற்கு வெளியே ஒரு விதானம் கட்ட அனுமதி கோரி பைசாபாத் மாவட்ட நீதிமன்றத்தில் மஹந்த் ரகுபீர் தாஸ் மனு தாக்கல் செய்தார். அம்மனுவை நீதிமன்றம் நிராகரித்தது.

1949: பாபர் மசூதி கட்டடத்திற்கு வெளியே ஒரு மையக் குவிமாடத்தின் கீழ் இராம் லல்லாவின் சிலைகள் வைக்கப்பட்டன.

1950: இராம் லல்லாவின் சிலைகளை வழிபட உரிமை கோரி, கோபால் சிம்லா விஷாரத் பைசாபாத் மாவட்ட நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.

1959: நிர்மோஹி அகாரா அந்த இடத்தைக் கைப்பற்றக் கோரி வழக்குத் தொடர்ந்தார்.

1961: முஸ்லீம்களுக்கு சொத்தை மீட்டுத் தருமாறு ஒரு மனுதாரர் வழக்குத் தொடர்ந்தார்.

1981: உத்தரப் பிரதேச சன்னி மத்திய வக்ஃப் வாரியம், அந்த இடத்தைக் கைப்பற்றுவதற்கு வழக்குத் தாக்கல் செய்தது.

1986 பிப்ரவரி 1: உள்ளூர் நீதிமன்றம் இந்து வழிபாட்டாளர்களுக்காக தளத்தை திறக்க அரசாங்கத்திற்கு உத்தரவிட்டது.

1989 ஆகஸ்ட் 14: கட்டமைப்பைப் பொறுத்தவரை தற்போதைய நிலையைப் பராமரிக்க அலகாபாத் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

1992 டிசம்பர் 6: இராம ஜென்மபூமியில் இருந்த பாபர் மசூதி கட்டடம் இடிக்கப்பட்டது.

1993 ஏப்ரல் 3: அப்பகுதியில் நிலத்தை மத்திய அரசு கையகப்படுத்துவதற்காக ‘அயோத்தியில் குறிப்பிட்ட பகுதியை கையகப்படுத்துதல்’ சட்டம் நிறைவேற்றப்பட்டது.

1993: சட்டத்தின் பல்வேறு அம்சங்களை எதிர்த்து அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் இஸ்மாயில் ஃபரூக்கி உட்பட பல்வேறு ரிட் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

1994 அக்டோபர் 24: இஸ்மாயில் ஃபரூக்கி வழக்கில், அந்த மசூதி இஸ்லாத்துடன் தொடர்புடையது அல்ல என்று வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பை உச்ச நீதிமன்றம் கூறியது.

2002 ஏப்ரல்: அந்த இடம் யாருக்குச் சொந்தமானது என்பதை தீர்மானிப்பது தொடர்பான விசாரணையை உயர் நீதிமன்றம் தொடங்கியது.

2003 மார்ச் 13: அஸ்லாம் அலியாஸ் புரே வழக்கில், கையகப்படுத்தப்பட்ட நிலத்தில் எந்தவிதமான மதச் செயல்பாடும் அனுமதிக்கப்படாது என்று உச்ச நீதிமன்றம் கூறியது.

2003 மார்ச் 14: மத நல்லிணக்கத்தைப் பேண அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் சிவில் வழக்குகள் முடிவடையும் வரை இடைக்கால உத்தரவு நடைமுறையில் இருக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் கூறியது.

2010 செப்டம்பர் 30: அந்த இடத்தை சன்னி வக்பு வாரியம், நிர்மோகி அகாரா மற்றும் ராம் லல்லா இடையே 2:1 விகிதத்தில் பிரித்துக் கொள்ளும்படி உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

2011 மே 9: அயோத்தி நிலம் தொடர்பான வழக்கில் உயர் நீதிமன்றத் தீர்ப்புக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்தது.

2016 பிப்ரவரி 26: அந்த இடத்தில் ஸ்ரீராமர் கோவில் கட்டக் கோரி சுப்ரமணியன் சுவாமி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

2017 மார்ச் 21: இந்தியத் தலைமை நீதிபதி ஜே.எஸ்.கேஹர், 3 தரப்பினரும் நீதிமன்றத்திற்கு வெளியே சமரசம் செய்து கொள்ள பரிந்துரைத்தார்.

2017 ஆகஸ்ட் 7: அலகாபாத் உயர் நீதிமன்றத்தின் 1994 தீர்ப்பை எதிர்த்துத் தொடரப்பட்ட மனுக்களை விசாரிக்க 3 நீதிபதிகள் கொண்ட பெஞ்ச் ஒன்றை உச்ச நீதிமன்றம் அமைத்தது.

2017 ஆகஸ்ட் 8: அந்த இடத்திலிருந்து நியாயமான தூரத்தில் முஸ்லீம்கள் அதிகம் வசிக்கும் பகுதியில் மசூதி கட்டப்படலாம் என்று உத்தரப் பிரதேச மாநில ஷியா மத்திய வக்ஃப் வாரியம் தெரிவித்தது.

2017 செப்டம்பர் 11: அந்த இடத்தைப் பராமரிப்பதற்கு 2 கூடுதல் மாவட்ட நீதிபதிகளை பார்வையாளர்களாக 10 நாட்களுக்குள் நியமிக்குமாறு அலகாபாத் உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதிக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

2017 நவம்பர் 20: அயோத்தியில் கோவிலையும், லக்னோவில் மசூதியையும் கட்டலாம் என்று உச்ச நீதிமன்றத்தில் ஷியா மத்திய வக்ஃப் வாரியம் தெரிவித்தது.

2017 டிசம்பர் 1: அலகாபாத் உயர் நீதிமன்றத்தின் 2010 தீர்ப்பை எதிர்த்து 32 சிவில் உரிமை ஆர்வலர்கள் மனு தாக்கல் செய்தனர்.

2018 பிப்ரவரி 8: உச்ச நீதிமன்றம் சிவில் மேல்முறையீடுகளை விசாரிக்கத் தொடங்கியது.

2018 மார்ச் 14: இவ்வழக்கில் அனைத்துத் தரப்பினரும் தலையிடக் கோரிய சுப்பிரமணியன் சுவாமியின் மனு உட்பட அனைத்து இடைக்கால மனுக்களையும் உச்சநீதிமன்றம் நிராகரித்தது.

2018 ஏப்ரல் 6: உச்ச நீதிமன்றத்தில் 1994-ம் ஆண்டு வழங்கிய தீர்ப்பில் உள்ள அவதானிப்புகளை மறுபரிசீலனை செய்வதற்கான பிரச்சனையை ஒரு பெரிய அமர்வுக்கு அனுப்புமாறு ராஜீவ் தவான் மனு தாக்கல் செய்தார்.

2018 ஜூலை 6: 1994 தீர்ப்பை மறுபரிசீலனை செய்யக் கோரி, சில முஸ்லீம் குழுக்கள் விசாரணையை தாமதப்படுத்த முயற்சிப்பதாக உத்தரப் பிரதேச அரசு உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்தது.

2018 ஜூலை 20: உச்ச நீதிமன்றம் தீர்ப்பை ஒத்திவைத்தது.

2018 செப்டம்பர் 27: வழக்கை 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வுக்கு மாற்ற உச்ச நீதிமன்றம் மறுப்புத் தெரிவித்து விட்டது.

2019 ஜனவரி: வழக்கை விசாரிக்க தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தலைமையில் 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன பெஞ்சை உச்ச நீதிமன்றம் அமைத்தது.

2019 ஏப்ரல்: அயோத்தி இடத்தைச் சுற்றி கையகப்படுத்தப்பட்ட நிலத்தை உரிமையாளர்களிடம் திருப்பித் தருவதற்கான மத்திய அரசின் கோரிக்கையை நிர்மோஹி அகாரா எதிர்த்தது.

2019 நவம்பர் 9: அந்த இடத்தில் 2.77 ஏக்கர் நிலத்தை ஸ்ரீராமர் கோவில் கட்டுவதற்காக இந்திய அரசால் அமைக்கப்படும் அறக்கட்டளைக்கு மாற்றுமாறு உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கி 70 ஆண்டுகால சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்தது. அயோத்தியில் மசூதி கட்ட இஸ்லாமியர்களுக்கு 5 ஏக்கர் நிலம் ஒதுக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

2020 ஆகஸ்ட் 5: பாரதப் பிரதமர் நரேந்திர மோடி இராமர் கோவில் கட்ட அடிக்கல் நாட்டினார்.

2024 ஜனவரி 22: இராம் லல்லா சிலையின் பிரான் பிரதிஷ்டா (கும்பாபிஷேகம்) நடைபெற உள்ளது.

Tags: AyodyaHistoryRam Temple
ShareTweetSendShare
Previous Post

இராமர் கோவில் கும்பாபிஷேகம் – கடுமையாக விரதமிருக்கும் பிரதமர் மோடி!

Next Post

அன்னபூரணி திரைப்பட விவகாரம்! – மன்னிப்பு கேட்ட நடிகை நயன்தாரா!

Related News

பிரதமர் மோடியின் புதிய பாணி : எதிரி நாடுகளை அடிபணிய வைக்கும் அதிசயம்!

நாடாளுமன்றம் முடக்கம் – 2 நாளில் ரூ.25 கோடி வீண் – மக்கள் பணத்தை வீணடிக்கும் எதிர்க்கட்சிகள்!

ஏழ்மையை பயன்படுத்தி சிறுநீரகங்கள் திருட்டு: திமுக எம்எல்ஏ.,விற்கு தொடர்பா?

50 பேருடன் மாயமான ரஷ்ய விமானம் : உடைந்த பாகங்கள் மீட்பு – பயணிகள் நிலை என்ன?

மோசடியில் புது ரூட் : போலி தூதரகம் தொடங்கி பணம் சுருட்டிய கில்லாடி!

கங்கை கொண்ட சோழபுரம் கோயில் : சோழர்கள் கட்டடக்கலைக்கு வரலாற்று சான்று!

Load More

அண்மைச் செய்திகள்

ரூ.96 கோடி அம்போ… : ரவுடிகளின் ராஜ்ஜியமான ஈரடுக்கு பேருந்து நிலையம்!

வலிமையான பாஸ்போர்ட் பட்டியல் : உலகளவில் 77வது இடத்திற்கு இந்தியா முன்னேற்றம்!

ஏவுகணைத் திட்டம் டமால் : மீண்டும் மண்ணை கவ்விய பாகிஸ்தானின் ஷாஹீன்-3!

தமிழக பெண்கள் திமுக அரசின் மீது கடும் அதிருப்தியில் இருக்கிறார்கள் : அண்ணாமலை

கழிவறையில் ரேஷன் கடையின் அரிசி மூட்டைகள் : திமுக அரசுக்கு நயினார் நாகேந்திரன் கண்டனம்!

எடப்பாடி பழனிசாமிக்கு இந்து முன்னணி கண்டனம்!

முதலமைச்சர் ஸ்டாலின் நலமுடன் உள்ளார் – மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை!

இரண்டு குழந்தைகளை கொன்ற அபிராமிக்கு சாகும் வரை ஆயுள் தண்டனை!

திமுக  ஆட்சியில் உடனடி சிகிச்சை என்பது ஏழை எளியோருக்கு எட்டாக்கனியாகவே இருக்கிறது : அண்ணாமலை குற்றச்சாட்டு!

மீன்பிடி தடை கால நிவாரணம் உயர்த்தி வழங்கப்படும் – எடப்பாடி பழனிசாமி

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies