போக்குவரத்துத் தொழிலாளர் விவகாரம் - முத்தரப்பு பேச்சுவார்த்தை பிப்.7 -க்கு ஒத்திவைப்பு
Mar 15, 2026, 03:31 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

போக்குவரத்துத் தொழிலாளர் விவகாரம் – முத்தரப்பு பேச்சுவார்த்தை பிப்.7 -க்கு ஒத்திவைப்பு

Murugesan M by Murugesan M
Jan 19, 2024, 03:50 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும், புதிய ஓய்வூதியத் திட்டத்தைக் கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளைப் போக்குவரத்துக் கழகத் தொழிலாளா்கள் வலியுறுத்தி வந்தனர். இது தொடர்பாக, ஜன. 9-ஆம் தேதி வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்தனா்.

இதையடுத்து, தொழிலாளா் நலத் துறை, போக்குவரத்துத் துறை இணைந்து போக்குவரத்துத் தொழிலாளா்களுடன் முத்தரப்பு பேச்சுவாா்த்தை நடைபெற்றது. அப்போது, ஓய்வூதியதாரா்களுக்கு நிலுவையில் உள்ள அகவிலைப்படி உயா்வு, ஓய்வுபெறும் தொழிலாளா்களுக்குப் பணப் பலன்கள் ஆகிய முக்கியமான பிரச்சினைகளை மட்டுமாவது நிறைவேற்ற வேண்டும் என்று தொழிற்சங்கத்தினா் வேண்டுகோள் விடுத்தனா்.

ஆனால், இதனை அரசத்தரப்பு ஏற்றுக்கொள்ளவில்லை. இது தொடா்பாகச் சென்னையில் நடைபெற்ற முத்தரப்பு பேச்சுவாா்த்தை தோல்வியில் முடிந்தது. இதனையடுத்து, ஜன. 9 -ம் தேதி முதல் திட்டமிட்டபடி வேலை நிறுத்தப்போராட்டத்தைத் தொழிற்சங்கங்கள் தொடங்கின.

தொழிலாளா்கள் பற்றாக்குறையைச் சமாளிக்க அனைத்துப் போக்குவரத்துக் கழகங்களிலும் பயிற்சி ஓட்டுநா்கள், நடத்துநா்கள் மூலம் பேருந்துகள் இயக்கப்பட்டன. இதற்குத் தொழிற்சங்கத்தினர் கடும எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் பயணிகள் கடும் இன்னல்களை எதிர்கொண்டனர்.

இதற்கிடையே வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்கள் பல்வேறு மாவட்டங்களில் சாலை மறியல் போராட்டத்திலும் ஈடுபட்டனர். இது தொடர்பான வழக்குச் சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, பொங்கல் பண்டிகை கொண்டாட உள்ள நிலையில், போராட்டத்தைத் தள்ளிவைக்க நீதிபதி கேட்டுக் கொண்டார். அதன்பேரில் போராட்டம் தள்ளிவைக்கப்பட்டது.

இந்த நிலையில், போக்குவரத்து தொழிலாளர்கள் மற்றும் போக்குவரத்துக் கழகம், தொழிலாளர் நலத்துறை இடையே முத்தரப்பு பேச்சுவார்த்தை நடைபெற்றது. அப்போது, நீதிமன்ற வழிகாட்டுதல்படி வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டவர்கள் மீது பழிவாங்கும் நடவடிக்கை இருக்காது என அரசு அதிகாரிகள் உத்தரவாதம் அளித்தனர்.

இதனைத் தொடர்ந்து, போக்குவரத்து தொழிலாளர்களின் பேச்சுவார்த்தை பிப்.7 -ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

Tags: Transport Labor Issue – Tripartite Talk Adjournment to Feb. 7
ShareTweetSendShare
Previous Post

ஆன்டிபயாட்டிக் மருந்து – மத்திய அரசு புதிய உத்தரவு!

Next Post

பிற்படுத்தப்பட்ட குடும்பங்களின் நலனுக்காக தனது அரசு அர்ப்பணிப்புடன் இருக்கிறது! – பிரதமர் மோடி

Related News

அரசு மருத்துவமனையில் கஞ்சா போதையில் கொலை முயற்சி! – பொதுமக்கள் அச்சம்!

சென்னையிலிருந்து லடாக் செல்லும் கார் பயணத்தில் பெண் ஒருவர் தனியாக கார் ஓட்டி செல்வது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

மாமுல் கேட்டு மளிகை கடையை அடித்து நொறுக்கும் பிரபல ரவுடி – வெளியான பகீர் சிசிடிவி

மாலி நாட்டில் தென்காசியை சேர்ந்த நபரை கடத்திய தீவிரவாதிகள்..பல்வேறு முயற்சியால் மீட்ட மத்திய அரசு – நேரில் போய் சந்தித்த அதிமுக எம்.எல்.ஏ

திமுக ஆட்சியில், யாருக்குமே சட்டத்தின் மீது பயமில்லை – அண்ணாமலை குற்றச்சாட்டு!

புதுச்சேரியில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் காங்கிரஸ் கட்சியனரை 1 மணி நேரமாக காக்க வைத்த திமுகவினர்!

Load More

அண்மைச் செய்திகள்

பெண் காவலருக்கு பாலியல் தொல்லை – காவல் அதிகாரி கைது!

குளறுபடி காரணமாக ஒத்திவைக்கப்பட்ட குரூப் 2, 2ஏ தேர்வுகள் தமிழகம் முழுவதும் இன்று நடைபெற்று வருகிறது.

ரேபிஸ் நோயால் நாயை போன்றே குரைத்த சிறுவன் – காண்போரை கலங்கச் செய்த சம்பவம்!

மாணவி படுகொலை – நீதிகேட்டு இரவிலும் மக்கள் சாலை மறியல்!

ஆப்கானிஸ்தானில் வான்வழித் தாக்குதல் நடத்திய பாகிஸ்தான் – இந்தியா கடும் கண்டனம்!

தொகுதி மக்களுக்கு நேரில் சென்று நன்றி தெரிவித்த அதிமுக எம்.பி தம்பிதுரை!

தேர்தல் நெருங்கும் நேரத்தில் மாற்றுக் கட்சியில் இருந்து அதிமுக-வில் இணைந்த 1000 பேர்!

குரு சாமி பள்ளம் விவகாரம்… அதிகாரிகளுடன் பொதுமக்கள் கடும் வாக்குவாதம்!

சபரிமலை ஐய்யப்பன் கோயிலில் பூஜை காலத்தின்போது விற்பனை செய்யப்பட்ட நெய்யில் லட்சக்கணக்கில் முறைகேடு!

தமிழகத்தில் நேற்று நடைபெற்ற தேசிய லோக் அதாலத்தில் ஒரு லட்சத்து 3 ஆயிரத்து 366 வழக்குகளுக்கு தீா்வு

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies