போக்குவரத்துத் தொழிலாளர் விவகாரம் - முத்தரப்பு பேச்சுவார்த்தை பிப்.7 -க்கு ஒத்திவைப்பு
Oct 3, 2025, 09:31 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

போக்குவரத்துத் தொழிலாளர் விவகாரம் – முத்தரப்பு பேச்சுவார்த்தை பிப்.7 -க்கு ஒத்திவைப்பு

Web Desk by Web Desk
Jan 19, 2024, 03:50 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும், புதிய ஓய்வூதியத் திட்டத்தைக் கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளைப் போக்குவரத்துக் கழகத் தொழிலாளா்கள் வலியுறுத்தி வந்தனர். இது தொடர்பாக, ஜன. 9-ஆம் தேதி வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்தனா்.

இதையடுத்து, தொழிலாளா் நலத் துறை, போக்குவரத்துத் துறை இணைந்து போக்குவரத்துத் தொழிலாளா்களுடன் முத்தரப்பு பேச்சுவாா்த்தை நடைபெற்றது. அப்போது, ஓய்வூதியதாரா்களுக்கு நிலுவையில் உள்ள அகவிலைப்படி உயா்வு, ஓய்வுபெறும் தொழிலாளா்களுக்குப் பணப் பலன்கள் ஆகிய முக்கியமான பிரச்சினைகளை மட்டுமாவது நிறைவேற்ற வேண்டும் என்று தொழிற்சங்கத்தினா் வேண்டுகோள் விடுத்தனா்.

ஆனால், இதனை அரசத்தரப்பு ஏற்றுக்கொள்ளவில்லை. இது தொடா்பாகச் சென்னையில் நடைபெற்ற முத்தரப்பு பேச்சுவாா்த்தை தோல்வியில் முடிந்தது. இதனையடுத்து, ஜன. 9 -ம் தேதி முதல் திட்டமிட்டபடி வேலை நிறுத்தப்போராட்டத்தைத் தொழிற்சங்கங்கள் தொடங்கின.

தொழிலாளா்கள் பற்றாக்குறையைச் சமாளிக்க அனைத்துப் போக்குவரத்துக் கழகங்களிலும் பயிற்சி ஓட்டுநா்கள், நடத்துநா்கள் மூலம் பேருந்துகள் இயக்கப்பட்டன. இதற்குத் தொழிற்சங்கத்தினர் கடும எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் பயணிகள் கடும் இன்னல்களை எதிர்கொண்டனர்.

இதற்கிடையே வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்கள் பல்வேறு மாவட்டங்களில் சாலை மறியல் போராட்டத்திலும் ஈடுபட்டனர். இது தொடர்பான வழக்குச் சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, பொங்கல் பண்டிகை கொண்டாட உள்ள நிலையில், போராட்டத்தைத் தள்ளிவைக்க நீதிபதி கேட்டுக் கொண்டார். அதன்பேரில் போராட்டம் தள்ளிவைக்கப்பட்டது.

இந்த நிலையில், போக்குவரத்து தொழிலாளர்கள் மற்றும் போக்குவரத்துக் கழகம், தொழிலாளர் நலத்துறை இடையே முத்தரப்பு பேச்சுவார்த்தை நடைபெற்றது. அப்போது, நீதிமன்ற வழிகாட்டுதல்படி வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டவர்கள் மீது பழிவாங்கும் நடவடிக்கை இருக்காது என அரசு அதிகாரிகள் உத்தரவாதம் அளித்தனர்.

இதனைத் தொடர்ந்து, போக்குவரத்து தொழிலாளர்களின் பேச்சுவார்த்தை பிப்.7 -ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

Tags: Transport Labor Issue – Tripartite Talk Adjournment to Feb. 7
ShareTweetSendShare
Previous Post

ஆன்டிபயாட்டிக் மருந்து – மத்திய அரசு புதிய உத்தரவு!

Next Post

பிற்படுத்தப்பட்ட குடும்பங்களின் நலனுக்காக தனது அரசு அர்ப்பணிப்புடன் இருக்கிறது! – பிரதமர் மோடி

Related News

அரசுக்கு எதிராக வெகுண்டெழுந்த Gen Z இளைஞர்கள் – நேபாளம், வங்கதேசம் தற்போது மொராக்கோவில்!

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் அடக்குமுறை : அரசுக்கு எதிராக கொந்தளித்த மக்கள்!

பூட்டான் புவிசார் அரசியலில் திருப்பம் : கோழியின் கழுத்துக்கு அருகே ரயில்பாதை!

மனித உரிமைகள் பற்றி நீங்கள் பேசுவதா? : ஐ.நா.வில் பாகிஸ்தானை கதறவிட்ட இந்தியா!

புலம் பெயர்ந்தோருக்கு புதிய கட்டுப்பாடுகள் : அமெரிக்கா பாணியில் பிடியை இறுக்கியது பிரிட்டன்!

7வது மாதமாக சரிந்த தொழிற்சாலை உற்பத்தி : டிரம்பின் கொள்கையால் அமெரிக்காவில் பொருளாதார நெருக்கடி!

Load More

அண்மைச் செய்திகள்

இழுத்து மூடப்படவிருந்த அரசுப் பள்ளி : உலகின் சிறந்த பள்ளியாக உயர்ந்தது எப்படி?

அரிச்சுவடி ஆரம்பம்!

தவெக ஆனந்துக்கு முன்ஜாமீன் வழங்க மறுப்பு – உயர்நீதிமன்றம்

தவெக தலைவர் விஜய்க்கு தலைமைத்துவ பண்பு இல்லை – சென்னை உயர்நீதிமன்றம் விமர்சனம்!

ஆதவ் அர்ஜுனா மீது சட்டப்படி நடவடிக்கை – காவல்துறைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு!

பஞ்சாப் : சொத்தை எழுதி வைக்க கோரி மாமியாரை தாக்கிய மருமகள்!

அரிய வகை கனிமங்கள் கிடைப்பதை மத்திய அரசு உறுதி செய்துள்ளது – அஸ்வினி வைஷ்னவ்

கர்நாடகா : வீட்டில் மர்ம பொருள் வெடித்ததில் தம்பதி உயிரிழப்பு!

உலக அரசியலில் நாளுக்கு நாள் மோதல்கள் அதிகரித்து வருகிறது – நிர்மலா சீதாராமன்

நியூசி – ஆஸி. இடையேயான போட்டி மழையால் கைவிடப்பட்டது!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies