பெண் தொழில்முனைவோர் இந்திய வணிகச் சூழலை மாற்றி, மாற்றத்தின் முன்னோடிகளாக உள்ளனர் என்று பாராட்டி இருக்கும் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, பெண் தொழில்முனைவோர் சக பெண்களுக்கும் ஆதரவளிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டிருக்கிறார்.
டெல்லியிலுள்ள குடியரசுத் தலைவர் மாளிகையில், முன்னணி ஸ்டார்ட் – அப்கள் மற்றும் யூனிகார்ன் நிறுவனங்களின் நிறுவனர்கள் மற்றும் இணை நிறுவனர்களான பெண்கள் குழுவுடன் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு சந்திக்கும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
நாட்டில் தொழில் முனைவோர் சூழலை வலுப்படுத்துதல், மக்களுடன் ஆழமான தொடர்பை ஏற்படுத்தி அவர்களின் பங்களிப்புகளை அங்கீகரிப்பதை நோக்கமாகக் கொண்ட “மக்களுடன் குடியரசுத் தலைவர்” என்ற முன்முயற்சியின் கீழ் இச்சந்திப்பு இடம்பெற்றது.
அப்போது, நாட்டின் இளைஞர்களின் திறனைப் பயன்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு ‘ஸ்டார்ட் – அப் இந்தியா’ திட்டம் தொடங்கப்பட்டது. ‘ஸ்டார்ட் அப் இந்தியா’ என்ற நோக்கத்தை அடைவதில் விலைமதிப்பற்ற பங்களிப்பை வழங்கிய பெண் தொழில்முனைவோருக்கு பாராட்டுக்கள்.
இதுபோன்ற இளைஞர்களின் புதுமையான முயற்சிகளால், இந்தியா சுமார் 1.17 லட்சம் ஸ்டார்ட் அப்கள் மற்றும் 100-க்கும் மேற்பட்ட யூனிகார்ன்களுடன் உலகின் 3-வது பெரிய ஸ்டார்ட் அப் சுற்றுச்சூழல் அமைப்பைக் கொண்டிருக்கிறது.
பெண் தொழில்முனைவோர் இந்திய வணிகச் சூழலை மாற்றி, மாற்றத்தின் முன்னோடிகளாக உள்ளனர். அதேசமயம், பெண் தொழில்முனைவோர் சக பெண்களுக்கும் ஆதரவளிக்க வேண்டும்” என்றார்.