சச்சின் - யுவராஜ் விளையாடிய கிரிக்கெட் : வெற்றி பெற்றது யார்?
Oct 26, 2025, 10:15 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சச்சின் – யுவராஜ் விளையாடிய கிரிக்கெட் : வெற்றி பெற்றது யார்?

Web Desk by Web Desk
Jan 19, 2024, 04:35 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சச்சின் டெண்டுல்கர் மற்றும் யுவராஜ் சிங் பங்கு விளையாடிய கிரிக்கெட் போட்டியில் சச்சின் அணி 4 விக்கெட்கள் வித்தியாசத்தில் யுவராஜ் அணி தோற்கடித்தது.

சச்சின் டெண்டுல்கர் மற்றும் யுவராஜ் சிங் பங்கு பெற்ற ஒன் வேர்ல்டு – ஒன் பேமிலி கண்காட்சி கிரிக்கெட் போட்டி கர்நாடகாவில் நேற்று நடைபெற்றது.

கர்நாடகாவின் கிராம பகுதிகளில் உள்ள மாணவர்களின் கல்வி மற்றும் பல ஆயிரம் பேருக்கு இலவச இருதய அறுவை சிகிச்சை செய்வதற்கு நிதி திரட்டும் தனியார் தொண்டு நிறுவனம் சார்பில் இந்த போட்டி நடைபெற்றது.

இந்த போட்டியில் மொத்தம் 24 ஜாம்பவான் வீரர்கள் பங்கேற்றனர். இதில் சச்சின் டெண்டுல்கர் தலைமையில் ஒரு அணியும், யுவராஜ் சிங் தலைமையில் ஒரு அணியும் களமிறங்கியது.

இதில் சச்சின் டெண்டுல்கர் தலைமையிலான ஒன் வேர்ல்டு அணி டாஸ் வென்று முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதன்படி முதலில் பேட்டிங் செய்த ஒன் பேமிலி அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்கள் இழப்பிற்கு 180 ரன்களை எடுத்தது.

டேரன் மேடி அரைசதமடித்து 51 ரன்கள் எடுத்தார். யூசுப் பதான் 38 ரன்கள் அடித்தார். கேப்டன் யுவராஜ் சிங் தனது பாணியில் அதிரடி காட்டி 23 ரன்கள் எடுத்தார்.

சச்சின் அணி சார்பில் ஹர்பஜன் சிங் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். ஆர்பி சிங், அசோக் டின்டா, மாண்டி பனேசர், சச்சின் டெண்டுல்கர் ஆகியோர் தலா 1 விக்கெட்டை எடுத்தனர்.

இதனைத் தொடர்ந்து 181 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய சச்சின் அணி 19.5 வது ஓவரில் 6 விக்கெட்கள் இழப்பிற்கு 184 ரன்களை எடுத்து வெற்றி பெற்றது.

இதில் தொடக்க வீரராக களமிறங்கிய சச்சின் 27 ரன்கள் எடுத்து முரளிதரன் சுழலில் சிக்கி ஆட்டமிழந்தார். தென் ஆப்பரிக்காவின் ஆல்விரோ பீட்டர்சன் சிறப்பாக பேட் செய்து அரை சதத்தை பூர்த்தி செய்து 74 ரன்கள் அடித்தார்.

கடைசி நேரத்தில் 2 பந்துகளில் 3 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் பேட் செய்த இர்பான் பதான் சிக்ஸரை பறக்கவிட்டு அணியை வெற்றி பெற செய்தார்.

யுவராஜ் அணியில் அதிகபட்சமாக சமிந்த வாஸ் 3 விக்கெட்களை வீழ்த்தினார். ஜேசன் கிரெஜா விக்கெட்களும், மகாயாந்தினி 1 விக்கெட்டும் வீழ்த்தினர். இதன் மூலம் சச்சின் அணி 4 விக்ஸ்ட்கள் வித்தியாசத்தில் யுவராஜ் அணியை தோற்கடித்தது.

Tags: sachin tendulkaryuvaraj singhCricket played by Sachin and Yuvraj: Who won?
ShareTweetSendShare
Previous Post

1949-ல் இராம் லல்லா சிலையை அகற்றுமாறு உ.பி. அரசை வலியுறுத்திய காங்கிரஸ் அரசு!

Next Post

பெண் தொழில்முனைவோர் மாற்றத்தின் முன்னோடிகள்: திரௌபதி முர்மு புகழாரம்!

Related News

வேலூர் அருகே ஏரி கால்வாயில் உடைப்பு – குடியிருப்புகளை சூழ்ந்தது வெள்ளம்!

வேலூர் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை – வீடுகளுக்குள் புகுந்த வெள்ளம்!

கனடா பொருள்களுக்கு 10 சதவீத கூடுதல் வரி – ட்ரம்ப் உத்தரவு!

பேச்சுவார்ததை தோல்வி அடைந்தால் ஆப்கனுக்கு எதிராக வெளிப்படையான போரை நடத்துவோம் – பாகிஸ்தான் மிரட்டல்!

போட்டோ ஷூட் நடத்துதில் கவனம் செலுத்தும் முதல்வர் ஸ்டாலின் – அர்ஜூன் சம்பத் விமர்சனம்!

பாலிவுட் நடிகர் சதீஷ் ஷா மறைவு – பிரதமர் இரங்கல்!

Load More

அண்மைச் செய்திகள்

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நாக சதுர்த்தி விழா – திரளான பக்தர்கள் தரிசனம்!

வேலூர் தங்க கோயிலில் மத்திய அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் சாமி தரிசனம்!

சென்னை வேளச்சேரி, தரமணி இணைப்பு சாலை ரயில்வே சுரங்க பாதையில் மழை நீர் தேக்கம்!

கோவில்பட்டியில் செண்பகவல்லி அம்மன் உடனுறை கோயில் குளத்தில் கழிவுநீர் கலப்பு – பாஜக ஆர்பாட்டம்!

ஈரோட்டில் அரசு கூட்டுறவு வங்கியில் 80 சவரன் நகைகள் கையாடல் – ஊழியர் தலைமறைவு!

சபரிமலை ஐயப்பன் கோயிலில் தங்கம் மாயமான விவகாரம் – சென்னையில் சிறப்பு புலனாய்வு குழு விசாரணை!

தமிழ்நாடு தனியார் பல்கலைக்கழக சட்டத்திருத்த மசோதா திரும்பப்பெறப்படுகிறது – அமைச்சர் கோவி.செழியன்

டெல்டா விவசாயிகள் இன்னல்களுக்கு முதல்வரே காரணம் – நயினார் நாகேந்திரன்

நாமக்கல் நகரில் தனியார் அரிசி அரவை ஆலையில் மத்திய குழு ஆய்வு

ஆம்பூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கன மழை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies