குஜராத் ஓகா – தூத்துக்குடி இடையே இயக்கப்படும் விவேக் விரைவு இரயிலின் பெட்டிகள், புதிதாக எடை குறைந்த எல்.எச்.பி. இரயில் பெட்டிகளாக மாற்றப்பட உள்ளது.
இதுகுறித்து தெற்கு இரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: குஜராத் ஓகா – தூத்துக்குடி இடையே விவேக் விரைவு இரயில் இயக்கப்படுகிறது. இந்த இரயிலின் பெட்டிகள் வரும் 26-ஆம் தேதி முதல் புதிதாக எடை குறைந்த எல்.எச்.பி. பெட்டிகளாக மாற்றப்பட உள்ளன.
இதில், இரண்டு ஈரடுக்கு குளிா்சாதன பெட்டிகள், ஆறு மூன்றடுக்கு குளிா்சாதன பெட்டிகள், 6 படுக்கை வசதி கொண்ட பெட்டிகள், 3 பொதுப்பெட்டிகள், ஒரு மாற்றுத்திறனாளிகளுக்கான பெட்டிகள் இணைக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.