விமானத்தில் செல்லும் பயணிகளுக்கான முக்கிய தகவல்!
Mar 15, 2026, 10:55 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

விமானத்தில் செல்லும் பயணிகளுக்கான முக்கிய தகவல்!

Murugesan M by Murugesan M
Jan 24, 2024, 04:51 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

75-வது குடியரசு தின விழாவை முன்னிட்டு, வரும் 26-ஆம் தேதி வரை, விமானத்தில் செல்லும் பயணிகளுக்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து பார்ப்போம்.

வருகிற 26-ஆம் தேதி நாடு முழுவதும் குடியரசு தின விழா கொண்டாடப்பட உள்ளது. அப்போது, டெல்லி கடமைப்பாதையில் வீரர்கள் அணிவகுப்பு, மாநிலங்கள் மற்றும் மத்திய அமைச்சக துறைகளின் அலங்கார ஊர்திகள் அணிவகுப்பு, மோட்டார் மற்றும் விமான சாகச நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன.

தேசிய முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வு நெருங்கி வருவதால், தலைநகர் டெல்லியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், குடியரசு தின விழாவை முன்னிட்டு, இந்தியா முழுவதும் உள்ள விமான நிலையங்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருப்பதற்கு, பின்பற்ற வேண்டிய வழிமுறைகளை, பெங்களூரு ஏவியேஷன் என்ற விமானச் செய்தி இணையதளம் பகிர்ந்துள்ளது.

பெங்களூரு ஏவியேஷன் படி, கேரி-ஆன் பேக்கேஜில் கொண்டு செல்லக்கூடிய பொருட்களுக்கு, கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்படும். இதில், டால்கம் பவுடர், தூள் மசாலா, மசாலாக்கள், லைட்டர்கள் மற்றும் ஆயுதங்கள் ஆகியவை அடங்கும்.

கூடுதலாக, இந்திய விமான நிலைய ஆணையம் (AAI), ஜனவரி 26-ஆம் தேதி விமானங்களில் செல்லும் பயணிகளுக்கான பரிந்துரைகளையும் வழங்கி உள்ளது. அதன்படி, உங்கள் பயண ஆவணங்களை பத்திரமாக வைத்திருங்கள். பயண ஆவணங்கள் எப்போது வேண்டுமானாலும் அடையாளச் சரிபார்ப்புக்காக கேட்கப்படும்.

ஜனவரி 26-ஆம் தேதி, விமானங்களில் பயணிப்போர், அத்தியாவசியப் பொருட்களை மட்டும் எடுத்துச் செல்லவும், சிரமமில்லாமல் செக்-இன் செய்வதற்கான விமான வழிகாட்டுதல்களைச் சரிபார்க்கவும் அறிவுறுத்தி உள்ளது.

விமானங்களில் செல்லும் பயணிகள் ஆணி, கத்தரிக்கோல் அல்லது ஏதேனும் கூர்மையான பொருட்களைக் கொண்டு செல்வதைத் தவிர்க்குமாறு பயணிகளை AAI கேட்டுக் கொண்டுள்ளது.

பயணிகள் விமானங்களில் செல்வதற்கு முன்பாக, பவர் பேங்க், லைட்டர் போன்ற பொருட்கள் எடுத்து செல்வதை தவிர்த்துவிடவும், தடை செய்யப்பட்ட பொருட்கள் எதுவும் எடுத்து செல்லவில்லை என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளவும் விமான நிலைய ஆணையம் அறிவுறுத்தி உள்ளது.

டெல்லியில் உள்ள இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில், விமானச் செயல்பாடுகள் ஜனவரி 26-ஆம் தேதி வரை தினமும் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக நிறுத்தி வைக்கப்படும். ஜனவரி 19-ஆம் தேதி முதல் ஜனவரி 26-ஆம் தேதி வரை, தினமும் காலை 10.20 முதல் மதியம் 12.45 வரை டெல்லி விமான நிலையத்தில் விமானங்கள் தரையிறங்கவோ, புறப்படவோ அனுமதி கிடையாது.

இதற்கிடையே, குடியரசு தின விழா அணிவகுப்பு நடைபெறும் மத்திய மும்பையின் சிவாஜி பூங்காவைச் சுற்றியுள்ள பகுதியில், ஜனவரி 26-ஆம் தேதி விமானங்கள் பறக்க தடை விதித்து மும்பை காவல்துறை செவ்வாய்க்கிழமை உத்தரவு பிறப்பித்தது.

Tags: Important information for air travelers!
ShareTweetSendShare
Previous Post

டெசர்ட் நைட் விமானப்படைப் பயிற்சி!

Next Post

மகளிர் சக்தி, உள்நாட்டுத் தயாரிப்புத் தொழில்நுட்பங்களை டிஆர்டிஓ காட்சிப்படுத்துகிறது!

Related News

மேற்காசிய பிராந்தியத்தில் நிலவும் போர் பதற்றம் – லாபத்தில் மிதக்கப்போகும் அமெரிக்க ஆயுத விற்பனை நிறுவனங்கள்!

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

சமையல் எரிவாயு குறித்த அச்சம் வேண்டாம் – மத்திய அரசு

திமுக மாணவரணி செயலாளர் பொறுப்பில் இருந்து ராஜீவ்காந்தி திடீர் விடுவிப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

தூத்துக்குடி கொடூரம்.. அமைச்சர் கீதா ஜீவன், கனிமொழி எம்பி ராஜினாமா செய்ய வேண்டும் – பாஜக மாநில துணை தலைவர் வலியுறுத்தல்

தூத்துக்குடியில் மாணவிக்கு நேர்ந்த கொடூரம் – 4 நாட்களாகியும் குற்றவாளிகளை கைது செய்ய முடியாமல் திணறும் போலீசார்..பொதுமக்கள் சாலைமறியல்!

மதுரை விமான நிலையத்தில் புதிய வான் கட்டுப்பாட்டு கட்டிடத்தை திறந்து வைத்த மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு!

AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எதிர்க்கட்சிகள் பொய் பிரச்சாரம் செய்கிறது – மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் குற்றச்சாட்டு

ஷில்லாங் – சில்சார் இடையே அதிவேக 4 வழித்திட்டத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்!

சண்முக நதி கரையோரம் மலைபோல் தேங்கும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு!

மலைக்கோயிலில் இந்து முன்னணி சார்பில் தூய்மை பணிகள்!

தூத்துக்குடி கொடூரம் -அதிமுக சார்பில் நீதி வேண்டி வாயில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம்

காதணி விழாவுக்கு ரூ.15 லட்சம் மதிப்பில் அத்தை சீர்வரிசை!

ஆண்டிபட்டி அருகே முற்றிலும் இல்லாமல் போன வைகை அணையின் நீர்வரத்து!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies