உலகம் முழுவதும் கடந்த நவம்பர் மாதம் முதல் ஜே.என்.1 வைகை கொரோனா வைரஸ் வேகமாக பரவ தொடங்கியது. இந்தியாவிலும் கொரோனா பாதிப்பு அதிகரித்த நிலையில், கடந்த சில நாட்களாக மெல்ல குறைய தொடங்கி உள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில், காலை 8 மணி நிலவரப்படி 198 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுவோரின் மொத்த எண்ணிக்கை, 1 ஆயிரத்து 764 ஆக உள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில், கொரோனா பாதிப்பில் இருந்து 319 பேர் மீண்டுள்ளனர். கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 4 கோடியே 44 இலட்சத்து 89 ஆயிரத்து 342 பேர் மீண்டுள்ளனர். கொரோனா பாதிப்பால் ஒருவர் உயிரிழந்தார்.
இந்தியாவில் தற்போது வரை 220 கோடியே 67 இலட்சத்து 84 ஆயிரத்து 995 டோஸ் கோவிட்-19 தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளது.