அடுத்த 10 நாட்களுக்குள் பிரம்மோஸ் ஏவுகணை ஏற்றுமதி: டி.ஆர்.டி.ஓ. தலைவர் தகவல்!
Mar 15, 2026, 08:20 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

அடுத்த 10 நாட்களுக்குள் பிரம்மோஸ் ஏவுகணை ஏற்றுமதி: டி.ஆர்.டி.ஓ. தலைவர் தகவல்!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Jan 26, 2024, 05:50 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

அடுத்த 10 நாட்களுக்குள் பிரம்மோஸ் சூப்பர்சோனிக் க்ரூஸ் ஏவுகணைகளுக்காக வடிவமைக்கப்பட்ட தரை அமைப்புகளின் ஏற்றுமதியைத் தொடங்க உள்ளதாகத் தெரிவித்திருக்கும் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பின் (டி.ஆர்.டி.ஓ.) தலைவர் டாக்டர் சமீர் வி காமத், இந்த ஆண்டு மார்ச் மாதத்திற்குள் கப்பல் ஏவுகணைகளும் பிற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் என்று கூறியிருக்கிறார்.

இந்தியா மற்றும் ரஷ்யாவின் கூட்டு முயற்சியால் பிரம்மோஸ் ஏவுகணைகள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. இந்த ஏவுகணைகளை தரையில் இருந்தும், கப்பல்களில் இருந்தும், விமானங்களின் மூலமும் ஏவ முடியும். ஆகவே, இந்த ஏவுகணைக்கு உலகளவில் மிகப்பெரிய அளவில் வரவேற்பு இருக்கிறது.

ஆகவே, இந்தியாவின் பிரம்மோஸ் ஏவுகணைகளை வாங்க பிலிப்பைன்ஸ், வியட்நாம், மலேசியா, இந்தோனேசியா, ஐக்கிய அரபு அமீரகம், சௌதி அரேபியா, தென்னாப்பிரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் விருப்பம் தெரிவித்திருக்கிறன.

இதையடுத்து, மேற்கண்ட நாடுகளுக்கு பிரம்மோஸ் ஏவுகணைகளை ஏற்றுமதி செய்யவதற்கான நடவடிக்கைகளில் மத்திய அரசு தீவிரம் காட்டி வருகிறது. மேலும், 2025-ம் ஆண்டுக்குள் பிரம்மோஸ் ஏவுகணை ஏற்றுமதி மூலம் 41,500 கோடி ரூபாய் வருவாய் இலக்கை எட்ட மத்திய அரசு திட்டமிட்டிருக்கிறது.

, இதுகுறித்து செய்தி நிறுவனம் ஒன்றுக்குப் பேட்டியளித்த டி.ஆர்.டி.ஓ. தலைவர் டாக்டர் காமத், “ஆயுதப்படைக்கு கூடுதல் வலுசேர்க்கும் வகையில், டி.ஆர்.டி.ஓ. உருவாக்கிய LCA Mk-1A, அர்ஜுன் Mk-1A, QRSAM மற்றும் ஆகாஷ் ஏவுகணை அமைப்பு ஆகியவை சேர்க்கப்பட்டிருக்கிறது.

அடுத்த 10 நாட்களுக்குள் பிரம்மோஸ் சூப்பர்சோனிக் க்ரூஸ் ஏவுகணைகளுக்காக வடிவமைக்கப்பட்ட தரை அமைப்புகளின் ஏற்றுமதி தொடங்க உள்ளது. இந்த ஆண்டு மார்ச் மாதத்திற்குள் கப்பல் ஏவுகணைகளும் பிற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும்” என்று கூறியிருக்கிறார்.

சுமார் 4.94 லட்சம் கோடி ரூபாய் மதிப்பில் டி.ஆர்.டி.ஓ.வால் உருவாக்கப்பட்ட தயாரிப்புகள், வெற்றிகரமாக defence acqusition council மூலம் அங்கீகாரம் பெறப்பட்டுள்ளது. பிரம்மோஸ் சூப்பர்சோனிக் க்ரூஸ் ஏவுகணைகள், அவற்றின் துல்லியம் மற்றும் வேகத்திற்காக புகழ்பெற்றவை.

அவை நவீன போரில் ஒரு வல்லமைமிக்க சொத்தாக கருதப்படுகிறது. தரை அமைப்புகளை ஏற்றுமதி செய்வதற்கான நடவடிக்கையானது, பாதுகாப்பு உறவுகளை வலுப்படுத்துவதற்கும், அதன் தொழில்நுட்ப வல்லமையை உலக அரங்கில் வெளிப்படுத்துவதற்கும் உறுதியளிப்பதாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்து பிரபல விஞ்ஞானியும், பிரம்மோஸ் ஏரோஸ்பேஸ் தலைவருமான அதுல் தினகர் ரானே கூறுகையில், “பிரம்மோஸ் ஏவுகணை 2004-ம் ஆண்டு பயன்பாட்டிற்கு வந்தபோது 13 சதவீதம் மட்டுமே உள்நாட்டு உதிரி பாகங்கள் இருந்தன. ஆனால், கடந்த 19 ஆண்டுகளில் இது 75 சதவீதமாக அதிகரிக்கப்பட்டிருக்கிறது.

அதேசமயம், 100 சதவீதம் உள்நாட்டு தயாரிப்பாக இந்த ஏவுகணையை தயாரிக்க முடியாது. ஏனெனில், பிரம்மோஸ் ஏவுகணை என்பது ரஷ்யா மற்றும் இந்தியாவால் மேற்கொள்ளப்படும் கூட்டு திட்டமாகும். மேலும், ரஷ்யாவின் ஒரு சில தொழில்நுட்பங்களை நாம் சார்ந்துள்ளதால் 100 சதவீதம் எட்ட முடியாது. 75 சதவீத உள்நாட்டு தொழில்நுட்பங்களால், பிரம்மோஸ் ஏவுகணையின் ஒட்டுமொத்த விலை வெகுவாகக் குறைந்துள்ளது” என்று தெரிவித்தார்.

Tags: Exportbrahmos missileNest 10 daysDRDO Chairman
ShareTweetSendShare
Previous Post

இந்திய – சீன எல்லையில் குடியரசு தினம் கொண்டாட்டம்!

Next Post

குடியரசு தின விழா : கர்தவ்யா பாதையில் புடவைகள் காட்சி !

Related News

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

சமையல் எரிவாயு குறித்த அச்சம் வேண்டாம் – மத்திய அரசு

திமுக மாணவரணி செயலாளர் பொறுப்பில் இருந்து ராஜீவ்காந்தி திடீர் விடுவிப்பு!

தூத்துக்குடி கொடூரம்.. அமைச்சர் கீதா ஜீவன், கனிமொழி எம்பி ராஜினாமா செய்ய வேண்டும் – பாஜக மாநில துணை தலைவர் வலியுறுத்தல்

Load More

அண்மைச் செய்திகள்

தூத்துக்குடியில் மாணவிக்கு நேர்ந்த கொடூரம் – 4 நாட்களாகியும் குற்றவாளிகளை கைது செய்ய முடியாமல் திணறும் போலீசார்..பொதுமக்கள் சாலைமறியல்!

மதுரை விமான நிலையத்தில் புதிய வான் கட்டுப்பாட்டு கட்டிடத்தை திறந்து வைத்த மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு!

AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எதிர்க்கட்சிகள் பொய் பிரச்சாரம் செய்கிறது – மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் குற்றச்சாட்டு

ஷில்லாங் – சில்சார் இடையே அதிவேக 4 வழித்திட்டத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்!

சண்முக நதி கரையோரம் மலைபோல் தேங்கும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு!

மலைக்கோயிலில் இந்து முன்னணி சார்பில் தூய்மை பணிகள்!

தூத்துக்குடி கொடூரம் -அதிமுக சார்பில் நீதி வேண்டி வாயில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம்

காதணி விழாவுக்கு ரூ.15 லட்சம் மதிப்பில் அத்தை சீர்வரிசை!

ஆண்டிபட்டி அருகே முற்றிலும் இல்லாமல் போன வைகை அணையின் நீர்வரத்து!

மத்திய விமான போக்குவரத்து அமைச்சருக்கு பாரம்பரிய வரவேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies