நம்மை ஆளும் அரசியல்வாதிகளிடம் ஏன் தகுதியை எதிர்பார்ப்பதில்லை! - அண்ணாமலை கேள்வி?
Aug 19, 2025, 09:07 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

நம்மை ஆளும் அரசியல்வாதிகளிடம் ஏன் தகுதியை எதிர்பார்ப்பதில்லை! – அண்ணாமலை கேள்வி?

Web Desk by Web Desk
Jan 29, 2024, 11:24 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

உதயநிதி வாழ்க என்று சேலம் மாநாட்டுக்கு நடந்த பேரணியில் வெட்கமே இல்லாமல் கோஷமிட்டுச் செல்கிறார் பொன் முடி எனப் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

ஊழலுக்கு எதிரான அண்ணாமலையின் ”என் மண் என் மக்கள்” பாதயாத்திரை திருக்கோவிலூர் மண்ணில் நடைப்பெற்றது. இந்த பாதயாத்திரையில் ஆயிரக்கணக்காணோர் பங்கேற்றனர்.

கூட்டத்தில் பேசிய அண்ணாமலை, 

திருக்கோவிலூர் அடுத்துள்ள ஆதிச்சனூர் பகுதியில், 2500 ஆண்டுகள் பழமையான உயிர்நீத்தார்களுக்கு மரியாதை செலுத்தக்கூடிய கல் படுக்கை கண்டறியப்பட்டுள்ளது. தென்கிழக்கு ஆசியாவையே தன் ஆளுகைக்குள் கொண்டு வந்த ராஜராஜசோழனை ஈன்றெடுத்த, தாய் வானவன் மகாதேவியார் பிறந்த ஊர் இது.

சனாதன தர்மத்தை காக்கவும், தமிழர்களின் வீரம் -விவேகத்தை உலகறியச் செய்யவும் தோன்றிய ராஜராஜசோழனை திருவயிற்றில் தாங்கிய ராஜாமாதா பிறந்த மண் இது. மிக உயரமான 192 அடி ராஜகோபுரம் கொண்ட, 108 வைணவ திவ்ய தேசங்களில் ஒன்றான உலகளந்த பெருமாள் கோவில் அமைந்திருக்கும் புண்ணிய ஸ்தலம்.

சைவ சமயத்தில் முக்கியமான சுந்தர மூர்த்தி நாயனாரை சைவத்துக்கு சிவ பெருமான் ஆட்கொண்ட, புகழ்பெற்ற திருவெண்ணைநல்லூர் கிருபாபுரீஸ்வரர் ஆலயமும், இந்த தொகுதியில் தான் அமைந்துள்ளது.

சைவ சித்தாந்த கோட்பாடு நூலான சிவஞான போதத்தை உலகுக்கு தந்த மெய்கண்டர் இந்த மண்ணில் பிறந்தவர். கம்பராமாயணம் எழுத கம்பருக்கு பெரும் உதவி செய்த சடையப்ப வள்ளல் இந்த மண்ணில் பிறந்தவர்.

இத்தகைய சிறப்பு அம்சங்கள் கொண்ட திருக்கோவிலுார் உலகளந்த பெருமாள் கோவில் பெயரில், பக்தர்கள் வழங்கிய நிலங்கள் தற்போது முழுவதுமாக ஆக்கிரமிக்கப்பட்டு கடைகள், வீடுகளாகி விட்டது.

பல இடங்கள் பட்டா மாற்றம் செய்யப்பட்டு கைமாறி விற்பனையும் செய்யப்பட்டுள்ளது. இது தான் தமிழகத்தின் இந்து சமய அறநிலையத்துறையின் சாதனை.
விழுப்புரம் மாவட்டத்தை இணைக்கும் தேசிய நெடுஞ்சாலைகளுக்கு இதுவரை 4,777 கோடி ரூபாய் நமது மத்திய அரசு செலவிட்டுள்ளது.

விழுப்புரம் ரயில் நிலையம் 24 கோடி ரூபாய் செலவில் சீரமைக்கப்பட்டுள்ளது. 76,904 பேருக்கு பிரதமரின் வீடு திட்டம் மூலமாக வீடு, 2,67,008 வீடுகளில் குழாய் மூலம் குடிநீர், 2,48,964 வீடுகளில் இலவச கழிப்பறைகள், 1,30,371 பேருக்கு இலவச சமையல் எரிவாயு இணைப்பு, 1,88,474 பேருக்கு, 5 லட்ச ரூபாய் பிரதமரின் மருத்துவ காப்பீடு, 5,28,599 விவசாயிகளுக்கு வருடம் 6000 ரூபாய், விழுப்புரம் மாவட்டத்திற்கு 5,104 கோடி ரூபாய் முத்ரா கடன் உதவி என, மாண்புமிகு பாரதப் பிரதமர் நரேந்திர மோடி வழங்கியுள்ள நலத்திட்டங்கள் ஏராளம்.

திருக்கோவிலூர் சட்டமன்ற உறுப்பினர் மற்றும் துறையில்லாத அமைச்சர் செய்த சாதனைகள், பெண்களை ஓசி என்று திட்டியது, பட்டியல் மக்களை நீ SC தானே என்று பொதுமேடையில் அவமதித்தது, அப்படியே வாக்களித்து கிழிச்சுடீங்க என்று வாக்காளர்களை அசிங்கப்படுத்தியது, ஏ போயா என்று ஆளுநரை அவமரியாதையாகப் சட்டமன்றத்தில் பேசியது, யோவ் சும்மா உக்காருய்யா என்று எதிர்கட்சியினரை பார்த்து கத்தியது.

இவைதான் அவரின் பெருமை பேசும் சாதனைகள். ஊழல் வழக்கில் அமைச்சர் பதவியிழந்த பின்னர், உடல் நலம் சரியில்லை என்று உச்ச நீதிமன்றத்தில் பொய் கூறி, சிறைக்குச் செல்வதை தள்ளி வைத்துவிட்டு, உதயநிதி வாழ்க என்று சேலம் மாநாட்டுக்கு நடந்த பேரணியில் வெட்கமே இல்லாமல் கோஷமிட்டுச் செல்கிறார்.

பொன்முடிக்குச் சொந்தமான இடங்களில் நடந்த அமலாக்கத் துறை சோதனையில், முறைகேடாக உரிமம் வழங்கியது தொடர்பான ஆவணங்கள், ₹81.7 லட்சம் ரொக்கம் மற்றும் ₹13 லட்சம் மதிப்புள்ள பிரிட்டிஷ் பவுண்டுகள், ₹41.9 கோடி வங்கி வைப்புத் தொகை முடக்கப்பட்டுள்ளன, இரண்டு வெளிநாட்டு நிறுவனங்கள் தொடர்பான ஆவணங்கள் சிக்கியுள்ளன.

வெறும் ₹41.57 லட்சத்திற்கு ஒரு நிறுவனத்தை வாங்கியதாகக் கணக்கு காட்டி, பின்னர் 2022 ஆம் ஆண்டு, ₹100 கோடிக்கு விற்றதில் ஹவாலா மூலம் பெருமளவு பணம் பரிமாற்றம் செய்யப்பட்டுள்ளதாகச் சந்தேகிக்கப்படுகிறது. இது தான் துறையில்லாத அமைச்சரான பொன்முடியின் லட்சணம்.

சாதாரண மூட்டை தூக்கும் தொழிலாளிக்குக் கூட குறைந்தபட்ச தகுதி எதிர்பார்க்கும் நாம், நம்மை ஆளும் அரசியல்வாதிகளிடம் ஏன் அந்தத் தகுதியை எதிர்பார்ப்பதில்லை. ஒரு குடும்பத்தில் பிறந்த தகுதியை மட்டுமே வைத்துக் கொண்டு, மக்கள் பணத்தைத் திருடி ஊழல் செய்து அவர்கள் குடும்பம் மட்டுமே நன்றாக இருக்கும்படி பார்த்துக் கொள்கிறார்களே தவிர, தமிழக இளைஞர்களுக்கு மகளிர் மேம்பாடுக்கென வேலைவாய்ப்போ, புதிய திட்டங்களோ இத்தனை ஆண்டுகள் தமிழகத்தை ஆட்சி செய்தவர்கள் கொண்டு வரவில்லை.

மாற்றி மாற்றி வாக்களித்து மக்கள் ஏமாற்றத்தின் உச்சத்தில் இருக்கிறார்கள். ஒருவரை விட ஒருவர் அதிக ஊழல் செய்து, இறுதியில் பாதிக்கப்படுவது சாதாரண பொதுமக்கள்தான்.

வரும் பாராளுமன்றத் தேர்தல், தமிழகத்தில் அரசியல் மாற்றத்திற்கான முதற்படி. ஊழலற்ற, நேர்மையான, மக்கள் நலன் சார்ந்த அரசியல் தமிழகத்திலும் வர வேண்டும் என்ற எதிர்பார்ப்பு தமிழகம் மக்களிடம் உணர முடிகிறது.

பாரதப் பிரதமர் நரேந்திர மோடியின் பத்தாண்டு கால நல்லாட்சி, தமிழக மக்களுக்கு அந்த நம்பிக்கையைக் கொடுத்திருக்கிறது. வரும் பாராளுமன்றத் தேர்தலில், நேர்மையின் பக்கம் நின்று, நமது பிரதமர் மோடி, மூன்றாவது முறையாகப் பிரதமர் பொறுப்பேற்க இம்முறை தமிழகமும் துணை நிற்கும் எனத் தெரிவித்தார்.

Tags: bjp k annamalaidmk fails
ShareTweetSendShare
Previous Post

அமலாக்கத்துறை முன்பு விசாரணைக்கு ஆஜரானார் லாலு பிரசாத் யாதவ்!

Next Post

கருணாநிதி எழுதிய நெஞ்சுக்கு நீதியை ஸ்டாலின் படிக்கவில்லை! – அண்ணாமலை

Related News

சி.பி.ஆருக்கு ஆதரவு அளிக்கவில்லை எனில் திமுகவின் தமிழ்ப்பற்று வேடம் கலைந்து விடும் – தமிழிசை சௌந்தரராஜன்

தெலங்கானாவில் கனமழை – வனதுர்க பவானி கோயிலை சூழ்ந்த வெள்ளம்!

பிரதமர் மோடியின் தைரியத்தையும், உறுதித் தன்மையையும் யாராலும் அசைத்து பார்க்க முடியாது – மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங்

சீன வெளியுறவுத்துறை அமைச்சருடன் ஜெய்சங்கர் சந்திப்பு – இருதரப்பு உறவு குறித்து முக்கிய ஆலோசனை!

கோவையில் சிறுவனின் தொண்டையில் சிக்கிய மிட்டாய் – லாவகமாக எடுத்த ரயில்வே போலீசார்!

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் ஆவணித் திருவிழா!

Load More

அண்மைச் செய்திகள்

குடியரசு துணைத் தலைவர் வேட்பாளர் தேர்வு – இண்டி கூட்டணி ஆலோசனை!

பிரதமர் மோடியுடன் விளாடிமிர் புதின் தொலைபேசியில் பேச்சு – ட்ரம்ப்புடன் நடைபெற்ற சந்திப்பு குறித்து விளக்கினார் ரஷ்ய அதிபர்!

உக்ரைனுக்கு ஆதரவாக டிரம்புடன் ஐரோப்பிய நாடுகளின் தலைவர்கள் சந்திப்பு!

புதினும் ஜெலன்ஸ்கியும் போரை முடிவுக்குக் கொண்டு வர விரும்புகிறார்கள் – ட்ரம்ப் பேட்டி!

மிஸ் யூனிவர்ஸ் இந்தியாவாக ராஜஸ்தானைச் சேர்ந்த மணிகா விஸ்வகர்மா தேர்வு!

மதுரையில் போராட்டத்தில் ஈடுபட்ட தூய்மைப் பணியாளர்கள் கைது!

கூட்டத்திற்குள் நோயாளி இல்லாமல் வந்த ஆம்புலன்ஸ் வாகனம் – திட்டமிட்டு திமுக இடையூறு செய்வதாக இபிஎஸ் புகார்!

பிரதமர் மோடியை சந்தித்து வாழ்த்து பெற்றார் விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லா!

லாஸ் வேகாஸை புரட்டிப்போட்ட அதிபர் டிரம்பின் நடவடிக்கை : பொருளாதார நெருக்கடியால் திண்டாடும் மக்கள்!

டிரம்பின் வரிகள் அமெரிக்காவை தனிமைப்படுத்தும் : பொருளாதார நிபுணர் ஜெஃப்ரி சாக்ஸ் கடும் எச்சரிக்கை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies