ஏடன் வளைகுடாவில் எண்ணெய் கப்பலுக்கு உதவி: இந்தியாவுக்கு குவியும் பாராட்டு!
Oct 25, 2025, 06:53 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஏடன் வளைகுடாவில் எண்ணெய் கப்பலுக்கு உதவி: இந்தியாவுக்கு குவியும் பாராட்டு!

Web Desk by Web Desk
Jan 29, 2024, 11:51 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஏடன் வளைகுடா பகுதியில் ஏவுகணைத் தாக்குதலில் தீப்பிடித்த பிரிட்டன் நாட்டின் எண்ணெய் கப்பலுக்கு உதவியதற்காக இந்தியாவுக்கு உலகம் முழுவதும் இருந்து பாராட்டுகள் குவிந்து வருகின்றன. இனி சீனாவைக் கொண்டாடுவதை நிறுத்தி விட்டு, இந்தியாவை கொண்டாடுங்கள் என்று தெரிவித்து வருகின்றனர்.

இஸ்ரேல் நாட்டுக்கும், பாலஸ்தீனத்தின் காஸா நகரை தங்களது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும் ஹமாஸ் தீவிரவாதிகளுக்கும் இடையே கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 7-ம் தேதி முதல் போர் நடந்து வருகிறது. இப்போரில் ஹமாஸ் தீவிரவாதிகளுக்கு ஹிஸ்புல்லா, ஹௌதி போன்ற தீவிரவாத அமைப்புகள் ஆதரவு தெரிவித்து வருகின்றன.

ஆகவே, ஏமன் நாட்டின் ஹௌதி கிளர்ச்சியாளர்கள், ஏடன் வளைகுடா, செங்கடல் போன்ற பகுதிகளில் செல்லும் சரக்குக் கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தி வருகின்றனர். அந்த வகையில், கடந்த இரு தினங்களுக்கு முன்பு ஏடன் வளைகுடா பகுதியில் சென்ற பிரிட்டன் நாட்டின் ‘மார்லின் லுவாண்டா’ என்ற எண்ணெய் கப்பல் மீது ஏவுகணை தாக்குதல் நடந்தினர்.

இதையடுத்து, அக்கப்பலில் இருந்து உதவி கோரப்பட்டது. இதைத் தொடர்ந்து, இந்திய கடற்படையின் ஐ.என்.எஸ். விசாகப்பட்டினம் போர்க்கப்பல் விரைந்து சென்று, அக்கப்பலில் இருந்த தீயை அணைத்ததோடு, அக்கப்பலில் இருந்த 22 இந்திய பணியாளர்கள் மற்றும் வங்கதேசத்தைச் சேர்ந்த ஒருவரையும் மீட்டது.

இந்த நிலையில், நமது கடற்படையின் இத்தகைய செயலுக்கு உலகம் முழுவதும் இருந்து பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன. இதுகுறித்து பிரிட்டன் பத்திரிகையாளர் மார்க் அர்பன் கூறுகையில், ஏடன் வளைகுடா மற்றும் செங்கடல் பகுதியில் நெருக்கடிகளுக்கு இடையே சீனாவை விட இந்தியா பல மடங்கு பலம் வாய்ந்து வருகிறது” என்று கூறியிருக்கிறார்.

அதேபோல, வரலாற்று ஆசிரியர் மார்ட்டின் சாயர்ப்ரே தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் வெளியிட்டிருக்கும் பதிவில், இந்தியா தலைமை தாங்குகிறது. அந்நாட்டின் சக்தி எழுச்சி பெறுகிறது. இனி சீனாவைக் கொண்டாடுவதை நிறுத்துங்கள்” என்று தெரிவித்திருக்கிறார்.

மேலும், பத்திரிகையாளர் அபிஜித் அய்யர் மித்ரா வெளியிட்டிருக்கும் பதிவில், “அரபிக் கடலில் கப்பல் போக்குவரத்துக்கு இந்தியா பாதுகாப்பு அளித்து வருகிறது. ஜிபூட்டியில் தளத்தை வைத்திருக்கும் சீன அல்ல” என்று தெரிவித்திருக்கிறார்.

இதனிடையே, ‘மார்லின் லுவாண்டா’ எண்ணெய் கப்பலுக்கு அளிக்கப்பட்ட மீட்புப் பணிகள் குறித்து நமது கடற்படையின் செய்தித் தொடர்பாளர் கமாண்டர் விவேக் மத்வால் கூறுகையில், “அவசர அழைப்பின்படி சம்பவ இடத்துக்குச் சென்ற ஐ.என்.எஸ். விசாகப்பட்டினம் போர்க்கப்பல், 6 மணி நேரம் போராடி கப்பலில் இருந்த தீயை அணைத்தது. மேலும், இக்கப்பலுக்கு உதவ, அமெரிக்கா மற்றும் பிரான்ஸும் முன்வந்தன. தொடர்ந்து பிராந்தியத்தில் நிலைமையை கூர்ந்து கவனித்து வருகிறோம்” என்று தெரிவித்திருக்கிறார்.

Tags: PraisedHouthi attackINS Visakhapatnamhelp burning vessel
ShareTweetSendShare
Previous Post

கருணாநிதி எழுதிய நெஞ்சுக்கு நீதியை ஸ்டாலின் படிக்கவில்லை! – அண்ணாமலை

Next Post

உறைய வைக்கும் உதகை குளிர்: நடுங்கும் சுற்றுலாப் பயணிகள்!

Related News

பாமக செயல் தலைவராக காந்திமதி நியமனம் – டாக்டர் ராமதாஸ் அறிவிப்பு!

டிடிவி தினகரன் காலாவதியான அரசியல்வாதி – ஆர்.பி.உதயகுமார் விமர்சனம்!

செங்கல்பட்டு அரசு நெல் கொள்முதல் நிலையங்களில் மத்திய குழு ஆய்வு!

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி – இநதியா வெற்றி!

நெல் கொள்முதல் செய்வதில் திமுக அரசு தோல்வி – அன்புமணி குற்றச்சாட்டு!

தஞ்சை நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் நயினார் நாகேந்திரன் ஆய்வு!

Load More

அண்மைச் செய்திகள்

ஆந்திராவில் பேருந்து தீப்பிடித்து எரிந்த விபத்து – திருப்பூர் இளைஞர் உயிரிழப்பு!

ஆந்திராவில் தீப்பிடித்த பேருந்தை அகற்றும் போது கவிழ்ந்த கிரேன் – ஓட்டுனர் காயம்!

வங்கக்கடலில் மோன்தா புயல் – எண்ணூர், கடலூர் உள்ளிட்ட துறைமுகங்களில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்!

திமுகவை ஆட்சியில் இருந்து அகற்ற ஒத்த கருத்துடைய கட்சிகள் ஒன்றிணைய வேண்டும் – ஜிகே.வாசன் அழைப்பு!

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் 8 கிலோ கஞ்சா பறிமுதல் – ஒருவர் கைது!

கோவையில் பொதுமக்களின் எதிர்ப்பை மீறி விநாயகர் கோயில் இடிப்பு – திமுக நிர்வாகியே காரணம் என பக்தர்கள் குற்றச்சாட்டு!

சென்னை விமான நிலையத்தில் ரூ. 10 கோடி மதிப்பிலான கஞ்சா பறிமுதல்!

நடப்பு நிதியாண்டில் இந்திய பொருளாதார வளர்ச்சி 6.6 சதவீதமாக இருக்கும் – சர்வதேச நாணய நிதியம்

நெல்லை மாஞ்சோலையில் வீடு புகுந்து பெண்ணிடம் அத்துமீறிய வனக்காவலர் கைது!

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் கந்த சஷ்டி விழா – சண்முக விலாஸ் மண்டபத்தில் கனிப்பந்தல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies