ஏடன் வளைகுடாவில் எண்ணெய் கப்பலுக்கு உதவி: இந்தியாவுக்கு குவியும் பாராட்டு!
Mar 15, 2026, 10:28 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஏடன் வளைகுடாவில் எண்ணெய் கப்பலுக்கு உதவி: இந்தியாவுக்கு குவியும் பாராட்டு!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Jan 29, 2024, 11:51 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஏடன் வளைகுடா பகுதியில் ஏவுகணைத் தாக்குதலில் தீப்பிடித்த பிரிட்டன் நாட்டின் எண்ணெய் கப்பலுக்கு உதவியதற்காக இந்தியாவுக்கு உலகம் முழுவதும் இருந்து பாராட்டுகள் குவிந்து வருகின்றன. இனி சீனாவைக் கொண்டாடுவதை நிறுத்தி விட்டு, இந்தியாவை கொண்டாடுங்கள் என்று தெரிவித்து வருகின்றனர்.

இஸ்ரேல் நாட்டுக்கும், பாலஸ்தீனத்தின் காஸா நகரை தங்களது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும் ஹமாஸ் தீவிரவாதிகளுக்கும் இடையே கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 7-ம் தேதி முதல் போர் நடந்து வருகிறது. இப்போரில் ஹமாஸ் தீவிரவாதிகளுக்கு ஹிஸ்புல்லா, ஹௌதி போன்ற தீவிரவாத அமைப்புகள் ஆதரவு தெரிவித்து வருகின்றன.

ஆகவே, ஏமன் நாட்டின் ஹௌதி கிளர்ச்சியாளர்கள், ஏடன் வளைகுடா, செங்கடல் போன்ற பகுதிகளில் செல்லும் சரக்குக் கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தி வருகின்றனர். அந்த வகையில், கடந்த இரு தினங்களுக்கு முன்பு ஏடன் வளைகுடா பகுதியில் சென்ற பிரிட்டன் நாட்டின் ‘மார்லின் லுவாண்டா’ என்ற எண்ணெய் கப்பல் மீது ஏவுகணை தாக்குதல் நடந்தினர்.

இதையடுத்து, அக்கப்பலில் இருந்து உதவி கோரப்பட்டது. இதைத் தொடர்ந்து, இந்திய கடற்படையின் ஐ.என்.எஸ். விசாகப்பட்டினம் போர்க்கப்பல் விரைந்து சென்று, அக்கப்பலில் இருந்த தீயை அணைத்ததோடு, அக்கப்பலில் இருந்த 22 இந்திய பணியாளர்கள் மற்றும் வங்கதேசத்தைச் சேர்ந்த ஒருவரையும் மீட்டது.

இந்த நிலையில், நமது கடற்படையின் இத்தகைய செயலுக்கு உலகம் முழுவதும் இருந்து பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன. இதுகுறித்து பிரிட்டன் பத்திரிகையாளர் மார்க் அர்பன் கூறுகையில், ஏடன் வளைகுடா மற்றும் செங்கடல் பகுதியில் நெருக்கடிகளுக்கு இடையே சீனாவை விட இந்தியா பல மடங்கு பலம் வாய்ந்து வருகிறது” என்று கூறியிருக்கிறார்.

அதேபோல, வரலாற்று ஆசிரியர் மார்ட்டின் சாயர்ப்ரே தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் வெளியிட்டிருக்கும் பதிவில், இந்தியா தலைமை தாங்குகிறது. அந்நாட்டின் சக்தி எழுச்சி பெறுகிறது. இனி சீனாவைக் கொண்டாடுவதை நிறுத்துங்கள்” என்று தெரிவித்திருக்கிறார்.

மேலும், பத்திரிகையாளர் அபிஜித் அய்யர் மித்ரா வெளியிட்டிருக்கும் பதிவில், “அரபிக் கடலில் கப்பல் போக்குவரத்துக்கு இந்தியா பாதுகாப்பு அளித்து வருகிறது. ஜிபூட்டியில் தளத்தை வைத்திருக்கும் சீன அல்ல” என்று தெரிவித்திருக்கிறார்.

இதனிடையே, ‘மார்லின் லுவாண்டா’ எண்ணெய் கப்பலுக்கு அளிக்கப்பட்ட மீட்புப் பணிகள் குறித்து நமது கடற்படையின் செய்தித் தொடர்பாளர் கமாண்டர் விவேக் மத்வால் கூறுகையில், “அவசர அழைப்பின்படி சம்பவ இடத்துக்குச் சென்ற ஐ.என்.எஸ். விசாகப்பட்டினம் போர்க்கப்பல், 6 மணி நேரம் போராடி கப்பலில் இருந்த தீயை அணைத்தது. மேலும், இக்கப்பலுக்கு உதவ, அமெரிக்கா மற்றும் பிரான்ஸும் முன்வந்தன. தொடர்ந்து பிராந்தியத்தில் நிலைமையை கூர்ந்து கவனித்து வருகிறோம்” என்று தெரிவித்திருக்கிறார்.

Tags: Houthi attackINS Visakhapatnamhelp burning vesselPraised
ShareTweetSendShare
Previous Post

கருணாநிதி எழுதிய நெஞ்சுக்கு நீதியை ஸ்டாலின் படிக்கவில்லை! – அண்ணாமலை

Next Post

உறைய வைக்கும் உதகை குளிர்: நடுங்கும் சுற்றுலாப் பயணிகள்!

Related News

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

சமையல் எரிவாயு குறித்த அச்சம் வேண்டாம் – மத்திய அரசு

திமுக மாணவரணி செயலாளர் பொறுப்பில் இருந்து ராஜீவ்காந்தி திடீர் விடுவிப்பு!

தூத்துக்குடி கொடூரம்.. அமைச்சர் கீதா ஜீவன், கனிமொழி எம்பி ராஜினாமா செய்ய வேண்டும் – பாஜக மாநில துணை தலைவர் வலியுறுத்தல்

Load More

அண்மைச் செய்திகள்

தூத்துக்குடியில் மாணவிக்கு நேர்ந்த கொடூரம் – 4 நாட்களாகியும் குற்றவாளிகளை கைது செய்ய முடியாமல் திணறும் போலீசார்..பொதுமக்கள் சாலைமறியல்!

மதுரை விமான நிலையத்தில் புதிய வான் கட்டுப்பாட்டு கட்டிடத்தை திறந்து வைத்த மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு!

AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எதிர்க்கட்சிகள் பொய் பிரச்சாரம் செய்கிறது – மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் குற்றச்சாட்டு

ஷில்லாங் – சில்சார் இடையே அதிவேக 4 வழித்திட்டத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்!

சண்முக நதி கரையோரம் மலைபோல் தேங்கும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு!

மலைக்கோயிலில் இந்து முன்னணி சார்பில் தூய்மை பணிகள்!

தூத்துக்குடி கொடூரம் -அதிமுக சார்பில் நீதி வேண்டி வாயில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம்

காதணி விழாவுக்கு ரூ.15 லட்சம் மதிப்பில் அத்தை சீர்வரிசை!

ஆண்டிபட்டி அருகே முற்றிலும் இல்லாமல் போன வைகை அணையின் நீர்வரத்து!

மத்திய விமான போக்குவரத்து அமைச்சருக்கு பாரம்பரிய வரவேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies