U-19 உலகக்கோப்பை : இந்தியா 201 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி!
Jan 14, 2026, 08:03 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

U-19 உலகக்கோப்பை : இந்தியா 201 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி!

Murugesan M by Murugesan M
Jan 29, 2024, 11:13 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

19 வயதுக்கு உட்பட்டோருக்கான ஆண்கள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்தியா – அமெரிக்கா அணிகளுக்கு இடையேயான போட்டியில் இந்திய அணி 201 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

19 வயதுக்கு உட்பட்டோருக்கான ஆண்கள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெற்றுவருகிறது. இந்த தொடர் பிப்ரவரி 11 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.

இந்திய நேற்றையப் போட்டியில் இந்தியா – அமெரிக்கா நாடுகளுக்கிடையே நடைபெற்றது. இந்தப் போட்டியானது மங்காங் ஓவல் மைதானத்தில் நடைபெற்றது.

இதில் டாஸ் வென்ற அமெரிக்கா அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த இந்தியா 50 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்கள் இழப்பிற்கு 326 ரன்களை எடுத்தது.

இந்திய அணியில் அதிகபட்சமாக அர்ஷின் குல்கர்னி 8 பௌண்டரீஸ், 3 சிக்சர்கள் உட்பட 118 பந்துகளில் 108 ரன்களை அடித்து ஆட்டமிழந்தார்.

அதேபோல் மற்றொரு வீரரான முஷீர் கான் 6 பௌண்டரீஸ், 1 சிக்சர் உட்பட 76 பந்துகளில் 73 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தார்.

இந்திய அணியின் கேப்டன் உதய் 35 ரன்களும், அடர் சிங் 25 ரன்களும் எடுத்து ஆட்டமிழக்க, பிரியன்ஷு மோலியா 27 ரங்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார்.

இதனால் இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்கள் இழப்பிற்கு 326 ரன்களை எடுத்தது. அமெரிக்காவில் அதிகபட்சமாக சுப்ரமணியன் 2 விக்கெட்களை வீழ்த்தினார்.

ரிஷி ரமேஷ், ஆரின் சுஷில், ஆர்யா ஆகியோர் தலா 1 விக்கெட்டை வீழ்த்தினர். இதனால் அமெரிக்காவுக்கு 327 ரன்கள் வெற்றி இலக்காக இருந்தது.

இதை தொடர்ந்து களமிறங்கிய அமெரிக்கா அணியில் அதிகபச்சமாக ஸ்ரீவஸ்தவா 40 ரன்களும், ஆர்யா 20 ரன்களும் எடுத்து ஆட்டமிழக்க அமோக் ரெட்டி 27 ரன்களை எடுத்து ஆட்டமிழக்காமலிருந்தார்.

50 ஓவர்கள் முடிவில் அமெரிக்கா 8 விக்கெட்கள் இழப்பிற்கு 125 ரன்களை மட்டுமே எடுத்துத் தோல்வியடைந்தது. இந்திய அணியில் அதிகபட்சமாக நமன் திவாரி 4 விக்கெட்களை வீழ்த்தினார்.

ராஜ், பாண்டே, அபிஷேக், பிரியன்ஷு மோலியா ஆகியோர் தலா 1 விக்கெட்டை வீழ்த்தினர். இதனால் இந்திய அணி 201 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இப்போட்டியில் ஆட்டநாயகன் விருது 108 ரன்களை அடித்த இந்திய வீரர் அர்ஷின் குல்கர்னிக்கு வழங்கப்பட்டது.

Tags: u 19 world cup
ShareTweetSendShare
Previous Post

பா.ஜ.க.வில் இணைந்த காங்கிரஸ் முக்கியத் தலைவர்கள்!

Next Post

மகான் ஸ்ரீஅரவிந்தர் ஆசிரமத்தில் குடியரசுத் துணைத்தலைவர் தரிசனம்!

Related News

500 சதவீதி வரிவிதிப்பு அச்சம் – பின்னலாடை துறைக்கு சலுகை வழங்க கோரிக்கை!

முக்கிய சக்தியாக உருவெடுக்கும் ஜமாத்-இ-இஸ்லாமி – வங்கதேசத்தில் ஆட்சியை பிடிக்கத் துடிக்கும் இஸ்லாமிய குழுக்கள்

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

Load More

அண்மைச் செய்திகள்

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies