சண்டிகர் பல்கலைக்கழக வேந்தர் சத்னம் சிங் சாந்துவை மாநிலங்களவைக்குக் குடியரசுத்தலைவர் நியமித்ததற்குப் பிரதமர் நரேந்திர மோடி மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.
இது குறித்து தனது எக்ஸ் பதிவில்,
“சத்னம் சிங் சாந்துவை மாநிலங்களவை உறுப்பினராகக் குடியரசுத்தலைவர் நியமித்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. சத்னம் ஒரு குறிப்பிடத்தக்க கல்வியாளராகவும், சமூக சேவகராகவும் தன்னை தனித்துவப்படுத்திக் கொண்டிருக்கிறார்.
I am delighted that Rashtrapati Ji has nominated Shri Satnam Singh Sandhu Ji to the Rajya Sabha. Satnam Ji has distinguished himself as a noted educationist and social worker, who has been serving people at the grassroots in different ways. He has always worked extensively to… pic.twitter.com/rZuUmGJP0q
— Narendra Modi (@narendramodi) January 30, 2024
அடித்தளத்தில் உள்ள மக்களுக்குப் பல்வேறு வழிகளில் அவர் சேவை செய்து வருகிறார். எப்போதுமே தேசிய ஒருமைப்பாட்டை மேம்படுத்தும் வகையில் விரிவான பணிகளை மேற்கொண்டுள்ளார். மேலும் இந்தியப் புலம்பெயர்ந்தோருடனும் பணியாற்றியுள்ளார்.
அவரது நாடாளுமன்றப் பயணம் சிறப்பாக அமைய வாழ்த்துகிறேன். மாநிலங்களவை நடவடிக்கைகள் அவரது கருத்துக்களால் வளம் பெறும் என்று நம்புகிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.