பொது சிவில் சட்டம் இஸ்லாமிய பெண்களுக்கு பயன் அளிக்கும் என முத்தலாக் வழக்கின் மனுதாரரான சாய்ரா பானு தெரிவித்துள்ளார்.
உத்தரகாண்ட் மாநில தேர்தல் பிரச்சாரத்தின் போது பாஜக ஆட்சிக்கு வந்தால் பொது சிவில் சட்டம் அமல்படுத்தப்படும் என வாக்குறுதி அளிக்கப்பட்டது. இதுதொடர்பான வரைவை தயாரிப்பதற்காக அமைக்கப்பட்ட குழு டேராடூனில் இன்று வரைவுத் திட்டத்தை சமர்பித்தது.
இதுதொடர்பாக உத்தரகாண்ட் முதலமைச்சர் புஷ்கர் சிங் தாமி எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், பிரதமர் நரேந்திர மோடியின் ‘ஏக் பாரத்-ஸ்ரேஸ்தா பாரத்’ என்ற தொலைநோக்குப் பார்வையை உணர்ந்து, மேலும் பலத்துடன் நாம் முன்னேறப் போகிறோம், மாநிலத்தின் அனைத்து மக்களுக்கும் இன்று ஒரு முக்கியமான நாள் என தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் பொது சிவில் சட்டம் இஸ்லாமிய பெண்களுக்கு பயன் அளிக்கும் என முத்தலாக் வழக்கின் மனுதாரரான சாய்ரா பானு தெரிவித்துள்ளார். இந்த மசோதாவை ஆதரிக்கிறேன், வரவேற்கிறேன்.
முஸ்லிம் சமூகத்தில் உள்ள ஒவ்வொரு பெண்ணும் இந்த மசோதாவை வரவேற்று ஆதரிக்க வேண்டும். இதுவளர்ச்சிக்கு வழிவகுக்கும் என அவர் தெரிவித்துள்ளார்.