எந்த போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதாகப் பெருமைப்பட்டுக் கொள்கிறது திமுக அரசு? - அண்ணாமலை கேள்வி
Aug 12, 2025, 12:46 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

எந்த போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதாகப் பெருமைப்பட்டுக் கொள்கிறது திமுக அரசு? – அண்ணாமலை கேள்வி

Web Desk by Web Desk
Feb 2, 2024, 05:26 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கோயம்பேடு பேருந்து நிலையத்தை உடனே மாற்றுவோம் எனும் அடிமுட்டாள்தனமான செயல்பாட்டை என்னவென்று சொல்வது?  எனத் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பி உள்ளார்.

இது குறித்து தனது எக்ஸ் பதிவில்,

தினந்தோறும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள், தலைநகரம் சென்னைக்கு வந்திறங்கும் முக்கியமான பேருந்து நிலையத்தை இடமாற்றம் செய்யும்போது, குறைந்தபட்ச நேர்மையும், அடிப்படை அறிவும் இருப்பவர்கள் யாரும், திமுக அரசைப் போல, அவசரகதியிலான செயல்பாட்டில் ஈடுபட மாட்டார்கள்.

தினந்தோறும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள், தலைநகரம் சென்னைக்கு வந்திறங்கும் முக்கியமான பேருந்து நிலையத்தை இடமாற்றம் செய்யும்போது, குறைந்தபட்ச நேர்மையும், அடிப்படை அறிவும் இருப்பவர்கள் யாரும், திமுக அரசைப் போல, அவசரகதியிலான செயல்பாட்டில் ஈடுபட மாட்டார்கள்.

கோயம்பேடு பேருந்து…

— K.Annamalai (@annamalai_k) February 2, 2024

கோயம்பேடு பேருந்து நிலையத்தை மையப்படுத்தி, மெட்ரோ ரயில் நிலையம், வணிக நிறுவனங்கள் உள்ளிட்ட கட்டமைப்புகளுக்கு இத்தனை ஆண்டுகளாகப் பல ஆயிரம் கோடி செலவு செய்துவிட்டு, பயணிகளுக்குத் தேவையான எந்த அடிப்படை வசதிகளும் செய்து முடிக்கப்பட்டாத கிளாம்பாக்கத்திற்கு, பேருந்து நிலையத்தை உடனே மாற்றுவோம் எனும் அடிமுட்டாள்தனமான செயல்பாட்டை என்னவென்று சொல்வது?

கோயம்பேடு சுற்றியுள்ள ஆட்டோ ஓட்டுநர்கள், சிறு கடைகள், உணவகங்கள் என ஆயிரக்கணக்கான மக்களின் வாழ்வாதாரம் இதனால் பாதிப்புக்குள்ளாகியிருப்பதற்கு, திமுக அரசின் நிவாரணம் என்ன? தாம்பரம், வேளச்சேரி உள்ளிட்ட தென்சென்னை சுற்றுவட்டாரப் பகுதி மக்கள், ஏற்கனவே பெருங்களத்தூர் பேருந்து நிலையத்தைத்தான் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்கள் என்ற நிலையில், இந்த இடமாற்றத்தால் யாருக்குமே எந்தப் பலனும் இல்லை.

சென்னையில் இருந்து பிற மாவட்டங்களுக்குச் செல்லும் பேருந்துக் கட்டணத்தை விட, சென்னையின் பல பகுதிகளிலிருந்து கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திற்குச் செல்லும் போக்குவரத்துக்கான கட்டணம் அதிகமாக இருப்பது திமுக அரசுக்குத் தெரியுமா?

போக்குவரத்து நெரிசல் அதிகமில்லாத, இரவு 10 மணி முதல் காலை 7 மணி வரை மட்டுமே புறநகர் பேருந்துகள் சென்னை மாநகரத்தினுள் அனுமதிக்கப்பட்டு வந்த நிலையில், அதை நிறுத்தி விட்டு, கோயம்பேடு மற்றும் சென்னையின் பிற பகுதிகளுக்கும் கிளாம்பாக்கத்திற்கும் இடையே ஐந்து, பத்து நிமிட இடைவெளியில் பேருந்துகள் இயக்கப்படும் என்று அறிவித்திருப்பதைப் போன்ற அறிவிலித்தனம் வேறு உள்ளதா? எந்த போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதாகப் பெருமைப்பட்டுக் கொள்கிறது திமுக அரசு?

தமிழகம் முழுவதும் இருந்து தினம் சென்னை வந்து செல்லும் பல்லாயிரக்கணக்கான பொதுமக்களை அவதிக்குள்ளாக்கிவிட்டு, இத்தனை அவசரகதியில் கோயம்பேடு பேருந்து நிலையத்தை இடம் மாற்றி, அந்த இடத்தில் என்ன திட்டத்தைச் செயல்படுத்தப் போகிறார்கள் என்று ஏன் இன்னும் வெளிப்படையாக அறிவிக்கவில்லை?

கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் அடிப்படை வசதிகளும், சென்னையில் இருந்து கிளாம்பாக்கம் வரை செல்லும் பயணிகளுக்கான போதுமான போக்குவரத்து ஏற்பாடுகளும் செய்து முடிக்கப்படும் வரை, அரசுப் பேருந்துகளும், தனியார் பேருந்துகளும் மீண்டும் கோயம்பேட்டில் இருந்தே செயல்பட அனுமதிக்கப்பட வேண்டும் என்றும், திமுக தலைவரின் பெயர் வைத்ததற்காக மட்டுமே, பல்லாயிரக்கணக்கான மக்களை தினந்தோறும் அல்லலுக்குள்ளாக்குவதை, திமுக அரசு நிறுத்திக் கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்துகிறேன் எனத் தெரிவித்துள்ளார்.

Tags: bjp k annamalai
ShareTweetSendShare
Previous Post

கேரளாவில் 15 பேருக்கு மரண தண்டனை விதித்த நீதிபதிக்கு கொலை மிரட்டல் : இருவர் கைது!

Next Post

புரோ ஹாக்கி லீக் : இந்திய அணி அறிவிப்பு!

Related News

அசுர பலம் கொண்ட இந்திய விமானப்படை : 1971 போர் முதல் 2025 ஆப்ரேஷன் சிந்தூர் வரை…!

இஸ்ரேலுக்கான ராணுவ உதவியை நிறுத்திய ஜெர்மனி – உள்நாட்டில் வலுக்கும் கண்டனம்!

“அணு ஆயுத மிரட்டலுக்கு ஒருபோதும் அஞ்ச மாட்டோம்” – பாக். மிரட்டலுக்கு இந்தியா பதிலடி!

பூமியை நோக்கி வரும் ஏலியன்கள்? – “நாம் அனைத்திற்கும் தயாராக இருக்க வேண்டும்”!

இந்தியாவின் வளர்ச்சியை எந்த சக்தியாலும் தடுக்க முடியாது : பிரதமர் மோடி

Nvidia நிறுவனத்தின் 80% ஊழியர்கள் கோடீஸ்வரர்கள் : எங்க முதலாளி… நல்ல முதலாளி…!

Load More

அண்மைச் செய்திகள்

நீலகிரி : சட்டமன்ற தேர்தலை புறக்கணிக்கப் போவதாக கூறி பேனர் வைத்து ஆர்ப்பாட்டம்!

ஆதாரங்களுடன் குற்றச்சாட்டுகளை முன்வைக்க எதிர்க்கட்சியினருக்கு தைரியம் உள்ளதா? : தர்மேந்திர பிரதான் சவால்!

பாஜக ஆட்சியில் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்காக 350 குடியிருப்புகள் கட்டப்பட்டுள்ளது : பிரதமர் மோடி

வெளிமாநில தமிழ் பாடநூல் விநியோகம் நிறுத்தம்!

தூய்மை பணிகளை தனியார்மயமாக்குவதை எதிர்த்து வழக்கு : மாநகராட்சி பதிலளிக்க அவகாசம் வழங்கி உயர் நீதிமன்றம் உத்தரவு!

தேசப் பிரிவினை கொடூரங்கள் : 11 ஆகஸ்ட் 1947 நடந்தது என்ன?

வெற்றிப்பெற முடியாத விரக்தியில் ராகுல் காந்தி தேர்தல் ஆணையத்தை குற்றம் சாட்டி வருகிறார் : தமிழிசை சௌந்தரராஜன்

தமிழை வளர்க்க திமுக அரசிடம் பணமில்லையா? மனமில்லையா? : நயினார் நாகேந்திரன் கேள்வி!

ஆபரேஷன் சிந்​தூர் ராணுவ நடவடிக்கை முழு​வதும் ஆச்​சரியங்​கள் நிறைந்தவை : அமெரிக்க பாது​காப்பு நிபுணர்!

தஞ்சாவூர் : கழிவுநீர் கலந்த குடிநீரால் மஞ்சள் காமாலை பாதிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies