பதவி உயர்வு வழங்காமல் இருக்க நிதி நெருக்கடி என்று காரணம் சொல்வதா? - அண்ணாமலை குற்றச்சாட்டு
Sep 11, 2025, 06:47 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பதவி உயர்வு வழங்காமல் இருக்க நிதி நெருக்கடி என்று காரணம் சொல்வதா? – அண்ணாமலை குற்றச்சாட்டு

Web Desk by Web Desk
Feb 2, 2024, 07:07 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

நிதிப் பற்றாக்குறை என்று கூறும் திமுக அரசு, தங்கள் வீண் விளம்பரங்களுக்குச் செலவிட்டுக் கொண்டிருக்கும் நிதியை, ஆக்கபூர்வமான அரசு நிர்வாகத்துக்குச் செலவிட வேண்டும் என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

தமிழக காவல்துறையில், கடந்த 2011 ஆம் ஆண்டு, நேரடி உதவி ஆய்வாளர்களாகப் பணியில் சேர்ந்த 1,095 காவல் உதவி ஆய்வாளர்கள், 13 ஆண்டுகளாகப் பதவி உயர்வு இல்லாமல், உதவி ஆய்வாளர்களாகவே இருந்து வருகிறார்கள் என்ற செய்தி வருந்தத்தக்கது. பிற அரசுத்துறைகள் அனைத்திலும், சுமார் ஐந்து முதல் ஏழு ஆண்டுகளிலேயே பதவி உயர்வு பெறும்போது, சட்டம் ஒழுங்கைக் காப்பாற்றும் காவல்துறை மட்டும் எப்போதும் வஞ்சிக்கப்பட்டு வருவது ஏற்றுக் கொள்ள முடியாது.

கடந்த ஆண்டே, காவல் உதவி ஆய்வாளர்களின் பணி உயர்வு தொடர்பான பட்டியல் தயாரிக்கப்பட்டு, காவல்துறை தலைமை இயக்குனரிடம் வழங்கப்பட்டதாகவும், ஆனால், அரசின் நிதி பற்றாக்குறை காரணமாக, அவர்களுக்குப் பதவி உயர்வு வழங்கப்படவில்லை என்பது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. தேவையற்ற வீண் செலவீனங்களிலும், ஆளுங்கட்சியின் ஆடம்பர விளம்பரங்களுக்கும் செலவிடும் நிதியை விட, தமிழகத்தில் குற்றங்களைக் கட்டுப்படுத்தி, பொதுமக்கள் பாதுகாப்பினை உறுதி செய்யும் தலையாய பணியில் ஈடுபட்டிருக்கும் காவல்துறையினர் பதவி உயர்வுக்குச் செலவிடப்படும் நிதி நியாயமானதாக இருக்கும்.

மேலும், குற்ற விகித அடிப்படையில், தமிழகத்தில் துணை ஆய்வாளர்களால் நிர்வகிக்கப்படும் 423 காவல் நிலையங்களையும் தரம் உயர்த்தி, ஆய்வாளர்கள் நிர்வகிக்கும்படி மாற்றினாலே, பல உதவி ஆய்வாளர்களுக்குப் பதவி உயர்வு கிடைக்கும். ஆனால், இந்த நிர்வாகச் சீரமைப்புப் பணிகளையும் மேற்கொள்ளாமல் காவல்துறையைப் புறக்கணித்து வருகிறது திமுக அரசு.

இளம் வயதிலேயே உதவி ஆய்வாளர்களாக நேரடியாக நியமிக்கப்பட்டு, சட்டம் ஒழுங்கைப் பாதுகாப்பதில் மிக முக்கியப் பங்காற்றும் உதவி ஆய்வாளர்கள், 13 ஆண்டுகளாகப் பதவி உயர்வு வழங்கப்படாமல் இருப்பதால், மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாவதோடு, அவர்களின் பணிகளையும் இது பாதிக்கும் அபாயம் உள்ளது.

மேலும், காவல்துறையில் இணைந்து மக்களுக்குச் சேவை செய்ய விரும்பும் இளைஞர்களின் ஆர்வத்தையும் திமுக அரசின் பாராமுகம் நிச்சயம் பாதிக்கும்.

எனவே, இனியும் தாமதிக்காமல், உடனடியாக காவல்துறையில் மேற்கொள்ள வேண்டிய நிர்வாகச் சீரமைப்புக்களை விரைந்து மேற்கொண்டு, 13 ஆண்டுகளுக்கும் மேலாக உதவி ஆய்வாளர்களாகவே இருக்கும் காவல்துறை சகோதரர்களுக்கு, உரிய பதவி உயர்வு வழங்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.

நிதிப் பற்றாக்குறை என்ற சற்றும் ஏற்றுக்கொள்ள முடியாத காரணத்தைக் கூறும் திமுக அரசு, தங்கள் வீண் விளம்பரங்களுக்குச் செலவிட்டுக் கொண்டிருக்கும் நிதியை, ஆக்கபூர்வமான அரசு நிர்வாகத்துக்குச் செலவிடுவது அனைவருக்கும் பலனளிக்கும் என்றும் தெரிவித்துக் கொள்கிறேன்.

Tags: bjp k annamalai
ShareTweetSendShare
Previous Post

நிதி இல்லை என்ற காரணம் கூறி காவல்துறை உதவி ஆய்வாளர்களுக்கு பதவி உயர்வு வழங்காமல் இருப்பது, முற்றிலும் தவறானது! – அண்ணாமலை குற்றச்சாட்டு

Next Post

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமான சேவை!

Related News

கிரேட்டர் நிகோபார் திட்டம் – இந்தியாவுக்கு என்னென்ன நன்மைகள்?

சீன அரிய காந்தம் இனி தேவையில்லை : மாற்று EV மோட்டார் சோதனையில் இந்தியா!

17 ஆண்டுகளில் 14 அரசுகள் அரசியல் – ஸ்திரமற்ற நிலையில் தத்தளிக்கும் நேபாளம்!

வாகனங்களுக்கு தீ வைப்பு கண்ணீர் புகை குண்டு வீச்சு பிரான்ஸில் கலவரம் அதிபர் மேக்ரானுக்கு புதிய சவால்..!

ரூ.30,000 கோடி சொத்து யாருக்கு? – நீதிமன்றத்தை நாடிய நடிகையின் குடும்பம்!

நேபாளத்தில் நீடிக்கும் பதற்றம் : தீவிர கண்காணிப்பில் இந்திய எல்லைகள்!

Load More

அண்மைச் செய்திகள்

வீல் சேர் வழங்க மறுப்பு : நோயாளியை மகனே இழுத்து சென்ற அவலம்!

சென்னையை மிரட்டும் நவோனியா திருட்டு கும்பல் – பொதுமக்களுக்கு போலீஸ் எச்சரிக்கை!

திமுகவின் விளம்பர நாடகங்களுக்கு, அரசுப்பள்ளிகளும் பலிகடா – அண்ணாமலை குற்றச்சாட்டு!

உ.பி-இல் குழந்தையை குளிர்சாதன பெட்டியில் வைத்த தாய்!

ஆந்திரா : 180 அடி நீள கண்ணாடி பாலம் செப்.25-ல் திறப்பு!

தாகம் தீர்க்கும் தாமிரபரணியைத் தலைமுழுகிவிட்டதா திமுக அரசு? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

UPI பண பரிவர்த்தனைகளை 192 நாடுகளில் விரிவுபடுத்த இந்தியா திட்டம்!

அமெரிக்கா : சீட்டுக்கட்டு போல் கடலில் சரிந்து விழுந்த கண்டெய்னர்கள்!

தனியார் கல்லூரி மாணவர் தூக்கிட்டு தற்கொலை – உறவினர்கள் சாலை மறியல் போராட்டம்!

நேபாளம் : வன்முறைக்கு நடுவே சூப்பர் மார்க்கெட்டில் நுழைந்த மக்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies