சென்னை எழும்பூர் – கன்னியாகுமரி மற்றும் கோவை – சென்னை சென்ட்ரல் இடையே சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
இதுகுறித்து தெற்கு ரயில்வே வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, கன்னியாகுமரி – எழும்பூர் அதிவிரைவு சிறப்பு ரயில் (வண்டி எண் – 06041), இன்று இரவு 8.30 மணிக்கு கன்னியாகுமரியிலிருந்து புறப்பட்டு நாளை காலை 9.45 மணிக்கு சென்னை எழும்பூரை வந்தடையும்.
மறுமார்க்கமாக, சென்னை எழும்பூர் – கன்னியாகுமரி அதிவிரைவு இரயில் (வண்டி எண் – 06042), நாளை மதியம் 1 மணிக்கு சென்னை எழும்பூரில் இருந்து புறப்பட்டு, மறுநாள் அதிகாலை 2.45 மணிக்கு கன்னியாகுமரியைச் சென்றடையும்.
இதேபோல், கோவை – சென்ட்ரல் அதிவிரைவு சிறப்பு ரயில் (வண்டி எண் – 06043) கோவையிலிருந்து இன்று இரவு 11.30 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் காலை 8.20 மணிக்கு சென்னை சென்ட்ரலை வந்தடையும்.
மறுமார்க்கமாக, சென்னை சென்ட்ரல் – கோவை அதிவிரைவு சிறப்பு ரயில் (வண்டி எண் – 06044) சென்னை சென்ட்ரலில் இருந்து நாளை காலை 10.20 மணிக்கு புறப்பட்டு அதேநாள் இரவு 8.25 மணிக்கு கோவையைச் சென்றடையும் என்று கூறப்பட்டுள்ளது.