அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளுக்கு அருகே இன்று 4.4 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த ஆண்டு தொடக்கம் முதலே உலகின் பல்வேறு பகுதிகளிலும் நிலநடுக்கம் ஏற்பட்டு வருகிறது. இந்த ஆண்டின் முதல் நாளில், ஜப்பானில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால், ஜப்பானின் முக்கிய நகரங்கள் நிலைகுலைந்த நிலையில், 150-க்கும் மேற்பட்ட மக்கள் உயிரிழந்தனர். இந்தியாவின் பல பகுதிகளிலும் அவ்வப்போது நிலநடுக்கம் ஏற்பட்டு வருகிறது.
இந்நிலையில், அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளுக்கு அருகே இன்று அதிகாலை 4.13 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 4.4 ஆக பதிவானது.
Earthquake of Magnitude:4.4, Occurred on 05-02-2024, 04:13:17 IST, Lat: 12.78 & Long: 93.17, Depth: 67 Km ,Location: Andaman Islands, India for more information Download the BhooKamp App https://t.co/Wis6gt6Umk @KirenRijiju @Ravi_MoES @Dr_Mishra1966 @ndmaindia @Indiametdept pic.twitter.com/zwgUsJp6Z0
— National Center for Seismology (@NCS_Earthquake) February 4, 2024
இந்த நிலநடுக்கம் பூமிக்கடியில், 67 கிலோமீட்டர் ஆழத்தில் மையம் கொண்டு ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த நிலநடுக்கத்தால், ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து உடனடி தகவல் வெளியாகவில்லை.