யூடியூபர் துருவ் ரதி பதிவேற்றிய அவதூறு வீடியோவை மறு ட்வீட் செய்ததற்காக, டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு எதிராக தொடரப்பட்ட அவதூறு வழக்கை தள்ளுபடி செய்ய டெல்லி உயர்நீதிமன்றம் மறுத்துவிட்டது.
யூடியூப் பயனர் துருவ் ரதி பதிவேற்றிய அவதூறு வீடியோவை மறு ட்வீட் செய்ததற்காக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மீது அவதூறு வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை ரத்து செய்யுமாறு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்ட நிலையில், ரத்து செய்ய டெல்லி உயர்நீதிமன்றம் மறுத்துவிட்டது.
அவதூறு செய்திகளை ரீட்வீட் செய்வது அவதூறுக்கு சமம் என்று கூறிய நீதிபதி, முதல்வர் கெஜ்ரிவாலை ஏராளமானோர் பின்தொடர்பவதாகவும், அந்த வீடியோவை மீண்டும் ட்வீட் செய்வதால் ஏற்படும் விளைவுகளை அவர் அறிந்திருப்பதாகவும் கூறினார்.
இந்த வழக்கில் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு சம்மன் அனுப்பிய நீதிமன்றத்தின் உத்தரவை நீதிபதி உறுதி செய்தார்.