U-19 உலகக்கோப்பை : இறுதிப்போட்டியில் இந்தியா!
Jan 14, 2026, 10:02 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

U-19 உலகக்கோப்பை : இறுதிப்போட்டியில் இந்தியா!

Murugesan M by Murugesan M
Feb 7, 2024, 10:41 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

19 வயதுக்கு உட்பட்டோருக்கான ஆண்கள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அந்த இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது.

19 வயதுக்கு உட்பட்டோருக்கான ஆண்கள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. இந்த தொடர் பிப்ரவரி 11 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.

இந்த தொடரில் லீக் சுற்று முடிவடைந்து, சூப்பர் 6 சுற்று முடிவடைந்து தற்போது அரையிறுதி சுற்று நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் நேற்று நடைபெற்ற முதல் அரையிறுதி போட்டியில் இந்தியா – தென் ஆப்பிரிக்கா அணிகள் விளையாடின.

இதில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த தென் ஆப்பிரிக்கா அணி 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்கள் இழப்பிற்கு 244 ரன்களை எடுத்தது.

தென் ஆப்பிரிக்கா அணியில் அதிகபட்சமாக தொடக்க வீரராக களமிறங்கிய லுவான்-ட்ரே பிரிட்டோரியஸ் 6 பௌண்டரீஸ் 3 சிக்சர்கள் என மொத்தமாக 76 ரன்களை எடுத்தார்.

இதையடுத்து களம் இறங்கிய ஆலிவர் வைட்ஹெட் 22 ரன், திவான் மரைஸ் 3 ரன், ஜுவான் ஜேம்ஸ் 24 ரன் எடுத்த நிலையில் அவுட் ஆகினர்.

இறுதியில் தென் ஆப்பிரிக்க அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 244 ரன்கள் எடுத்தது. இந்தியாவில் அதிகபட்சமாக ராஜ் லிம்பானி 3 விக்கெட்டும், முஷீர் கான் 2 விக்கெட்டும் வீழ்த்தினர். பாண்டே மற்றும் திவாரி தலா 1 விக்கெட்டை வீழ்த்தினர்.

இதைத் தொடர்ந்து 245 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி முதல் ஓவரில் முதல் பந்திலேயே விக்கெட்டை பறிகொடுத்தது.

பின்பு அடுத்தடுத்து 4 விக்கெட்கள் சரிய இந்திய அணி ஒரு கட்டத்தில் 32/4 என்ற நிலையில் இருந்தது. பின்னர் இந்திய அணியின் கேப்டன் உதய் மாற்று சச்சின் தாஸ் களமிறங்கினர்.

இவர்கள் இருவரின் கூட்டணி சிறப்பாக அமைய இருவரும் தங்களின் உயிரை கொடுத்து விளையாடி சரிவில் இருந்த இந்திய அணியை மேலே கொண்டு வந்தனர்.

இவர்களின் பார்ட்னெர்ஷிப் 150 ரன்களை கடந்தது. 32 ரன்களில் இருந்த இந்திய அணியை இவர்கள் 203 ரன்களை கொண்டு வந்தனர்.

42வது ஓவரில் இந்திய அணி 203 ரன்கள் எடுத்த சமயத்தில் சச்சின் தாஸ் 11 பௌண்டரீஸ் 1 சிக்சர் என 96 ரன்னுக்கு ஆட்டமிழந்தார்.

பின்னர் கேப்டன் உதய் 81 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். இதனால் வெற்றி அடைவது கஷ்டம் என்ற எண்ணிய இந்திய அணி 48வது ஓவர் முடிய 248 ரன்கள் எடுத்து வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முதல் அணியாக தகுதி பெற்றுள்ளது.

தென் ஆப்பிரிக்கா அணியில் அதிகபட்சமாக குவேனா மபகா மற்றும் டிரிஸ்டன் லூஸ் ஆகியோர் தலா 3 விக்கெட்களை வீழ்த்தினர்.

இப்போட்டியில் ஆட்டநாயகன் விருது இந்திய அணியின் கேப்டன் உதய் சாகரன்னுக்கு வழங்கப்பட்டது.

Tags: indian cricket teamU19worldcup
ShareTweetSendShare
Previous Post

நீங்கள் மலிவான மனிதரா டி.ஆர். பாலு? – அண்ணாமலை

Next Post

புரோ கபடி : தமிழ் தலைவாஸ் வெற்றி!

Related News

500 சதவீதி வரிவிதிப்பு அச்சம் – பின்னலாடை துறைக்கு சலுகை வழங்க கோரிக்கை!

முக்கிய சக்தியாக உருவெடுக்கும் ஜமாத்-இ-இஸ்லாமி – வங்கதேசத்தில் ஆட்சியை பிடிக்கத் துடிக்கும் இஸ்லாமிய குழுக்கள்

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

Load More

அண்மைச் செய்திகள்

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies