நாடு முழுவதும் 82 வந்தே பாரத் இரயில்கள் இயக்கப்படுவதாக, மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதும் வந்தே பாரத் இரயில் அறிமுகப்படுத்தப்பட்டு, பல்வேறு மாநிலங்களை இணைக்கும் வகையில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த இரயிலில் பாதுகாப்பு, வேகம், சொகுசான பயணம் இருப்பதால், மக்கள் அதிகளவில் விரும்பி பயணம் செய்கின்றனர். இந்நிலையில், நாடு முழுவதும் 82 வந்தே பாரத் இரயில்கள் இயக்கப்படுவதாக மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கூறியதாவது, ஜனவரி மாதம் 31-ஆம் தேதி நிலவரப்படி, 82 வந்தே பாரத் இரயில்கள் இந்திய இரயில்வேயில் இயக்கப்படுகின்றன.
மேலும், டெல்லி – மும்பை மற்றும் டெல்லி – ஹவுரா வழித்தடங்களில் இரயிலின் வேகத்தை மணிக்கு 160 கிலோ மீட்டருக்கு அதிகரிக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
வந்தே பாரத் இரயில்களில், மேம்பட்ட பாதுகாப்பு அம்சங்கள், தானியங்கிக் கதவுகள், சாய்வு இருக்கைகள், எக்ஸிகியூட்டிவ் வகுப்பில் சுழலும் இருக்கைகள், ஒவ்வொரு இருக்கைக்கும் மொபைல் சார்ஜிங் போன்ற பயணிகள் வசதிகளும் உள்ளன. மேலும், வந்தே பாரத் இரயில்கள் மேம்படுத்தப்பட்ட கவச் அமைப்புடன் இணைக்கப்பட்டுள்ளது என்று கூறினார்.