இந்தியாவில் நடைபெற்று வரும் புரோ கபடி தொடரில் நேற்றையப் போட்டியில் புனேரி பல்டன் மற்றும் ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணிகள் வெற்றி பெற்றது.
இந்தியாவில் உள்ள மாநிலங்களுக்கிடையே நடைபெறும் கபடி லீக் தொடரில் மொத்தம் 12 அணிகள் பங்குபெற்று விளையாடி வருகின்றன.
பெங்கால் வாரியர்ஸ், பெங்களூரு புல்ஸ், தபாங் டெல்லி கே.சி, குஜராத் ஜெயண்ட்ஸ், ஹரியானா ஸ்டீலர்ஸ், ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ், பாட்னா பைரேட்ஸ், புனேரி பல்டன், தமிழ் தலைவாஸ், தெலுங்கு டைட்டன்ஸ், யு மும்பா மற்றும் உ.பி. யோதாஸ் ஆகிய அணிகள் பங்குபெற்றுள்ளன.
இந்நிலையில் நேற்று இரண்டு போட்டிகள் நடைபெற்றது. முதல் போட்டி டெல்லியில் இரவு 8 மணிக்கு நடைபெற்றது. இதில் புனேரி பல்டன் – பெங்களூரு புல்ஸ் அணிகள் விளையாடின.
விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் புனேரி பல்டன் அணி 40-31 என்ற புள்ளி கணக்கில் பெங்களூரு புல்ஸ் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.
மற்றொரு போட்டி டெல்லியில் இரவு 9 மணிக்கு நடைபெற்றது. இதில் தபாங் டெல்லி – ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணிகள் விளையாடின.
பரபரப்பாக நடைபெற்ற இந்தப் போட்டியில் ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணி 27 – 22 என்ற புள்ளி கணக்கில் தபாங் டெல்லி அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.