பாஜகவை நாடிவரும் அதிமுக தொண்டர்கள்!
Sep 24, 2025, 09:27 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பாஜகவை நாடிவரும் அதிமுக தொண்டர்கள்!

- பா.ஜ.க பிரச்சாரப் பிரிவு மாநிலதலைவர் குமரிகிருஷ்ணன்!

Web Desk by Web Desk
Feb 9, 2024, 03:52 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

அதிமுக தலைமைக்கு அரசியல் அனுபவம் போதவில்லை, இவர்கள் தேடிப்போன சமூகமும் இப்போது பாஜக பக்கம்தான் நகர்ந்துக் கொண்டிருக்கிறது எனப் பா.ஜ.க பிரச்சாரப் பிரிவு மாநிலதலைவர் குமரிகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவில், 

அதிமுகவினர் பாஜக கூட்டணியில் வரவேண்டும் என்று எந்த பாஜகவின் தலைவரும் கருத்து சொன்னதில்லை!

ஆனால் அதிமுகவின் ஒரிரு தலைவர்கள் மட்டும் பாஜகவுடன் கூட்டணி இல்லை! இல்லை! என்று சொல்லிக்கோண்டே இருக்கிறார்கள்! பொதுக்கூட்டங்களில் கூட மைக் பிடித்து, நாங்கள் பாஜகவுடன் கூட்டனியில் இல்லை! நாங்கள் கூட்டனியில் இல்லை என்று மீண்டும் மீண்டும் சொல்லி வருகிறார்கள்!

கல்யாண பரிசு என்னும் ஒரு பழைய சினிமாவில் கதாநாயகி வீட்டில் இருப்பவர்களிடம் சொல்வதுபோல், ஆனால் உரத்த குரலில் “நான் பள்ளிக்கூடம் போகிறேன்” என்று சொல்லுவாள்! அது வீட்டில் இருப்பவர்களுக்கு சொல்வதல்ல, மேல் மாடியில் குடியிருக்கும் அவளது காதலனுக்கு சொல்வது!

அதுபோல, குறிப்பிட்ட சமூகத்தவர்களின் காதுகளில் விழவேண்டும் என்பதற்காக “நாங்கள் பாஜக கூட்டணியில் இல்லை” என உரக்க சொல்லிக் கொண்டிருக்கிறார்கள் ஓரிரு அதிமுக தலைவர்கள்!

”அப்படி சொன்னால்தான் அந்த குறிப்பிட்ட சமூகத்தவர்கள் எங்களிடம் வருவார்கள், அதனால்தான் நாங்கள் பாஜகவுடன் கூட்டணியை உடைத்துக்கொண்டோம்!”- என்றுகூட ரகசியத்தை பல இடங்களில் போட்டுடைத்தும் வருகிறார்கள்!

பாஜக கூட்டணியில் இருந்து வெளியேறியதாக அரிவித்த அடுத்த நாளில் அந்த குறிப்பிட்ட சமூகத்தவர்வர்கள் மத்தியில் போய் நின்று, மைக் பிடித்து, “நான் வந்துவிட்டேன், இப்போது சந்தோசமா?” என்று கேட்டார் அதிமுகவின் தலைவர்!
ஆனால் இவர் காதலிப்பதாக சொல்லும் அந்த குறிப்பிட்ட சமூகத்தவர்கள் இப்போது யூடேன் போட்டு பாஜக பக்கம் வருகிறார்கள்! இப்போது இலவு காத்த கிழியாக மாறிவிட்டார் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள்!

தேர்தல் என்று வந்தால் எல்லா கட்சியினரும், எங்கள் கட்சியின் கதவுகள் திறந்தே இருக்கிறது, எங்களின் கொள்கைகளில் உடன்பாடு உள்ளவர்கள், எங்களின் ஆட்சியை விரும்புகிறவர்கள் எங்களோடு வந்து சேருங்கள் என அழைப்பு விடுப்பது வழக்கம்!
அந்த வகையில் பாரதிய ஜனதா கட்சியின் உள்துறை அமைச்சர் அமித்ஷா அவர்கள் ஒரு அழைப்பினை அனைவருக்குமாக விடுத்தார்! அது பொதுவான அழைப்புதான்!

ஆனால், தேர்தல் கூட்டணிக்காக ஒரு குழுவை அமைத்துக்கொண்டு, கூட்டனிக்காக யாராவது வருவார்களா? என எதிர்பார்த்து, யாரும் வராத காரணத்தால், ஏமாந்து, ஏமாந்து, வெறுங்கடையில் டீ ஆற்றிக்கொண்டிருக்கும் அதிமுகவின் ஒரு தலைவர், ”அமித்ஷா வேண்டுமானால் அவர்களின் கதவை திறந்து வைத்து எங்களை கூட்டணிக்கு அழைக்கலாம், ஆனால் நாங்கள் பாஜகவுக்கான கூட்டணி கதவை அடைத்து விட்டோம்,” என அறிக்கை விட்டார்!

ஆனால் அதிமுகவினர் ஓடோடி வந்து பாஜகவின் கதவுகளை தட்டுகிறார்கள்! நாங்கள் பாஜகவுடன் வருகிறோம் என்கிறார்கள்! பாஜகவின் மாநில தலைவரும் மக்கள் தலைவருமான அண்ணாமலை அவர்களின் நடை பயணத்தில் அனைத்து கட்சியினரும் பெரும் கூட்டமாக கலந்துகொண்ட போதிலும், அந்த மாற்றுக்கட்சி கூட்டத்தில் பெரும்பங்கு கூட்டம், அதிமுக வாக்காளர்கள் கூட்டம் என பத்திரிக்கையாளர்கள் சொல்கிறார்கள்!

7-2-2024 அன்று அதிமுகவின் முன்னால் சட்டமன்ற உறுப்பினரும் மூத்த தலைவர்களுமான 16 பிரபலங்கள் டெல்லி சென்று, பாஜக தலைவர்கள் முன்னிலையில் பாஜகவில் சேர்ந்தார்கள்!

அதிமுகவின் எந்த கதவு அடைக்கப்பட்டது? இந்த அனுபவம் மிக்க அதிமுகவின் முன்னால் சட்டமன்ற தலைவர்களான, செங்கோட்டையன், கே.பி. முனுசாமி போல் தகுதி உள்ள அதிமுகவின் தலைவர்கள் எந்த கதவை திறந்துக்கொண்டு வந்து, பாஜகவின் கதவுகளை தட்டினார்கள் என அரசியல் வல்லுனர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்!

அதிமுக தலைமைக்கு அரசியல் அனுபவம் போதவில்லை! இவர்கள் தேடிப்போன சமூகமும் இப்போது பாஜக பக்கம்தான் நகர்ந்துக் கொண்டிருக்கிறது, இவர்களின் தொண்டர்களும் இப்போது நடைபயணத்தின் பக்கம் நகர்ந்துக் கொண்டிருக்கிறார்கள்! ஓரிரு தலைவர்கள் மட்டும் “நாங்கள் கதவை அடைத்துவிட்டோம்” என்று யாருக்கோ குரல் கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள்!

மற்ற அதிமுகவின் விவரமான தலைவர்களிடம் இருந்து எவ்வித குரலும் வெளிப்படவில்லை! இந்த, அதிமுகவின் சூழலை பார்க்கும்போது, “என்னவோ நடக்குது அதிமுகவிலே” என்றுதான் பாடத்தோன்றுகிறது!

”அயோத்தியில் கட்டாமல் வேறு எங்கு ராமர் கோயில் கட்டமுடியும்?” என்று அதிமுகவின் புரட்சி தலைவி அம்மா கேட்ட கேள்வி, இன்றுவரை அதிமுக தொண்டர்களின் காதுகளில் ஒலித்துக்கொண்டிருப்பதாக சொல்லப்படுகிறது! திரு.எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் தனது நெற்றியில் இருந்த திருநீற்றை அழித்துவிட்டதை, அதிமுக தொண்டர்கள் ரசிக்கவில்லை என்றும் சொல்லப்படுகிறது!

இந்து மதத்திற்கு எதிரான திராவிட கழகத்திலும் திமுகவிலும் பழகியபோதும், மூகாம்பிகை ஆலயத்தில் தன்னை ஒப்புவித்தவர் அல்லவா புரட்சித்தலைவர்!, என்று அதிமுக தொண்டர்கள் முனுமுனுப்பதாக சொல்லப்படுகிறது!

மொத்தத்தில் அதிமுகவின் தலைவர்களில் ஓரிருவர் தொண்டர்களை சரியான பாதையில் வழிநடத்த தவறிவிட்டதாக அரசியல் நிபுணர்கள் கருதுகிறார்கள்! எனவேதான் கூட்டம் கூட்டமாக அதிமுகவின் தொண்டர்களும் தலைவர்களும், மக்கள் பிரதிநிதிகளும் பாஜகவை நோக்கி நகர்வதாக சொல்லப்படுகிறது!

“தீய சக்தியாக இருந்த திமுக பங்காளியாக மாறியது எப்படி?” என்று தற்போதைய தலைமையை பார்த்து அதிமுக தொண்டர்கள் கேட்பது நம் காதுகளில் விழுகிறது!
பிரதமர் நரேந்திரமோடியின் தேச பக்தியும்,சேவையும்,மக்கள்நல திட்டங்களும், தமிழக பாஜக தலைவர் மக்கள் தலைவர் அன்ணாமலை அவர்களின் சுறுசுறுப்பும் பேராற்றலும் தங்களை பெரிதும் கவர்ந்துவிட்டதாக அவர்கள் சொல்கிறார்கள்! ”உலக புகழ் மிக்க மாபெரும் தலைவரான நமது பிரதமர் நரேந்திரமோடிக்கு ஆதரவாக செயல்பட வேண்டியதுதான் நமது தலையாய முதல் கடமையாகும்”, என்கின்றனர் சாரைசாரையாக பாஜகவை நோக்கி வரும் அதிமுகவினர்!

அரசியலில் நிரந்தரம் என்று எதுவும் இல்லை! புரட்சித்தலைவரும் புரட்சி தலைவியும் என்ன சொன்னார்களோ அதைத்தான் நாங்கள் செய்கிறோம் என்று, நடை பயணத்தில் என்னை சந்தித்த அதிமுக தொண்டர் ஒருவர் என்னிடம் சொன்னார்! எனத் தெரிவித்துள்ளார்.

Tags: kumari krishnan article
ShareTweetSendShare
Previous Post

அரசியலுக்கு அப்பாற்பட்ட முடிவு : பாரத ரத்னா விருது தொடர்பாக ராஜ்நாத்சிங் கருத்து!!

Next Post

திமுக அரசின் மீது பொதுமக்கள் கடுங்கோபத்தில் உள்ளனர்! – அண்ணாமலை

Related News

குழந்தைகளுக்கு புதிய கதை சொல்லும் பாகிஸ்தான் : ஆபரேஷன் சிந்தூரில் வென்றதாக பொய் கூறும் பாகிஸ்தான்!

குப்பை நகரமாகும் “ஐடி ஹப் சிட்டி” : மாநில அரசு மீது அதிருப்தியில் பெங்ளூருவாசிகள்

H-1B விசாவில் லாட்டரி நடைமுறை இனி ரத்து : அதிக பாதிப்புகளை சந்திக்கவுள்ள இந்திய ஊழியர்கள்!

மருத்துவ உலகில் சூட்டை கிளப்பிய டிரம்பின் கூற்று : TYLENOL மருந்தால் ஆட்டிசம் பாதிப்பா?

ஆயுத பூஜைக்கு தயாராகும் “பொரி” – குவியும் ஆர்டர்கள், குஷியில் தொழிலாளர்கள்!

சவுதியை ஆட்டிப்படைக்கும் மெக்கா கிளர்ச்சி : பாக்., உடனான சவுதியின் ஒப்பந்தம் சொல்வது என்ன?

Load More

அண்மைச் செய்திகள்

ஜிஎஸ்டி வரிக்குறைப்பினால் அனைத்துத் தரப்பினருக்கும் பலன் – நயினார் நாகேந்திரன்

மத்திய அரசின் திட்டங்களில் ஒன்றையாவது முதலமைச்சர் ஸ்டாலின் வரவேற்று பேசி இருக்கிறாரா? – நயினார் நாகேந்திரன்

பெருங்குடல் புற்றுநோய் மீண்டும் வருவதைத் தடுக்க உதவும் ஆஸ்பிரின்!

அர்ஜென்டினாவில் வாயில் முதலை எலும்புடன் கூடிய புதிய டைனோசர் கண்டுபிடிப்பு!

உத்தரப் பிரதேசம் : மாவட்ட கல்வி அலுவலரை பெல்டால் தாக்கிய பள்ளி தலைமை ஆசிரியர்!

சீமானும் விஜயலட்சுமியும் ஒருவருக்கொருவர் மன்னிப்பு கேட்டுப் பிரச்னையை முடிவுக்குக் கொண்டுவர வேண்டும் – உச்சநீதிமன்றம் உத்தரவு!

சென்னை : வணிக வளாகங்களுக்கு சென்ற நயினார் நாகேந்திரன்!

நெல்லை – சென்னை வந்தே பாரத் 20 பெட்டியுடன் இன்று முதல் சேவை துவக்கம்!

மேற்குவங்கம் : தேங்கிய மழைநீரில் பழுதாகி நின்ற ரோல்ஸ் ராய்ஸ் கார்!

அமெரிக்க கிரிக்கெட் வாரியத்தை இடைநீக்கம் செய்த ஐசிசி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies