அறிவியல் தொடர்பான கூட்டம் – மத்திய அமைச்சர் பங்கேற்பு!
Jan 14, 2026, 10:30 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

அறிவியல் தொடர்பான கூட்டம் – மத்திய அமைச்சர் பங்கேற்பு!

Murugesan M by Murugesan M
Feb 11, 2024, 07:28 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

அறிவியல் தொடர்பான பல்வேறு அமைச்சகங்கள் மற்றும் துறைகளின் மாதாந்திர கூட்டுக் கூட்டத்தில் மத்திய அறிவியல்  மற்றும் தொழில்நுட்பத்துறை இணையமைச்சர் ஜிதேந்திர சிங் பங்கேற்றார்.

டெல்லியில் அறிவியல் தொடர்புடைய பல்வேறு அமைச்சகங்கள் மற்றும் துறைகளின் மாதாந்திர கூட்டுக் கூட்டத்தில் இன்று மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பதுறை இணையமைச்சர் ஜிதேந்திர சிங் பங்கேற்றார். மாணவர்களின் விண்வெளித் திறன்களை மேம்படுத்த கடந்த மாதம் நடத்தப்பட்ட விண்வெளி ஹேக்கத்தான் குறித்து அவர் ஆய்வு செய்தார்.

கடந்த  ஜனவரி மாதம் 17 முதல் 20 வரை  ஹரியானாவின் ஃபரிதாபாத்தில் இந்திய சர்வதேச அறிவியல் விழா – 2023  நடைபெற்றது. அதன் ஒரு பகுதியாக விண்வெளி தொடர்பாக 30 மணி நேர ஹேக்கத்தான் ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த ஹேக்கத்தான் திட்டத்திற்கு கிடைத்த பெரும் வரவேற்பு குறித்து மகிழ்ச்சி தெரிவித்த அமைச்சர், ஒரு மாத காலத்தில் 4,000-க்கும் மேற்பட்ட குழுக்கள் பதிவு செய்யப்பட்டதற்கு பாராட்டு தெரிவித்தார். ஃபரிதாபாத்தில் நடந்த இறுதிச் சுற்றுப் போட்டிக்கு 57 அணிகள் தேர்வு செய்யப்பட்டன.

அறிவியல் தொடர்பான பல்வேறு அமைச்சகங்கள் மற்றும் துறைகளின் உயர்மட்ட கூட்டுக் கூட்டத்தில் அறிவியல் மற்றும் தொழில்நுட்பம், உயிரி  தொழில்நுட்பம், இந்திய தொழிலக ஆராய்ச்சிக் கவுன்சில், புவி அறிவியல், விண்வெளி மற்றும் அணுசக்தித் துறை ஆகியவற்றின் பிரதிநிதிகள் பங்கேற்றனர். பல்வேறு அரசுத் துறைகள் மற்றும் நிறுவனங்களில் ஆராய்ச்சி விஞ்ஞானிகளின் பணி இடங்கள் குறித்தும் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.

பல்வேறு அறிவியல் பிரிவுகளிடையே ஒருங்கிணைந்த அணுகுமுறையை  உருவாக்க ஜிதேந்திர சிங் தொடங்கிய அறிவியல் செயலாளர்களின் மாதாந்திர ஆய்வுக்  கூட்டத்தின் ஒரு பகுதியாக இன்றைய கூட்டம் நடைபெற்றது.

மத்திய அரசின் முதன்மை அறிவியல் ஆலோசகர் டாக்டர் அஜய் குமார் சூட், அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை, உயிரி தொழில்நுட்பத் துறை, புவி அறிவியல் துறை, அணுசக்தித் துறை, இஸ்ரோ, சிஎஸ்ஐஆர் உள்ளிட்ட அறிவியல் சார்ந்த அமைச்சகங்கள், துறைகள் மற்றும் அமைப்புகளின் மூத்த அதிகாரிகள் இந்த மாநாட்டில் கலந்து கொண்டனர்.

Tags: jitendra singhMinister for Science & Technologymonthly joint meetingScience Ministries and Departments
ShareTweetSendShare
Previous Post

‘SWATI’ தளம் தொடக்கம்!

Next Post

கோவை கார் குண்டுவெடிப்பு! – 21 இடங்களில் சோதனை; 4 பேர் கைது!

Related News

500 சதவீதி வரிவிதிப்பு அச்சம் – பின்னலாடை துறைக்கு சலுகை வழங்க கோரிக்கை!

முக்கிய சக்தியாக உருவெடுக்கும் ஜமாத்-இ-இஸ்லாமி – வங்கதேசத்தில் ஆட்சியை பிடிக்கத் துடிக்கும் இஸ்லாமிய குழுக்கள்

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

Load More

அண்மைச் செய்திகள்

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies