உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை விவகாரம் – சர்ச்சையில் தமிழகம்!
Mar 15, 2026, 09:48 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை விவகாரம் – சர்ச்சையில் தமிழகம்!

Murugesan M by Murugesan M
Feb 13, 2024, 07:13 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கேரளா மாநிலம் பாலக்காட்டைச் சேர்ந்த மணிகண்டன் என்பவர் கடந்த 2018-ம் ஆண்டு மூளைச்சாவு அடைந்தார். அவரது உடல் உறுப்புகள் குடும்ப உறுப்பினர்கள் அனுமதியுடன் தானம் செய்யப்பட்டன.

ஆனால், மணிகண்டன் உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை விவகாரத்தில் முறைகேடு நடைபெற்றுள்ளதாக அவரது குடும்பத்தினர் புகார் தெரிவித்தனர். அதன்பேரில், அன்றைய கேரள முதல்வர் பினராயி விஜயன், அன்றைய தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு விரிவாக ஒரு கடிதம் எழுதினார்.

அதன்பேரில், இந்த விவாகரத்தில் சிக்கியுள்ள சேலத்தில் உள்ள ஒரு பிரபல மருத்துவமனை மற்றும் சென்னையில் இரண்டு கார்ப்பரேட் மருத்துவமனைகள் குறித்து விரிவான விசாரணை நடத்தி, அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என மருத்துவம் மற்றும் ஊரகச் சுகாதரப் பணிகள் இயக்குநர் உத்தரவிட்டார்.

அதன்பேரில், இந்த சம்பவத்தில் தொடர்புடைய டாக்டர்கள், மருத்துவ ஊழியர்கள், பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் உள்ளிட்டோரிடம் விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

ஆனால், இந்த வழக்கை நிபுணர் குழு விசாரிக்க வேண்டும் என அன்றைய மருத்துவ மற்றும் ஊரக சுகாதரப் பணிகள் இயக்குநர், மருத்துவக் கல்வி இயக்குருக்குக் கடிதம் எழுதியிருந்தார். அதன்பேரில், நிபுணர் குழு அமைக்கப்பட்டது. நிபுணர் குழுவும், விசாரணை நடத்தியும், அலசி ஆராய்ந்தும் ஒரு அறிக்கையைத் தாக்கல் செய்தது.

இதனிடையே, இந்திய நோயாளிகளைப் புறக்கணித்துவிட்டு, லெபனான் மற்றும் இஸ்ரேல் நாட்டைச் சேர்ந்த இரண்டு நபர்களுக்கு உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்தது தெரிய வந்துள்ளது. குறிப்பாக, அவர்கள் இரண்டு பேருக்கும், ஒருவருக்கு நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சையும், மற்றொரு நபருக்கு இருதயம் மாற்று அறுவை சிகிச்சையும் செய்யப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.

இந்த விவகாரத்தில், முதல் முறையாக அமைக்கப்பட்ட குழுவினர் மற்றும் இரண்டாவதாக அமைக்கப்பட்ட சிறப்பு நிபுணர் குழு தாக்கல் செய்த இரண்டு அறிக்கைகளுக்கும் இடையே மிகப் பெரிய முரண்பாடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதுவும் சர்ச்சைக்கு உள்ளாகியுள்ளது.

இந்த நிலையில், இந்த விவகாரம் தற்போது, மனித உரிமை ஆணையத்தின் பார்வைக்கு சென்றுள்ளது. சர்சைக்குரிய டாக்டர்கள், ஊழியர்கள் மற்றும் பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் உள்ளிட்டோரை நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இதனால், இந்த விவகாரம் சூடு பிடித்துள்ளது.

இதனிடையே, இந்த ஒரு சம்பவம் மட்டுமல்லாமல், ஒவ்வொரு உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை குறித்தும் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டப்பட்டுள்ளது. இந்தியாவில் கடந்த ஆண்டைக்காட்டிலும், உயிர் காக்கும் மனித உறுப்புகளைப் பெறுவது 56 சதவீதம் அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags: Organ transplant issue - Tamil Nadu in controversy!
ShareTweetSendShare
Previous Post

தேர்தல் ஆணையர்கள் நியமனம் தொடர்பான புதிய சட்டத்திற்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மீண்டும் மறுத்துவிட்டது!

Next Post

புரோ கபடி : வெற்றி பெறுமா தெலுங்கு டைட்டன்ஸ்!

Related News

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

சமையல் எரிவாயு குறித்த அச்சம் வேண்டாம் – மத்திய அரசு

திமுக மாணவரணி செயலாளர் பொறுப்பில் இருந்து ராஜீவ்காந்தி திடீர் விடுவிப்பு!

தூத்துக்குடி கொடூரம்.. அமைச்சர் கீதா ஜீவன், கனிமொழி எம்பி ராஜினாமா செய்ய வேண்டும் – பாஜக மாநில துணை தலைவர் வலியுறுத்தல்

Load More

அண்மைச் செய்திகள்

தூத்துக்குடியில் மாணவிக்கு நேர்ந்த கொடூரம் – 4 நாட்களாகியும் குற்றவாளிகளை கைது செய்ய முடியாமல் திணறும் போலீசார்..பொதுமக்கள் சாலைமறியல்!

மதுரை விமான நிலையத்தில் புதிய வான் கட்டுப்பாட்டு கட்டிடத்தை திறந்து வைத்த மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு!

AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எதிர்க்கட்சிகள் பொய் பிரச்சாரம் செய்கிறது – மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் குற்றச்சாட்டு

ஷில்லாங் – சில்சார் இடையே அதிவேக 4 வழித்திட்டத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்!

சண்முக நதி கரையோரம் மலைபோல் தேங்கும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு!

மலைக்கோயிலில் இந்து முன்னணி சார்பில் தூய்மை பணிகள்!

தூத்துக்குடி கொடூரம் -அதிமுக சார்பில் நீதி வேண்டி வாயில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம்

காதணி விழாவுக்கு ரூ.15 லட்சம் மதிப்பில் அத்தை சீர்வரிசை!

ஆண்டிபட்டி அருகே முற்றிலும் இல்லாமல் போன வைகை அணையின் நீர்வரத்து!

மத்திய விமான போக்குவரத்து அமைச்சருக்கு பாரம்பரிய வரவேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies