உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை விவகாரம் – சர்ச்சையில் தமிழகம்!
Oct 6, 2025, 11:43 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை விவகாரம் – சர்ச்சையில் தமிழகம்!

Web Desk by Web Desk
Feb 13, 2024, 07:13 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கேரளா மாநிலம் பாலக்காட்டைச் சேர்ந்த மணிகண்டன் என்பவர் கடந்த 2018-ம் ஆண்டு மூளைச்சாவு அடைந்தார். அவரது உடல் உறுப்புகள் குடும்ப உறுப்பினர்கள் அனுமதியுடன் தானம் செய்யப்பட்டன.

ஆனால், மணிகண்டன் உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை விவகாரத்தில் முறைகேடு நடைபெற்றுள்ளதாக அவரது குடும்பத்தினர் புகார் தெரிவித்தனர். அதன்பேரில், அன்றைய கேரள முதல்வர் பினராயி விஜயன், அன்றைய தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு விரிவாக ஒரு கடிதம் எழுதினார்.

அதன்பேரில், இந்த விவாகரத்தில் சிக்கியுள்ள சேலத்தில் உள்ள ஒரு பிரபல மருத்துவமனை மற்றும் சென்னையில் இரண்டு கார்ப்பரேட் மருத்துவமனைகள் குறித்து விரிவான விசாரணை நடத்தி, அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என மருத்துவம் மற்றும் ஊரகச் சுகாதரப் பணிகள் இயக்குநர் உத்தரவிட்டார்.

அதன்பேரில், இந்த சம்பவத்தில் தொடர்புடைய டாக்டர்கள், மருத்துவ ஊழியர்கள், பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் உள்ளிட்டோரிடம் விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

ஆனால், இந்த வழக்கை நிபுணர் குழு விசாரிக்க வேண்டும் என அன்றைய மருத்துவ மற்றும் ஊரக சுகாதரப் பணிகள் இயக்குநர், மருத்துவக் கல்வி இயக்குருக்குக் கடிதம் எழுதியிருந்தார். அதன்பேரில், நிபுணர் குழு அமைக்கப்பட்டது. நிபுணர் குழுவும், விசாரணை நடத்தியும், அலசி ஆராய்ந்தும் ஒரு அறிக்கையைத் தாக்கல் செய்தது.

இதனிடையே, இந்திய நோயாளிகளைப் புறக்கணித்துவிட்டு, லெபனான் மற்றும் இஸ்ரேல் நாட்டைச் சேர்ந்த இரண்டு நபர்களுக்கு உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்தது தெரிய வந்துள்ளது. குறிப்பாக, அவர்கள் இரண்டு பேருக்கும், ஒருவருக்கு நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சையும், மற்றொரு நபருக்கு இருதயம் மாற்று அறுவை சிகிச்சையும் செய்யப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.

இந்த விவகாரத்தில், முதல் முறையாக அமைக்கப்பட்ட குழுவினர் மற்றும் இரண்டாவதாக அமைக்கப்பட்ட சிறப்பு நிபுணர் குழு தாக்கல் செய்த இரண்டு அறிக்கைகளுக்கும் இடையே மிகப் பெரிய முரண்பாடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதுவும் சர்ச்சைக்கு உள்ளாகியுள்ளது.

இந்த நிலையில், இந்த விவகாரம் தற்போது, மனித உரிமை ஆணையத்தின் பார்வைக்கு சென்றுள்ளது. சர்சைக்குரிய டாக்டர்கள், ஊழியர்கள் மற்றும் பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் உள்ளிட்டோரை நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இதனால், இந்த விவகாரம் சூடு பிடித்துள்ளது.

இதனிடையே, இந்த ஒரு சம்பவம் மட்டுமல்லாமல், ஒவ்வொரு உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை குறித்தும் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டப்பட்டுள்ளது. இந்தியாவில் கடந்த ஆண்டைக்காட்டிலும், உயிர் காக்கும் மனித உறுப்புகளைப் பெறுவது 56 சதவீதம் அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags: Organ transplant issue - Tamil Nadu in controversy!
ShareTweetSendShare
Previous Post

தேர்தல் ஆணையர்கள் நியமனம் தொடர்பான புதிய சட்டத்திற்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மீண்டும் மறுத்துவிட்டது!

Next Post

புரோ கபடி : வெற்றி பெறுமா தெலுங்கு டைட்டன்ஸ்!

Related News

கரூர் : விஜய் பிரசார வாகன ஓட்டுநர், இருசக்கர வாகன ஓட்டிகள் மீது வழக்கு!

12 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு!

ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்!

தமிழக அரசு கேபிள் டிவியில் தமிழ் தொலைக்காட்சிகள் இடம்பெறுவதில் பாரபட்சம் காட்டக்கூடாது – பாஜக மாநில செய்தி தொடர்பாளர்

பிஞ்சு குழந்தைகளின் உயிரை குடித்த “கோல்ட்ரிப்” – தரமற்ற மருந்துக்கு தடை விதித்த தமிழகம், கேரளா!

தமிழ் ஜனம் டிவியை தடை செய்ய திமுக அரசுக்கு எந்த அருகதையும் இல்லை : கே.பி.ராமலிங்கம்

Load More

அண்மைச் செய்திகள்

ரோகித் கேப்டனாக நியமிக்கப்படாதது அதிர்ச்சி அளிக்கிறது – ஹர்பஜன் சிங்

பயங்கரவாதத்திற்கு கனடாவில் இருந்து நிதியுதவி – பின்னணியில் பாக். உளவு அமைப்பு!

சரணாலயம் அமைக்கிறோம் என்ற பெயரில் பழங்குடியின மக்களின் வாழ்வுரிமை பறிக்கப்படுகிறது – பிருந்தா காரத்

திமுக அரசு மீது சந்தேகம் எழுகிறது : எடப்பாடி பழனிசாமி

சென்னை திரும்பிய மக்களால் ஜிஎஸ்டி சாலையில் போக்குவரத்து நெரிசல்!

சென்னையில் வரலாறு காணாத அளவுக்கு உச்சம் தொட்ட தங்கம், வெள்ளியின் விலை!

முதல் முறையாக இந்தியா வரும் தலிபான் தலைவர் : இந்தியா புது வியூகம் – பாகிஸ்தானுக்குத் தலைவலி!

தண்ணீர் நெருக்கடி – மின்சார பற்றாக்குறை – திணறும் ஈரான் ஆட்சி – மாற்றத்துக்கு போராடும் மக்கள்!

அமெரிக்காவின் இரட்டை நிலைப்பாடு : தோலுரித்துக் காட்டிய ரஷ்ய அதிபர் புதின்!

ஆன்மிக வாழ்வுக்கு புது இலக்கணம் வகுத்த வள்ளலார் – சிறப்பு தொகுப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies